#தமிழ்மொழி_விழா_2016 தமிழ்மொழி விழா குறித்து நான் மார்ச் மாதம் தொடக்கத்தில் சிராங்கூன் டைம்ஸில் கூறிய கருத்தினை இன்று ஒரு நிகழ்வில் அப்படியே பிரதிபலித்த சிங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் திரு இரா தினகரன் அவர்களுக்கு என் நன்றி என்னை எழுத ஊக்கப்படுத்திய Shanavas அண்ணனுக்கு நன்றி
#தமிழ்மொழி_விழா_2016 ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது இன்று ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய தமிழ் மொழி விழா. ஏன்? மூன்று முக்கியக் காரணங்கள்: 1. சரியாக இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடம் : எந்த ஒரு நிகழ்ச்சியும் இரண்டு மணி நேரத்துக்குள் இருந்தால் மிகச் சிறப்பு. அதுவும் குறித்த நேரத்தில் ஆரம்பித்து, குறித்த நேரத்தில் முடித்தது. 2. சிறப்பு விருந்தினர், சிறப்புப் பேச்சாளர், விருதாளர் தவிர மற்றவர்கள் யாருக்கும் பொன்னாடை இல்லை: முக்கியமாக புரவலர்களுக்கு பொன்னாடை இல்லை. அவர்களிடம் நன்கொடை வாங்கி அவர்களுக்கே செலவு செய்வது எனக்கு ஏற்புடையதல்ல. அவர்களுக்கு மரியாதை செய்வது அவசியம். அதற்காக பொன்னாடைகள், மேடைக்கு அழைப்பது என்ற சடங்கு, சம்பிரதாயங்கள் இல்லாமல் நேரம் சேமிக்கப்பட்டது. 3. கூட்டம் அதிகமாக வரும் என முன்னரே திட்டமிட்டு வெளியே பெரிய திரையிட்டு, நாற்காலி போட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது சிறப்பு: வேறு பெரிய இடமாக முதலிலேயே தேர்ந்தெடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. மிக முக்கியமாக, திரு கோபிநாத் அவர்களின் இடைவிடாத தடையில்லாத கருத்தாழமிக்க அதே சமயத்தில் நகைச்சுவையுடன் கூடிய பேச்சு நான் சமீபத்தில் கேட்ட பேச்சுகளில் மிக சிறந்தது.
தாங்க முடியலப்பா
இன்னைக்கு காலைல மளிகைகடைக்காரரிடம் இருந்து வீட்டிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது… ம.க: ஐயா, உங்களோட பில் ஒன்னு பணம் கட்டாம இருக்கு, நாளைக்கு ஆண்டு கணக்கு முடிக்கனும். இன்னைக்கு அல்லது நாளைக்கு வந்து கட்டிடுங்களேன். நான்: எப்ப வாங்குன மளிகை, எவ்வளவு நாளாச்சு? ம.க: மார்ச்சு, 15ம் தேதி அம்மா வாங்கினது. வீட்டுக்கு டெலிவரி செய்தது. நான்: ஏங்க, அதற்கு பிறகு இரண்டு தடவை உங்க கடைக்கு வந்தேனேங்க…என் கிட்ட வாங்கியருக்கலாம்ல? ம.க: இல்லங்க, அம்மா வந்து கட்டுவாங்கனு காத்திருந்தோம் நான்: அடப்பாவமே, சிங்கையிலும் ‘அம்மா’வா இந்த சம்பத்துங்க தொல்லை தாங்க முடியலப்பா!
இசைப்பாட்டு இலக்கியம்
1980களில் திரைப்படப் பாடல்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கண்ணதாசன், வாலி, வைரமுத்து. அந்த காலகட்டத்தில் எழுதிய அனைத்து பாடல்களும் பெரும்பாலும் இவர்களில் யாரோ ஒருவர் தான் எழுதியுள்ளார் என்றே நினைப்பார்கள். இவர்களைத் தாண்டி பல கவிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் தங்களை கவிஞர்கள் என்று கூறிக்கொள்ளாத மூன்று முக்கியமான கவிஞர்களை பற்றி அருமையாக ஆராய்ச்சி செய்து “இசைப்பாட்டு இலக்கியம்” என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் நம் கவிஞர் கி கோவிந்தராசு. சிறுவயதில் இருந்தே திரைப்படப் பாடல்களையும் அதன் வரிகளில் பொதிந்திருக்கும் பொருளையும் (பெரும்பாலான பாடல்களில்) கூர்ந்து கவனித்து அதன் தாக்கத்தால் கவிஞராகி மாணவ பருவத்திலேயே வைரமுத்து கரங்களால் ‘மாண்கவி’ பட்டம் பெற்றார் கவிஞர் கி கோவிந்தராசு. அது மட்டுமா சங்க இலக்கியத்தையும், திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் கற்று தேர்ந்த இவருக்கு மலேசியாவின் சிரம்பான் கம்பன் கழகம் 2015ம் ஆண்டு “கம்பன் விருது” வழங்கி சிறப்பித்தது. இத்தைகைய சிறப்பினை பெற்ற இவர் அந்த மூன்று கவிஞர்களின் திரையிசைப் பாடல்களில் உள்ள இலக்கணம், இலக்கிய சுவைகளை திருவள்ளுவர், கம்பர், கண்ணதாசன், வைரமுத்து துணைக்கொண்டு அழகாக ஒப்பிட்டு , விளக்கங்களுடனும் மிக எளிமையாக இப்புத்தகத்தில் பதிந்துள்ளார். சினிமா பாடல்களை இரசிக்கும் அனைவரும் இந்நூலை வாசித்தால் சிறந்த நூறு பாடல்களை புரிந்து இரசித்துக் கேட்ட அனுபவத்தை பெறுவர். சிங்கையில், இந்நூலை வரும் மார்ச் 19ம் தேதி மாலை ஆறு மணிக்கு விக்டோரியா தெருவில் உள்ள தேசிய நூலக வாரியம் கட்டடத்தில், ஐந்தாம் தளத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் வாங்கலாம். வாசகன் பதிப்பகத்தின் வெளியீடான இந்த புத்தகத்தை அவர்களிடமும் வாங்கலாம் புத்தகத்தை வாங்குமுன் ஒரு சிறிய விளையாட்டு…:) கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களை யார் எழுதியது என்று யூடுயூப்பிலோ கூகுளிலோ பார்க்காமல் கண்டுபிடியுங்ஙள் பார்க்கலாம். 1. “அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே….” 2. “சிறுபொன்மனி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இருகண்மணி பொன் இமைகளில் தாளலயம்…” 3. “கதிரவனைப் பார்த்து காலைவிடும் தூது வண்டுகளைப் பார்த்துப் பூக்கள்விடும் தூது —-” 4. “உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…” 5. “மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையைத் தூது விட்டேன்…” 6. “கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண்வரைந்த ஓவியமோ….”
1980களில் திரைப்படப் பாடல்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கண்ணதாசன், வாலி, வைரமுத்து. அந்த காலகட்டத்தில் எழுதிய அனைத்து பாடல்களும் பெரும்பாலும் இவர்களில் யாரோ ஒருவர் தான் எழுதியுள்ளார் என்றே நினைப்பார்கள். இவர்களைத் தாண்டி பல கவிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் தங்களை கவிஞர்கள் என்று கூறிக்கொள்ளாத மூன்று முக்கியமான கவிஞர்களை பற்றி அருமையாக ஆராய்ச்சி செய்து “இசைப்பாட்டு இலக்கியம்” என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் நம் கவிஞர் கி கோவிந்தராசு. சிறுவயதில் இருந்தே திரைப்படப் பாடல்களையும் அதன் வரிகளில் பொதிந்திருக்கும் பொருளையும் (பெரும்பாலான பாடல்களில்) கூர்ந்து கவனித்து அதன் தாக்கத்தால் கவிஞராகி மாணவ பருவத்திலேயே வைரமுத்து கரங்களால் ‘மாண்கவி’ பட்டம் பெற்றார் கவிஞர் கி கோவிந்தராசு. அது மட்டுமா சங்க இலக்கியத்தையும், திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் கற்று தேர்ந்த இவருக்கு மலேசியாவின் சிரம்பான் கம்பன் கழகம் 2015ம் ஆண்டு “கம்பன் விருது” வழங்கி சிறப்பித்தது. இத்தைகைய சிறப்பினை பெற்ற இவர் அந்த மூன்று கவிஞர்களின் திரையிசைப் பாடல்களில் உள்ள இலக்கணம், இலக்கிய சுவைகளை திருவள்ளுவர், கம்பர், கண்ணதாசன், வைரமுத்து துணைக்கொண்டு அழகாக ஒப்பிட்டு , விளக்கங்களுடனும் மிக எளிமையாக இப்புத்தகத்தில் பதிந்துள்ளார். சினிமா பாடல்களை இரசிக்கும் அனைவரும் இந்நூலை வாசித்தால் சிறந்த நூறு பாடல்களை புரிந்து இரசித்துக் கேட்ட அனுபவத்தை பெறுவர். இந்நூலை வரும் மார்ச் 19ம் தேதி மாலை ஆறு மணிக்கு விக்டோரியா தெருவில் உள்ள தேசிய நூலக வாரியம் கட்டடத்தில், ஐந்தாம் தளத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் வாங்கலாம். புத்தகத்தை வாங்குமுன் ஒரு சிறிய விளையாட்டு…:) கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களை யார் எழுதியது என்று யூடுயூப்பிலோ கூகுளிலோ பார்க்காமல் கண்டுபிடியுங்ஙள் பார்க்கலாம். 1. “அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே….” 2. “சிறுபொன்மனி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இருகண்மணி பொன் இமைகளில் தாளலயம்…” 3. “கதிரவனைப் பார்த்து காலைவிடும் தூது வண்டுகளைப் பார்த்துப் பூக்கள்விடும் தூது —-” 4. “உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…” 5. “மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையைத் தூது விட்டேன்…” 6. “கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண்வரைந்த ஓவியமோ….”