இன்று "புறநானூறு குறித்து பேசுவதற்காக, புதிய சிந்தனைகளை உங்களுடைய இதய
நிலத்தில் விதைப்பதற்காக" திரு தமிழருவி மணியன் கலந்துகொள்ளும் இலக்கிய நிகழ்ச்சி.
செந்தமிழ்ச் செல்வர் வை திருநாவுக்கரசு புகழ் போற்றும் நிகழ்ச்சி.
கடந்த 30 தினங்களாக வெளியான "முத்திரை வரிகள்" படைத்த கற்பனைக்கு
சொந்தக்காரர்கள் இணையும் நிகழ்ச்சி.
கவிஞர்களை சிறப்பிக்கும் சிறப்பு நிகழ்ச்சி.
கவிதைக்கான களத்தினை கனிவாய் கொடுக்கும் கவிமாலையின் நிகழ்ச்சி.
"தமிழ்மொழி விழா 2017"யின் நிறைவு நிகழ்ச்சி.
இன்று(30-ஏப்ரல்- 2017), ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6:00க்கு உமறுப்புலவர் அரங்கில்
தமிழில் ஓர் இனிய நிகழ்ச்சி.
அனைவரும் வருக! ஆதரவு தருக!
#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்