சின்னய்யா

சில மரணங்கள் நமக்கு வருத்தத்தை தரும், சில மரணங்கள் பாடங்களை கற்றுத்தரும். ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? கூடு விட்டு ஆவி போனால், கூடவே வருவது என்ன? செல்வம், ஆயுளை மேலும் சில மாதங்களோ, நாட்களோ நீடிக்க உதவுமேயன்றி நிரந்தரமாக்க உதவாது என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்தும் சில மரணங்கள். ஆழ்ந்த வருத்தங்கள். #சின்னய்யா

குதிரைப் பந்தயம்

குதிரைப் பந்தயம் நடந்த சாலையில் உள்ள ரஜினி படத்தின் பெயர் கொண்ட ஒரு விடுதி, ஆணல்ல….(எந்த இடம் கண்டுபிடிங்க பார்ப்போம்..🙂)

இது எந்த இடம் என்று கண்டுபிடித்து அங்கே போக வேண்டும்….

இப்படி புதிரங்கத்துடன் நடந்த ‘தேக்கா பேட்டை வேட்டை’ ஒரு கலகலப்பான கலக்கல் போட்டி.

மீடியார்ப்கார்ப்பின் ‘செய்தி’ பிரிவு நடத்திய இந்த போட்டியின் ஏற்பாட்டுக்குழுவுக்கு என் பாராட்டுகள், சிறப்பாக கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் நேரத்துல முடிச்சிட்டாங்க. வேறு ஒரு வேலை இருந்ததால் பரிசு அறிவிப்பு நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொள்ள முடியவில்லை.

சரி, உங்களுக்கு பரிசு கிடைச்சுசானு கேக்குறீங்களா? நாங்க ‘டாப் 8’ல வந்தோம்….

தெரியும்….எத்தனை குழுக்கள் கலந்துகிட்டாங்கனு தானே கேக்குறீங்க…

மொத்தம் 8 குழுக்கள் கலந்துகிட்டாங்க, அதுல நாங்க ‘டாப் 8’, ஆனா முதல் மூனுல இல்ல:)

எப்படிங்க, வர முடியும்? நம்ம ‘பிக் பாஸ்’ ஸ்டைல்ல, பூ கட்ட சொல்றாங்க, பெண்கள் முடியில தலை பின்ன சொல்றாங்க(அட சௌரி முடி தாங்க கொடுத்தாங்க, உடனே கற்பனைல மிதக்காதீங்க..). எங்க குழுவில நாலும் ஆம்பளைங்க…முன்ன பின்ன செத்தாதான சுடுகாடு தெரியும்…
ஒரு கூடை சாமந்திபூவ முன்னால வச்சு, ஒரு சின்ன நூல கொடுத்து கட்ட சொன்னாங்க. அது எப்படினு கட்டனும்னு ஒரு காணொளி வேற போட்டாங்க….இரண்டு நிமிஷத்துல, நான் எடுக்கவோ, தொடுக்கவோனு பூ கட்டி முடிக்க, அத எடுத்து உதறி பார்த்து என்னங்க எல்லாம் விழுந்திருச்சுனு ஏற்பாட்டாளர் கேட்க, ஆஹா ‘வடை போச்சேனு’ பார்க்க, அந்த ‘டாஸ்குக்கு’ ‘மார்க்’ போச்சு, நான் கட்டின அழகான பூமாலை, பூச்செண்டாக மாறிடுச்சு.
சரி விட்டத பிடிக்கலாம்னு அடுத்த ‘ஸ்பாட்’ல போய் பார்த்தா, ஒரு முடிய கொடுத்து தலைபின்ன சொன்னாங்க, இதெல்லாம் பெண்களே மறந்து போய் பல காலமாச்சேனு, இத சொதப்ப வேணாம்னு, குழு நண்பர்கள பின்னட்டும்னு சும்மா இருந்தேன்…இருந்தாலும் மனசு கேக்காம, நானும் ஒரு முடிய எடுத்து பின்ன ஆரம்பிச்சு அருமையா 5 பின்னல் பின்னிடேங்க, என்ன ‘லேட்டா’ ஆரம்பிச்சதால ‘முடி’க்க முடியல, இங்கேயும் மார்க் போச்சு.

அப்புறம் எங்கிட்டு முதல்ல வர்றது? ஆனா புதிர பார்த்து அந்தந்த இடங்களுக்கு முதல்ல போயிட்டோம். என்ன, எங்க ‘ரூட்’டு கொஞ்சம் பெரிசு போல:)

தமிழ் ‘செய்தி’ செயலிய பார்த்து, ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொல் கண்டுபிடிக்கிறது, ஒரு பத்தியில் எத்தனை உயிரெழுத்து இருக்கிறது என சொல்வது, குட்டி இந்தியா பற்றி மீடியாகார்ப் ‘செய்தி’ல வந்த செய்தியை பார்த்து, சில பல கேள்விகளுக்கு பதில் அளிப்பது என நல்ல புதிரங்கங்களுடன், குட்டி இந்தியாவை சுற்றி வருவது என இந்தப் போட்டி, இனிமையான அனுபவமாக இருந்தது.

வந்திருந்தவர்களுக்கு ‘தேக்கா பேட்டை
வேட்டை’ என பொறிக்கப்பட்ட துணிப்பை, அதில் ‘செய்தியின்’ பெயருள்ள ஒரு குடை, விசிறி என பயனுள்ள பொருட்களுடன் உணவும் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு விஷயமும் நன்றாக யோசித்து செய்திருக்கிறார்கள். ‘தேக்கா பேட்டை வேட்டை’ என்ற ‘புதிர் அட்டை’ அருமை.

என்ன கடைசியில் முடிவு சொல்ல
அவ்வளவு நேரம் எடுத்திருக்க வேண்டாம். ஒரு சில ‘டாஸ்க்’குக்கு நேரம் குறைவு. மதிப்பெண்ணிடும் முறையும் அடுத்த முறை
மாற்றலாம். குழுக்களுக்கு கொடுக்கும் வழித்தடத்தின் மொத்த தொலைவு ஒரே அளவாக இருந்தால் சிறப்பு. மழையோ, கடும் வெயிலோ இல்லாமல் இயற்கை காப்பாற்றிவிட்டது. அடுத்த முறை கூடுதல் குழுக்கள் பங்கேற்க வாழ்த்துகள்.

மொத்தத்தில் ‘செய்தி’ பிரிவின் இந்த முதல் முயற்சி பாராட்டபட வேண்டிய ஒன்று. செய்தி குழுவின் அனைவருக்கும் குறிப்பாக துடிப்புமிகு இளையர் பட்டாளத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

படத்தில் : தீவிர களப்பணியாற்றும் போராளி தலைகள்😄

ஆழ்ந்த இரங்கல்

தன் அழகால், நடிப்பால் தமிழ் இரசிகர்களையும் பிறகு இந்திய திரைப்பட இரசிகர்களையும் கொள்ளை கொண்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த நடிகை. இன்று வரை அவருடைய அழகுடன் கூடிய நடிப்பிற்கு இணையானவர்கள் யாருமில்லை. கமல் ரசிகனாக நான் ஶ்ரீதேவியை கமலுக்கு ஜோடியாக திரையில் மிகவும் இரசித்ததுண்டு. ரஜினி ரசிகர்களும் அவரை ரஜினியின் ஜோடியாக திரையில் இரசித்திருப்பார்கள். முருக கடவுளாய் அவர் குழந்தையில் நடித்த வேடம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவர்ந்த ஒரு அற்புதமான நடிகை. இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது…ஆழ்ந்த இரங்கல்…

எனக்கு பிடித்த, நான் மிகவும் இரசித்த ‘சாந்தினி’ இந்தி படத்திலிருந்து அவர் பாடிய இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்…

அஞ்சலி

ஐந்தாண்டுகளுக்கு முன்பு சின்ன உடல்நலக் கோளாறு வந்தபோது மிகவும் சோர்வடைந்து விட்டேன். அப்போது வீட்டுற்கு வந்தவர் “நானெல்லாம் எவ்வளவு மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் தைரியமாக எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்கிறேன், மன உறுதி இருந்தால் போதும் அதுவே நாம் நலம்பெற பெரிதும் உதவும்” என எனக்கு தைரியம் சொன்னார். அது இன்றும் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.

கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கை வந்தபோது, “ஏதாவது தமிழ் நிகழ்வு நடக்குதா” என்று கேட்டார். பாரதியார் விழா நடப்பதாக நான் சொன்னவுடன், சக்கர நாற்காலியில் இருந்த போதும் அன்று பாரதியார் விழாவில் கலந்துகொண்டார். இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரான இவர் சிறந்த தமிழ் பேச்சாளர்கள் பலருக்கும் மிகவும் பிடித்தவர். நல்ல பல பேச்சாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர், அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு கொடுத்தவர். தமிழில் நூல்கள் எழுதியுள்ள இவர் தமிழ்மொழி மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர், சிறந்த பேச்சாளர்.

இலங்கைக்கான மொரிஷியஸ் நாட்டின் சிறப்பு தூதராக பணியாற்றினார். இலங்கையின் சிறந்த தொழிலதிபரான இவருக்கு இலங்கை அரசாங்கம் கடந்தாண்டு ‘தேசபந்து’ விருது கொடுத்து கௌரவித்தது. ஆன்மீகம், மொழி, சமூகப் பணி என கடைசிவரை ஓய்வின்றி பணியாற்றியவர். யாருக்கு உதவி தேவைப்படுகிறது என அறிந்து அவர்களுக்கு கொடுத்துதவிய பெரும்புரவலர்.

சிறியவர், பெரியவர் என அனைவரிடத்திலும் மிக கனிவாக பேசுவார், அன்பானவர், எளிமையானவர், நேர்மறை சிந்தனைக்கு சொந்தக்காரர்.

சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்திருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

Seethaவின் மீது அக்கறையும், அன்பும் கொண்டவர். சீதாவின் மாமாவின் இழப்பு எங்களுக்கு மிகுந்த வேதனை தருகிறது. அவருடைய உயிர் சிங்கையில் பிரிந்து, கடைசி பயணம் எங்கள் கண்முன் நடந்தது துயரமானது. தனது அன்னையை இழந்த சில நாட்களிலேயே தானும் மறைந்துவிட்டார். ஒரே வாரத்தில் இருவரும் மறைந்தது எங்களுக்கு மிக பெரிய இழப்பு.
அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

அஞ்சலி

இருபதுக்கு மேல் பேரன் பேத்திகள் இருந்தாலும், ஒவ்வொருவரின் மேலும் தனிப்பட்ட முறையில் அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். அதோடு பேரன் பேத்திகளுக்கு குடும்பங்கள் உருவான பிறகு அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் அன்பு பாராட்டுவார். என் மீதும் என் மனைவி மற்றும் பிள்ளைகள் மீதும் மிகுந்த பாசம் உடையவர். இப்படி ஒருவரால் எல்லோர் மீதும் இத்தனை வயதிலும் அன்பாக இருக்க முடியுமா என என்னை வியப்பில் ஆழ்த்தியவர்.
அப்படிபட்டவர், எங்களை விட்டு பிரிந்தார் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. என் மனைவி Seethaவின் பாட்டியின் மறைவு எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

May Her Soul Rest In Peace.