(இன்னிசை பஃறொடை வெண்பா)
விடியுமுன் கண்விழித்து வேலை முடித்து
துடிப்பான பிள்ளைகளின் தூக்கம் கலைத்து
வடிவான மன்னவனை வாவென் றழைத்து
பிடிவாத வாண்டை பிடித்தெண்ணெய் தேய்த்து
மடித்தபுத்தா டைகளில் மஞ்சளும் வைத்து
படிப்படியாய் பல்சுவைப் பண்டம் படைத்து
முடிநரைத்த மூத்தோரின் முத்தாசி பெற்று
வெடிகளும் மத்தாப்பும் வீதியில் மின்ன
நெடியசுற் றத்தார் நெகிழ்ந்துகொண் டாட
புடிகையிலெ டுத்த புதுத்துணியு டுத்த
அடியோ(டு) அவள்மறந்தா ளே!
*புடிகை = ஏலம்
போன வாரம் திங்கள்கிழமை மாலை, ஆயுத பூசைனு “‘கார’ சுத்தம் பண்ணி பூசை போடுங்க”னு மனைவி சொன்னாங்க. “அப்படியே, ஒவ்வொரு சக்கரத்துக்கு(சுழலி) கீழேயும் ஒரு எலும்பிச்சை பழம் வச்சு, வண்டிய எடு”னு அம்மா சொன்னாங்க. சரி, ஆண்டுக்கொரு முறையாவது சுத்தம் செய்வோமேனு மாலை கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி, வண்டிய சுத்தம் பண்ணி பூவு, பொட்டு எல்லாம் வச்சு அழகா வண்டிக்கு ‘மேக்கப்’ போட்டு கிளப்புனா…அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு எலுமிச்சை பழம் வைக்கலேயேனு. நாலாயிரம் ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ல ஓடாத வண்டியா இந்த நாலு எலுமிச்சை பழத்துல ஓடப்போவதுனு கேக்கறவங்க அடுத்த பத்திக்கு தாவிடுங்க.