கண்ணாடிக் கட்டிடங்கள்
கண்களை குருடாக்கி
மின்கம்பங்கள் மாய்த்து
இருட்டிய மாலையில்
கொட்டிய மழையில்
வெறிச்சோடிய சாலைகளில்
வாகனத்தின் மடியை தழுவி
மரங்களை படுக்கப் போட்டு
நவீன நகரத்தைக் கற்பழித்த
புயலுக்கு பெயர்
சிவப்பு ரோஜா:(
நிற்பதுவே நடப்பதுவே!
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ? காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? #பாரதி_நீர்_ஞானி #எத்தனை_பாரதி_வந்தாலும்.. #வெள்ளையனே_மீண்டும்_வா
சோ
துக்(க)ளக்..”கம்:(
நான் பல ஆண்டுகளாய் விரும்பி இரசித்து படித்த ஒரே பத்திரிக்கை துக்ளக். சென்னையில் இருந்த போது பொங்கலன்று அவர் கூட்டதிற்கு சில முறை சென்றதுண்டு. இனிமேல் அங்கு பேச ‘சோ’ அவர்கள் இல்லை. அவரை சில முறை மயிலை கபாலீசுவரர் கோயிலில் சந்தித்து வணக்கம் சொன்னதுண்டு. அதே பச்சை ஆடை, வளர்ந்த உருவம், மெல்லிய புன்னகையோடு விசாரிப்பு. சென்னைத் தமிழில் இயல்பாய் வெளுத்து வாங்கிய நல்ல நகைச்சுவை நடிகர். நான் கண்டு வியந்த மாற்றுச் சிந்தனை கொண்ட சிலரில் முதன்மையானவர். அவரின் நையாண்டிக்கு இணை வேறதெவும் இல்லை. இன்றைய மீம்ஸின் பிதாமகன் என்றும் சொல்லலாம். அவருடைய பல அரசியல் கருத்துகளில் எனக்கு உடன்பாடுண்டு. இவரின் ‘முகமது பின் துகளக்’ நாடகத்தை பல முறை கேட்டிருக்கிறேன். காலத்தை கடந்த சிறந்த அரசியல் நையாண்டி நாடகம் அது. அவரும் காலத்தை கடந்து என்றும் நிலைத்திருப்பார்.