அறுசீர் விருத்தம்!
வீடமைப்பு பேட்டை! (நேற்றைய தொடர்ச்சி)
அறைகளிங்கு வசதி சேர்க்க
அழகழகாய்க் குடிய மர்ந்தோம்
குறைகளின்றி நிதமும் வாழ
குறைவில்லா நீரும் கொண்டோம்
தரைமுதலாய் தளம்வ ரையில்
தடையிலாமின் சாரம் கண்டோம்
இறைவனைப்போல் கண்ணில் காணா
இழையிலிணை யம்;இ ணைந்தோம். (2)
பலவண்ண ஆடை கட்டி
பளிச்சென்று காட்சி தந்தாள்
சலவைசெய்த துணிகள் அங்கே
சன்னலிலே காயும் போது
மலைபோல உயர்ந்த வீடும்
மனங்கவரும் பசுஞ்சோ லையும்
பளபளக்கும் வண்ணத் தோடு
பாங்காக மிளிரும் பேட்டை (3)