பாபநாசம் அட்டகாசம்

த்ருஷ்யம் படமோ, விமர்சனமோ, கதையோ பார்க்காததால், முழுவதுமாக இரசிக்க முடிந்தது! நெல்லை மண் சொந்தம் என்பதால் கூடுதலாக இரசிக்க முடிந்தது.
எனக்கு பிடித்த நடிகைகளில் கௌவுதமியும் ஒருவர் ஆனால் முதலில் சில காட்சிகளில் கொஞ்சம் சொதப்பல்ஸ்.
த்ருஷ்யம் மாதிரி இல்லையே என்று சொல்பவர்களுக்கு: ஐபோன் பிடித்தவர்களுக்கு சாம்சங் பிடிப்பதில்லை, அப்படித்தான்! ஆனால் கமல், கமல் தான்👍! கமல் அண்ணாச்சி அசத்தி புட்டீயளே!

பி.கு: சென்னை தமிழ், கொங்கு தமிழ், மதுரை தமிழ், இலங்கை தமிழ், இதனுடன் மற்ற மொழிகளான மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகியவற்றுடன் கலந்த தமிழ் இப்படி பல தமிழை பேசி நடித்த கமல், தான் விட்டு வைத்த நெல்லை தமிழையும் இப்போது பேசி முத்திரை பதித்து தன் நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார்!

பாராட்டு விழா

ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் உண்னமயான பாராட்டும் அங்கீகாரமும் அவன் படைப்பை முகம் தெரியாத ஒரு மனிதர் காசு கொடுத்து வாங்கி, படித்து, இரசித்து, எழுதும் ஒரு ஆக்கப்பூர்வமான பின்னூட்டமே ஆகும். அதுவும் ஒரு முனைவர் அதை செய்தால் அதை விட ஒரு சிறந்த பாராட்டு வேறு என்னவாக இருக்கு முடியும்! அதோடு நின்றுவிடாமல் அந்த படைப்பை முன்னிறுத்தி ஒரு திறனாய்வு கூட்டம் நடத்துவதும் அதில் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பல தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொள்வதும் அதுவும் அந்த படைப்பாளனுக்கே தெரியாமல் இந்த விழாவை ஏற்பாடு செய்ததும் ஒரு படைப்பாளனுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும். தன் படைப்பை வெளிச்சம் போட பல்வேறு வியாபார உத்திகளை கையாள வேண்டிய நிலையில் உள்ள இந்த காலக்கட்டத்தில் இப்படி எந்த ஒரு மெனகெடலும் இல்லாமல் ஒரு நிகழ்வு தமிழகத்தில் எங்கோ ஒரு பகுதியில் நடந்தாலும் இது பாராட்டுக்குரியதுதான்! இந்த மருதாணி கடைத்தெருவில் காசு கொடுத்து வாங்கி பூசிக்கொள்ளும் இரசாயன சாயம் அல்ல, நம்மை விரும்பும் உள்ளங்கள் ஆசையாய் நமக்குக் வைத்துவிடும் இயற்கை மூலிகை! இந்த மருதாணி மணக்கும் என்பது உறுதி! அந்த படைப்பாளன் சி கருணாகரசு க்கு எனது வாழ்த்துகள்! விழா அழைப்பை பகிர்ந்தமைக்கு நன்றி Thiyaga Ramesh , திரு Rathina Pugazhendi! Panasai Natarajan கோபால் கண்ணன் கடலூரான் ஹாஜா மொய்தீன் Raju Ramesh Govinda Raj Mathikumar Thayumanavan திரு முருகன் Thamizh Thendral Athiyan Arumugam Erode Kathir

காதல் தினம்

கவிதையில் மட்டுமே தொடுவாய் எனில்! அதன் வரிகளாய் என்னை படைத்துவிடு! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
கதைகளில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனையே! ஆனால் என் கற்பனையில் வரும் சம்பவங்களும், நீயும் நிஜமே! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
தோற்பதும் சுகமே உன்னுடன் காதல் விளையாட்டில்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
உன்னை பார்த்த குற்றத்திற்காகவா என்னை மனச்சிறையில் அடைத்து வைத்தாய் ஆயுட்கைதியாக! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்

காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்! 2

தொலைவிலிருந்தும் என் அருகில் தெரிந்தாய்! உரிமையோடு என் உயிரைத் தொட்டாய்! அழகாய் பேசி அழுத்தம் குறைத்தாய்!உன் ஒற்றை சொல்லில் மாற்றம் செய்தாய்! கன்னிப் பேச்சில் கவிஞனாக்கினாய்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!

காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!

எப்படி புரண்டு படுத்தாலும் என் தூக்கத்தை புரட்டி போடுகிறது உன் நினைவுகள்! இமைகள் மூடினேன் காட்சிகள் அகலவில்லை! தூங்க எண்ணினேன் எண்ணங்கள் விடவில்லை! கட்டிலின்மேல் கிடந்தேன் கனவுகள் வேலையில்லா பட்டதாரியானது! பொழுது புலர்ந்தது படுக்கை பிடிக்கவில்லை! உறங்கினால் தானே விழிப்பதற்கு, உன் முப்பரிமான நிழல் முன்னே ஊஞ்சாலடியது! தூக்கம் தொலைந்து போனது! தாக்கம் எஞ்சி நின்றது! ஏக்கம் ஏனோ கொன்றது! என்னை மீட்க உன்னை தேடுகின்றேன்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!