குதிரைப் பந்தயம்

குதிரைப் பந்தயம் நடந்த சாலையில் உள்ள ரஜினி படத்தின் பெயர் கொண்ட ஒரு விடுதி, ஆணல்ல….(எந்த இடம் கண்டுபிடிங்க பார்ப்போம்..🙂)

இது எந்த இடம் என்று கண்டுபிடித்து அங்கே போக வேண்டும்….

இப்படி புதிரங்கத்துடன் நடந்த ‘தேக்கா பேட்டை வேட்டை’ ஒரு கலகலப்பான கலக்கல் போட்டி.

மீடியார்ப்கார்ப்பின் ‘செய்தி’ பிரிவு நடத்திய இந்த போட்டியின் ஏற்பாட்டுக்குழுவுக்கு என் பாராட்டுகள், சிறப்பாக கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் நேரத்துல முடிச்சிட்டாங்க. வேறு ஒரு வேலை இருந்ததால் பரிசு அறிவிப்பு நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொள்ள முடியவில்லை.

சரி, உங்களுக்கு பரிசு கிடைச்சுசானு கேக்குறீங்களா? நாங்க ‘டாப் 8’ல வந்தோம்….

தெரியும்….எத்தனை குழுக்கள் கலந்துகிட்டாங்கனு தானே கேக்குறீங்க…

மொத்தம் 8 குழுக்கள் கலந்துகிட்டாங்க, அதுல நாங்க ‘டாப் 8’, ஆனா முதல் மூனுல இல்ல:)

எப்படிங்க, வர முடியும்? நம்ம ‘பிக் பாஸ்’ ஸ்டைல்ல, பூ கட்ட சொல்றாங்க, பெண்கள் முடியில தலை பின்ன சொல்றாங்க(அட சௌரி முடி தாங்க கொடுத்தாங்க, உடனே கற்பனைல மிதக்காதீங்க..). எங்க குழுவில நாலும் ஆம்பளைங்க…முன்ன பின்ன செத்தாதான சுடுகாடு தெரியும்…
ஒரு கூடை சாமந்திபூவ முன்னால வச்சு, ஒரு சின்ன நூல கொடுத்து கட்ட சொன்னாங்க. அது எப்படினு கட்டனும்னு ஒரு காணொளி வேற போட்டாங்க….இரண்டு நிமிஷத்துல, நான் எடுக்கவோ, தொடுக்கவோனு பூ கட்டி முடிக்க, அத எடுத்து உதறி பார்த்து என்னங்க எல்லாம் விழுந்திருச்சுனு ஏற்பாட்டாளர் கேட்க, ஆஹா ‘வடை போச்சேனு’ பார்க்க, அந்த ‘டாஸ்குக்கு’ ‘மார்க்’ போச்சு, நான் கட்டின அழகான பூமாலை, பூச்செண்டாக மாறிடுச்சு.
சரி விட்டத பிடிக்கலாம்னு அடுத்த ‘ஸ்பாட்’ல போய் பார்த்தா, ஒரு முடிய கொடுத்து தலைபின்ன சொன்னாங்க, இதெல்லாம் பெண்களே மறந்து போய் பல காலமாச்சேனு, இத சொதப்ப வேணாம்னு, குழு நண்பர்கள பின்னட்டும்னு சும்மா இருந்தேன்…இருந்தாலும் மனசு கேக்காம, நானும் ஒரு முடிய எடுத்து பின்ன ஆரம்பிச்சு அருமையா 5 பின்னல் பின்னிடேங்க, என்ன ‘லேட்டா’ ஆரம்பிச்சதால ‘முடி’க்க முடியல, இங்கேயும் மார்க் போச்சு.

அப்புறம் எங்கிட்டு முதல்ல வர்றது? ஆனா புதிர பார்த்து அந்தந்த இடங்களுக்கு முதல்ல போயிட்டோம். என்ன, எங்க ‘ரூட்’டு கொஞ்சம் பெரிசு போல:)

தமிழ் ‘செய்தி’ செயலிய பார்த்து, ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொல் கண்டுபிடிக்கிறது, ஒரு பத்தியில் எத்தனை உயிரெழுத்து இருக்கிறது என சொல்வது, குட்டி இந்தியா பற்றி மீடியாகார்ப் ‘செய்தி’ல வந்த செய்தியை பார்த்து, சில பல கேள்விகளுக்கு பதில் அளிப்பது என நல்ல புதிரங்கங்களுடன், குட்டி இந்தியாவை சுற்றி வருவது என இந்தப் போட்டி, இனிமையான அனுபவமாக இருந்தது.

வந்திருந்தவர்களுக்கு ‘தேக்கா பேட்டை
வேட்டை’ என பொறிக்கப்பட்ட துணிப்பை, அதில் ‘செய்தியின்’ பெயருள்ள ஒரு குடை, விசிறி என பயனுள்ள பொருட்களுடன் உணவும் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு விஷயமும் நன்றாக யோசித்து செய்திருக்கிறார்கள். ‘தேக்கா பேட்டை வேட்டை’ என்ற ‘புதிர் அட்டை’ அருமை.

என்ன கடைசியில் முடிவு சொல்ல
அவ்வளவு நேரம் எடுத்திருக்க வேண்டாம். ஒரு சில ‘டாஸ்க்’குக்கு நேரம் குறைவு. மதிப்பெண்ணிடும் முறையும் அடுத்த முறை
மாற்றலாம். குழுக்களுக்கு கொடுக்கும் வழித்தடத்தின் மொத்த தொலைவு ஒரே அளவாக இருந்தால் சிறப்பு. மழையோ, கடும் வெயிலோ இல்லாமல் இயற்கை காப்பாற்றிவிட்டது. அடுத்த முறை கூடுதல் குழுக்கள் பங்கேற்க வாழ்த்துகள்.

மொத்தத்தில் ‘செய்தி’ பிரிவின் இந்த முதல் முயற்சி பாராட்டபட வேண்டிய ஒன்று. செய்தி குழுவின் அனைவருக்கும் குறிப்பாக துடிப்புமிகு இளையர் பட்டாளத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

படத்தில் : தீவிர களப்பணியாற்றும் போராளி தலைகள்😄

ஆழ்ந்த இரங்கல்

தன் அழகால், நடிப்பால் தமிழ் இரசிகர்களையும் பிறகு இந்திய திரைப்பட இரசிகர்களையும் கொள்ளை கொண்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த நடிகை. இன்று வரை அவருடைய அழகுடன் கூடிய நடிப்பிற்கு இணையானவர்கள் யாருமில்லை. கமல் ரசிகனாக நான் ஶ்ரீதேவியை கமலுக்கு ஜோடியாக திரையில் மிகவும் இரசித்ததுண்டு. ரஜினி ரசிகர்களும் அவரை ரஜினியின் ஜோடியாக திரையில் இரசித்திருப்பார்கள். முருக கடவுளாய் அவர் குழந்தையில் நடித்த வேடம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவர்ந்த ஒரு அற்புதமான நடிகை. இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது…ஆழ்ந்த இரங்கல்…

எனக்கு பிடித்த, நான் மிகவும் இரசித்த ‘சாந்தினி’ இந்தி படத்திலிருந்து அவர் பாடிய இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்…

ஶ்ரீதேவி இரங்கல்

தன் அழகால், நடிப்பால் தமிழ் இரசிகர்களையும் பிறகு இந்திய திரைப்பட இரசிகர்களையும் கொள்ளை கொண்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த நடிகை. இன்று வரை அவருடைய அழகுடன் கூடிய நடிப்பிற்கு இணையானவர்கள் யாருமில்லை. கமல் ரசிகனாக நான் ஶ்ரீதேவியை கமலுக்கு ஜோடியாக திரையில் மிகவும் இரசித்ததுண்டு. ரஜினி ரசிகர்களும் அவரை ரஜினியின் ஜோடியாக திரையில் இரசித்திருப்பார்கள். முருக கடவுளாய் அவர் குழந்தையில் நடித்த வேடம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவர்ந்த ஒரு அற்புதமான நடிகை. இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது…ஆழ்ந்த இரங்கல்… எனக்கு பிடித்த, நான் மிகவும் இரசித்த ‘சாந்தினி’ இந்தி படத்திலிருந்து அவர் பாடிய இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்… https://m.youtube.com/watch?v=oIAWNE_pulk

மநீம : ஒரு கற்பனை தொலைக்காட்சி விவாதம் —————————————————- தொலைக்காட்சி நெறியாளர் : இன்றைய விவாதத்தில் கமல் கட்சி குறித்த பேச போறோம். முதலில் கமல் இரசிகர். கமல் இரசிகர் : ஒரு ரசிகனாக, கமல் கட்சி தொடங்கியதில் எனக்கு வருத்தமே, ஏனென்றால் ஒரு மாபெரும் கலைஞனை இந்த திரை உலகம் இழந்துவிட்டது. கமல் இரசிகர் ஆனால் கழகத் தொண்டர் : கமல் நல்லவர்தான், ஆனா அரசியல்ல அவர் எங்களை எதிர்த்து தாக்குப்பிடிப்பது கடினம். கமல் உத்தமனா, வில்லனா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அவருக்கு எங்கள் வாழ்த்துகள். களத்தில் சந்திப்போம் கமல் அவர்களே. கட்சித் தொண்டராக மாறிய இரசிகர் : கமல் ஒரு அறிவாளி, அவர் எந்த துறையில் கால் வச்சாலும் அது குறித்து கரைச்சு குடிச்சிட்டு கலக்குவார்னு இயக்குனர் இமயமே சொல்லியிருக்கிறார். முகநூல் போராளி : ஆமா, ஒரு தொடக்க நிகழ்ச்சியிலேயே பேசத் தெரியல, காவிரி பிரச்சனை பத்தி கேட்டா ஏதோ தண்ணீர், இரத்தம்னு உளறுகிறார். இவர் என்னத்த கலக்கப்போறார்? தமிழ் ஆர்வலர் : இவர் கட்சி பெயரையே ஏதோ சீர்திருத்தம் செய்றேனு புரியாத மாதிரி எழுதியிருக்கிறார். இவர் தமிழ அழிக்காம விட மாட்டாரு. தமிழனுக்கு ஒன்னும் செய்ய மாட்டாரு. கழக ஆதரவாளர் : முதல்ல அவரோட கட்சி கொள்கை என்னனென்னு சொல்லட்டும். எல்லோருக்கும் கல்வினு ஏதோ சொன்னார், சரி என்னவோ வரிசையா அப்படியே சொல்லப்போறார்னு பார்த்தா, சப்புனு முடிச்சிட்டார்…. தமிழ்த் தேசியவாதி : ஒரு நடிகன் தமிழ்நாட்டை ஆளக்கூடாது. ஒரு தமிழன் தான் ஆளனும். மநீம தொண்டர் : கமல் தமிழன் தானே. அப்படிப் பார்த்தால் உங்க தலைவரும் நடிகர்தானே? தமிழ்த் தேசியவாதி : அவரு நடிகர் இல்ல, இயக்குனராக்கும். கழக எதிர்ப்பாளர் : கமல் கட்சி பெயரிலேயே புரட்சி செய்திருக்கிறார். கழகம், கட்சி என்ற இரு சொல்லையும் தமிழக அரசியில் கட்சி வரலாற்றில் இருந்து அகற்றி விட்டார். இது நல்ல தொடக்கம். கமல் எதிர்ப்பாளர் : கமலுக்கு பின்னால் இலுமினாட்டி கும்பல் உள்ளது. அவர் கட்சிக் கொடியில் நட்சத்திரம் உள்ளது. இலுமினாட்டி ஆய்வாளர் : அவர் கட்சி தொடங்கியதே, அமித் ஷாவின் ஆதரவால்தான். காவிகள், தமிழ் நாட்டின் ஓட்டை பிரிப்பதற்காக, ரஜினியையும், கமலையும் களமிறக்குகிறார்கள். இவருக்கு கருப்பில் காவி இருக்கு. அவருக்கு காவியில் கருப்பு இருக்கு. ஆக இருவரும் காவியும் கருப்பும் கலந்த கருமம்தாம். அவர்கள் இருவரும் காவியின் ‘சிலீப்பர் செல்கள்’. அதனால் அவருக்கும் இலுமினாட்டிற்கும் சம்பந்தமில்லை. கமலுக்கும் மும்பைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த கொடி மும்பைல உள்ள தமிழர் பாசறையோடது. மநீம தொண்டர் : அப்படி ஒரு அமைப்பு இருப்பதே எங்களுக்கு இப்பத்தான் தெரியும். ஏன், எல்லோருக்குமே இப்பத்தான் தெரியும். இவங்க ரூம் போட்டு யோசிப்பாங்க போல. காவி ஆதரவாளர் : கமலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்களே தமிழ்நாட்டில தூங்கிட்டுதான் இருக்கோம்….அப்படி பார்த்த நாங்கதான் ‘சிலீப்பர் செல்’. தொலைக்காட்சி நெறியாளர் : இல்லங்க ‘சிலீப்பர் செல்’னா….. சிந்தனைவாதி : அட அத விடுங்க….கமல் கட்சி தொடங்கியது நல்ல நிகழ்வு. ஆனால் அவர் அறிமுகப்படுத்திய உயர்மட்டக்குழுவில் உள்ளவர்கள் அதில் இடம்பெற ஒரே காரணம், கமலின் அபிமானத்தை பெற்றவர்கள் என்ற ஒரே தகுதிதான். அவர்களுக்கு கட்சி நடத்துவது குறித்தோ, ஆட்சி செய்வது குறித்தோ ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மக்களின் பிரச்சனைகளோ, தீர்க்கும் முறைகளோ எதுவும் தெரியாத கமலின் விசிறிகள், அவ்வளவுதான். இவர்களை வைத்து பிக்பாஸ் வேணா நடந்துலாம். இல்லை ஒரு நல்ல மசாலா படம் எடுக்கலாம். கட்சியும் நடத்த முடியாது, ஆட்சியையும் பிடிக்க முடியாது. மய்யநிலைவாதி (நடுநிலைவாதி) : அப்படி, முழுவதுமாக ஒதுக்கி விட முடியாது. அதில், முன்னாள் காவல்துறை அதிகாரி, ஐ ஏ எஸ் அதிகாரி, வழக்கறிஞர், தமிழறிஞர், இலக்கியவாதி, பேச்சாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர், சமூக பணியாளர் இப்படி பலரும் உள்ளனர். முகநூல் போராளி : பேச்சாளாரா? யாரு? முதல்ல ராசியா ஒருத்தர் பேசினாரே அவரா? சம்பத்தமே இல்லாம உணர்ச்சிபிழம்பாக கொப்பளித்தார். இதுக்கு அம்மா கட்சி அடிமைகளின் துதிபாடல்கள் எவ்வளவோ மேல்… மநீம தொண்டர் : நாங்க பொது இடங்களிலே கால்ல விழாக்கூடாது, பொன்னாடை போர்த்தக்கூடாது என தெளிவாக எல்லோருக்கும் கட்டளை இட்டிருக்கிறோம். குக்கர் ஆதரவாளர் : நாங்கள் அடிமைகள் அல்ல விசுவாசம் உள்ளவர்கள். அதனால்தான் மக்களும் எங்களுக்கு விசுவாசமாக ஓட்டுப் போடுகிறார்கள். நீங்க எத்தனை கட்சி ஆரம்பித்தாலும் வெற்றி பெறுவது நாங்கதான். நோட்டு உள்ள வரை எங்களுக்கு ஓட்டு உண்டு. ரஜினி இரசிகர் : கமல் என்ன பெரிசா பண்ணிட்டார். எங்க தலைவரு கட்சி தொடக்க விழா பாருங்க உலகமே அதிரும்ல.. மநீம தொண்டர் : ஆமா, அரசியலுக்கு வரேன், வரேனு பல ஆண்டுகளாக சொல்றீங்க. முதல்ல கட்சியை தொடங்குங்க, அப்புறம் அதிருதா இல்ல கலகலத்து போதானு பார்ப்போம். மய்யநிலைவாதி (நடுநிலைவாதி) : ரஜனிக்கு குடும்பம் உள்ளதால், அரசியலுக்கு வந்தால் தோற்றுப் போவார். கமலுக்கு குடும்பம் இல்லாததால் அரசியலில் தோற்றுப் போவார். நித்தி ஆதரவாளர் : கமல் வைரமுத்துவின் நண்பர். அதனால் ஆண்டாளின் எதிரி. எங்கள் கிளையை தமிழ்நாட்ல வேறு பெயர்ல தொடங்க பார்க்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். எங்கள் ஆசிரம பக்த கோடிகள் இதற்கு காணொளி மூலம் சரியான பதிலடி தருவார்கள். மநீம தொண்டர் : என்ன தொலைக்காட்சிய்யா இது…இவன எல்லாம் யாரு இங்க உள்ள விட்டது… தொலைக்காட்சி நெறியாளர் : இல்லங்க அவரும் கமல் இரசிகர்தான், திடீர்னு ‘கன்ஃபூஸ்’ ஆகி வேற அவதாரம் எடுத்துட்டார்…ஒரு நிமிஷம் இருங்க…இதோ நம்ம உலக நாயகனே ‘லைன்’ல வர்றார். வாங்க திரு கமல். நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க? கமல் : ‘வெல்’…ஆ…நான் என்ன சொல்றது, அதான் தில்லி முதல்வர் சொல்லிட்டார், அண்டை மாநில முதல்வர்கள் சொல்லிவிட்டார்கள். நான் ஒன்னே ஒன்னுதான் மக்களுக்கு சொல்வேன். “நீங்க தமிழ்நாட்டுல, சந்தோஷமா, நிம்மதியா இருக்கீங்கனா, இந்த கட்சி உங்களுக்கு இல்ல, நீங்க எல்லோரும் கிளம்பலாம்”…… முகநூல் போராளி (குறுக்கிட்டு): அப்ப சோகமா இருக்குறவங்க போற ‘மய்யம்’மா அது…. தொலைக்காட்சி நெறியாளர்(பதட்டதுடன்..) : இத்துடன் இந்நிகழ்ச்சி ஒரு முடிவுக்கு வருகிறது. வணக்கம்…🙏🙏

தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்

பக்தர்களுக்கு தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்🙏🙏🙏

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் …

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும்…

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா!

மேலே உள்ள வரிகள் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசத்தில் உள்ளது.