முருகன் பாடல்

ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.

பொருள்: முருகனின் பரந்த தோள்கள் பன்னிரண்டும் வாழ்க. ஆறுமுகமும், மலையைப் பிளக்கும் சிறந்த வேலும் வாழ்க. சேவலும், அவன் வலம் வரும் மயிலும் வாழ்க. தெய்வானையும், வள்ளியும் வாழ்வார்களாக. அடியவர்களும் நல்வாழ்வு வாழட்டும்.
குறிப்பு: கச்சியப்பர் பாடியது.

Ref: http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp…

முருகன் பாடல் ரிலீஸ் சி டீ

Saturday, January 9, 2016 at 8:49pm UTC+08

முருகனின் திருவருளால், நான் எழுதிய முதல் பாடல் அதுவும் முருகன் பக்திப் பாடல் ஒலிவட்டாக வெளிவரவயிருக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தன்னுடைய ‘காவடியாம் காவடி’ பக்தி பாடல் தொகுப்பின் தலைப்புப் பாடலை, மெட்டுக் கொடுத்து எழுத வாய்ப்புக் கொடுத்த நண்பர் பரசுவிற்கு என் நன்றி! ஒலிவட்டு வெளியீடு, வரும் சனிக்கிழமை, 16-சனவரி-2016, காலை 9:30-12:30 மணிக்கு, சிங்கப்பூர், டேங்க் ரோடு, அருள்மிகு தெண்டாயுதாணி கோயில் மண்டபத்தில் நடைபெறும். அனைவரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

I am happy to announce that with the Blessings of Lord Murugan, the first song I penned that too a devotional song on Lord Murugan is getting released as CD I Thank Parasu for providing me the opportunity to write the Title Song matching his tune for his new devotional Album ‘Kavidayam Kavadi’ The CD release function will be held on 16-Jan-16, Saturday, 9:30-12:30 at Sri Thendayathupani Temple auditorium, Tank Road, Singapore. Please do join us and grace the occasion.

மழை

“மழை” கவிதை (மரபு வகை)
—————————-
(Downtown ரயில் பயண கவிமாலை நிகழ்வுக்கு எழுதியது)

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

தெறித்தோய்ந்த மழையதுவோ நின்ற பின்னும்
தெருவினிலே பாய்ந்தவெள்ளம் வடிய வில்லை
எரிப்பதற்கு மின்சாரம் அங்கு மில்லை
எரியூட்ட காய்ந்தவிற கெங்கு மில்லை
வெறித்திருந்த மயானத்தில் தோண்ட உள்ளே
வெறும்நீராய்; புதைத்திடவும் முடிய வில்லை
மரித்தவரை வீட்டில்வைத் தழவும் கூட
மனிதர்கள் யாருமிங்கே அருகில் இல்லை!

சிங்கை பவன்

சிங்கை பொன்விழாவை ஒட்டி எழுதிய மரபுக்கவிதைகளில் ஒன்று இன்றைய தமிழ் முரசில்!

‘சிங்கை பவன்’ என்ற இந்த கவிதை சமநிலைச் சிந்து மரபு வகையைச் சார்ந்தது!

அச்சுப் பிழை : முதல் கண்ணியின் கடைசி அடியில் ‘அன்னபூரணி அவள்தானே’ என்று எழுதியிருந்தது ‘அன்ன முழு அவள்தானே’ என்று பிழையாக அச்சாகியுள்ளது. மன்னிக்கவும்!

நன்றி தமிழ் முரசு, ஆசான் Karuna Karasu Govinda Raj Panasai Natarajan
Raju Ramesh மற்றும் ‘மரபு மட்டும்’ நண்பர்கள் குழு

கொலு பொம்மை

அப்பா தொலைக்காட்சி
செய்தியிலே லயித்துப் போக
அம்மா சாமியிடம் மணி
அடித்து வரம் வேண்ட
மனைவி பணிப்பெண்னுடன்
பட்டிமன்றம் நடத்த
மகன் கைப்பேசியோடு
கட்டிப் புரள
மகள் கார்ட்டூன்களுடன்
தனிக் குடித்தனம் பண்ண
வீட்டுத் தொலைப்பேசி தொந்தரவாய்
தொடர்ந்து ஒலிக்க
முகநூலில் முழுவதுமாய்
மூழ்கிப் போனான்
குடும்ப தலைவன்!
அலங்காரமாய் அவனுமுள்ளான்
வரவேற்பு அறையினிலே!
ஏதுமறியா கொலு பொம்மையைப் போல்!