மழை

“மழை” கவிதை (மரபு வகை)
—————————-
(Downtown ரயில் பயண கவிமாலை நிகழ்வுக்கு எழுதியது)

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

தெறித்தோய்ந்த மழையதுவோ நின்ற பின்னும்
தெருவினிலே பாய்ந்தவெள்ளம் வடிய வில்லை
எரிப்பதற்கு மின்சாரம் அங்கு மில்லை
எரியூட்ட காய்ந்தவிற கெங்கு மில்லை
வெறித்திருந்த மயானத்தில் தோண்ட உள்ளே
வெறும்நீராய்; புதைத்திடவும் முடிய வில்லை
மரித்தவரை வீட்டில்வைத் தழவும் கூட
மனிதர்கள் யாருமிங்கே அருகில் இல்லை!

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல் அறுசீர் விருத்தம்! வீடமைப்பு பேட்டை! அடுக்குமாடி வீட மைத்து அத்தனையும் அருகில் வைத்து இடுக்கணின்றி சொகுசாய் வாழ இல்லமுண்டு அனைவ ருக்கும் கெடுதலில்லா சுற்றுச் சூழல் கேடில்லா பேட்டை உண்டு தொடுத்தநல்ல பூப்போல் மக்கள் தோழமையாய் வாழ்வர் இங்கு (1)