கலக்கல் நாடக விழா 2017

பொதுவா அலுவலகத்திலேயோ அல்லது பெரிய பன்னாட்டு அமைப்புகளிலேயோ நம்ம ஆளுங்க ஒரு விஷயத்தைச் சொல்லும்போது ரொம்ப அழுத்தமா, சொல்ல வந்த கருத்து போய் சேர்கின்ற மாதிரி சொல்வது குறைவு. இதற்கு சில விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் நான் பார்த்த வரையில் இப்படி நிறைய பேர் இருக்காங்க. ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூட ஒரு உணர்ச்சியே இல்லாமல் சொல்வதுண்டு. ஆனால் அதே செய்தியை மற்ற நாட்டுக்காரங்க பேசும்போது அவங்க அங்க அசைவுகள், முக பாவனைகள் பாருங்க, பல சிவாஜியும், வடிவேலும் குடியிருப்பாங்க. பேச்சாளர் மன்றங்கள் மாதரி சில இடங்களில் இந்த அங்க அசைவுகள், குரல் ஏற்ற இறக்கம் இதெல்லாம் கத்துக்கலாம். ஆனால் ஒரு நல்ல தொடர்புத்திறனை, படைப்புத்திறனை எப்படி மேம்படுத்திக் கொள்வது. அதற்கான அடுத்தகட்ட பயிற்சி நாடகத்தில் கிடைக்குமா?
கிடைக்கும் என்கிறார், “கலக்கல் நாடக விழா 2017″ன் சிறப்பு விருந்தினர் திரு புகழேந்தி ராமகிருஷ்ணன் Pugalenthii Ramakrishnan ,

மேலும் படிக்க…

தமிழ் விக்கிபீடியா

என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சொன்னார், ஒப்படைப்புகளுக்கு (assignments) ‘விக்கிபீடியா'(Wikipedia) தரவுகளை விவரப்பட்டியலில்(References) சேர்க்கக்கூடாதென்று. பெரும்பாலான பல்கலைக்கழங்களில் அது ஏற்றுக்கொள்ள படமாட்டாது. இதற்கு காரணம் Wikipediaவில் உள்ள தரவுகள்/உள்ளீடுகள் போதிய அளவு சரிபார்க்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அதில் பதிவேற்றம் செய்யலாம். இப்போது எப்படி என்று தெரியவில்லை. இது ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ் விக்கிபீடியாவின் தரம் மேம்பட்டது. அதில் எப்படி பதிவேற்றம் செய்கிறார்கள், அது எப்படி சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது 2015ல் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இதற்கென நடந்த அமர்வில் இதன் நிர்வாகிகள்/ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கினார்கள். நான், திண்ணப்பன் ஐயா, பேராசியர் மு இளங்கோவன் இன்னும் சிலர் இதில் கலந்துகொண்டோம். அது மட்டுமல்ல, இதில் பதிவேற்றம் செய்பவர்கள் பொரும்பாலும் தமிழ் நன்கு தெரிந்த, கற்றுத்தேர்ந்த தமிழ் ஆசான்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள். எனக்கு தெரிந்து இதில் பெரும் பங்காற்றியிருப்பவர் பேராசிரியர் மெய்கண்டான் ஐயா அவர்கள். திருக்குறளின் பரிமேலழகர் உரையினை முழுவதுமாக பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் திருக்குறளை யாப்பு வடிவில் மட்டுமில்லாமல் சொற்களாக எளிதில் மாணவர்களுக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார் மெய்கண்டான் ஐயா(சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). இவர் பல சங்க இலக்கிய நூல்களை, பாரதிதாசன் பாடல்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவேற்றங்களை செய்துள்ளார். ‘விக்கிமூலம்’ பக்கத்தில் அதை நீங்கள் பார்க்கலாம். இவர் பங்கேற்பை சிறப்பு செய்யும் வகையில் இவருக்கு ‘களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்’ கொடுத்திருக்கின்றனர் விக்கி அன்பு குழுமத்தினர். இவருடைய பதிவேற்றங்களை பயன்படுத்தும் ஆய்வாளர்கள் பலர் உள்ளனர். இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் தமிழ் விக்கிபீடியா நம்பத்தகுந்தது, அதில் மாணவர்களுக்கு தேவையான பல வளங்கள் உள்ளன, அதை தைரியமாக பயன்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே.

மேலும் படிக்க…

இலக்கிய மன்றத்தின் 57வது ஆண்டு விழா

ஏப்ரல் 9ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாதவி இலக்கிய
மன்றத்தின் 57வது ஆண்டு விழாவும் 37வது தமிழர் திருநாள் விழாவும் இருபெரும் விழாவாக
ஒன்றாக நடைப்பெற்றது. "வாழ்க தமிழ்மொழி" என்ற தமிழ் வாழ்த்து பாடப்பட்டது.
பாரதியாரின் இப்பாடலை டாக்டர் சௌந்தர நாயகி வைரவன் பாடினார்.

அடுத்தாக குழந்தைகளின் நாட்டியம், கும்மியாட்டம், பாடல்கள், பல்லினத்தை பிரதிபலிக்கும்
நடனம் என களைகட்டியது.
மலாய் குழுவினரின் நடனம் மிக நளினம், பாடலும் அருமை.

புரவலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. யாரும் மேடைக்கு
அழைக்கப்படவில்லை, பொன்னாடைகள் இல்லை. குரல் வழி இரு முறை, தொடக்கத்திலும்,
நிகழ்ச்சியின் மத்தியிலும் 'ஆடியோ' ஒலிக்கச் செய்து நன்றி தெரிவித்தது பாராட்டுக்குரியது.

மணிமாறன் குழுவினரின் நடனம் வழக்கம் போல் நேர்த்தியாக இருந்தது.

மேடையில் இருபது இசைக் கலைஞர்களுக்கு மேல் அமர்ந்து 'குறையொன்றுமில்லை',
'சங்கமம்' இரண்டு பாடல்களையும் இசை கருவிகள் மூலம் இசைத்தனர். மிக சிறப்பாக
இருந்தது. ஒலிவாங்கி(microphone) இருந்திருந்தால் 'effect' இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
(இக்குழு யூனிட்டி உயர்நிலைப் பள்ளியின் இசைக்குழு என்று நினைக்கிறேன்)

குறிப்பிட்ட நேரத்தில் கிட்டதட்ட 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய
அவசரமோ என்னமோ தெரியவில்லை மேடையை விட்டு இசைக்குழுவினர்
விடைபெறுவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொகுப்பாளர் அடுத்த அறிவிப்பை செய்தார்.
அடுத்த குழுவும் மேடைக்கு வந்துவிட்டார்கள். அது நாம் கலைஞர்களுக்கு கொடுக்கும்
மரியாதை அல்ல, தவிர்த்திருக்கலாம்.

நிதானமாக, மிகவும் தெளிவான உச்சரிப்போடு அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்
திருமதி அபிராமி அன்று கொஞ்சம் பதட்டமாக காணப்பட்டார்.

டாக்டர் சௌந்தர நாயகி வைரவன் தன்னுடைய 'சிங்கப்பூரில் தமிழ்' என்ற ஒலிவட்டிலிருந்து
'தமிழ் எங்கள்…' என்ற பாடலை நன்றாக பாடினார்.

டாக்டர் பாக்யமூர்த்தி தன் மாணவிகளுடன் சேர்ந்து இரு பாடல்களை சிறப்பாக பாடினார்.

பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், "உங்களுக்குத் தெரியுமா" என்று தமிழின் பெருமையை
அழகாக எந்தவித குறிப்புமின்றி ஒவ்வொருவராக எடுத்துச்சொல்ல அதை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து சொன்னார் ஒரு மாணவி. ஆனால், அதில் சொல்லப்பட்ட சில விஷயங்கள்
'WhatsApp Forward'களை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டவைகள் போல தெரிந்தது.
அதற்கு சான்றுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. குழந்தைகள் நன்றாக பேசினர்
அவர்களுக்கு தயாரித்து கொடுத்தவர்கள் சரியான தகவல்களை கொடுத்தார்களா என்று
தெரியவில்லை. அமைச்சரின் முன்னால் நம் பெருமையை பேசும்போது கவனம் தேவை.

திருமதி சுந்தரி சாத்தப்பன் இரு குழந்தைகளுடன் சேர்ந்து இரண்டு பாடல்கள் பாடினார்.
'அமுதே தமிழே…' பாடல் அற்புதம். இவர் ஒரு சிறந்த பாடகர். இவரின் சில பாடல்களை நான்
கேட்டுள்ளேன். அமைதியானவர், ஆர்பாட்டம் இல்லாதவர். இவர் மேலும் உச்சம் தொட
வாழ்த்துகள்.

திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் திரு அனு மோகன் சிறப்புரையாற்ற
அழைக்கப்பட்டார். அவர் பேச தொடங்கிய சில நிமிடங்களில் வெளியிலிருந்து மேளதாள
சத்தம் உள்ளே கேட்க, அவர் கொஞ்சம் யோசித்தார். ஆனால் நமக்கு தெரியும், வெளியே
சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறாரென்று. சில வினாடிகளில், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு அனு
மோகனிடம் இருந்து ஒலிவாங்கியை வாங்கி அனைவரையும் எழுந்துநின்று சிறப்பு
விருந்தினரை வரவேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். என்ன நடக்கிறது என்று சற்றும்
பிடிபடாமல் அனு மோகன் மேடையில் ஒலி வாங்கி பக்கம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு டெஸ்மண்ட் லீ, மூத்த துணை
அமைச்சர், உள்துறை அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, அவைத் துணைத் தலைவர்,
அவர்களை அரங்கத்தின் நுழைவாயிலேயே சிறப்பு செய்து சீன, மலாய், தமிழ் என்று மூன்று
வித மேளதாளத்துடன் உள்ளே அழைத்துவந்தனர்.

அரங்கத்தின் இடதுபுறத்தில் உள்ள வாசல் வழியாக உள்ளே வந்த நேராக வலதுபுறம் சென்று,
அந்த வழியாக மேடையில் ஏற வைத்து, நடுவில் வந்த அனைவருக்கும் கை அசைத்து
வணக்கம் சொல்லி, இடதுபுறம் வழியாக கீழே இறங்க வைத்து மீண்டும் வலதுபுறம் சென்று
அமரவைக்க, படையப்பாவில் சூப்பர் ஸ்டாரை வியந்து பார்ப்பதை போல அனு மோகன்
மேடையில் ஒலிவாங்கி பக்கம் நின்று கொண்டு இருந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
மீண்டும் பேச்சை தொடரலாமா என்று அனுமதி பெற்று தொடர சிறுது நேரத்திலே 'ஐந்து
நிமிடத்தில் பேச்சை முடிக்கவும்' என ஒரு துண்டு சீட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது.

அப்படியே, கடந்தாண்டு பார்த்த காட்சி திரும்ப 'Re-play' பண்ணது போல் கண்களில்
பளிச்சிட்டன. கடந்தாண்டு பாதிக்கப்பட்டவர், திரு கரு பழனியப்பன். என்ன, அப்ப
தொடர்ந்து பேசியதால் நாமும் பாதிக்கப்பட்டோம். இங்கே அனு மோகன் உடனே பேச்சை
முடித்து விட்டார், தப்பித்தோம்.

சிறப்பு விருந்தினர், அதுவும் ஒரு அமைச்சரை வரவேற்க செய்த ஏற்பாடு அருமை, அதில்
மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அமைச்சரை மேடையில் வலம் வர வைத்ததை
தவித்திருக்கலாம். மேடையில் ஒரு சிறப்பு பேச்சாளர் பேசும்பொழுது இந்த மாதிரியான
நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அவருடைய பேச்சை பிறகு வைத்திருக்கலாம் அல்லது
முன்னரே வைத்திருக்கலாம்.

மாதவி இலக்கிய மன்றத் தலைவர், டாக்டர் என்.ஆர். கோவிந்தன் தனது உரையில்
அமைச்சருக்கும் தனக்கும் உள்ள அறிமுகத்தை எடுத்துச் சொன்னார். மேலும், தமிழவேள் கோ
சாராங்கபாணி தொடங்கி வைத்த தமிழர் திருநாள் விழாவை தொடர்ந்து பல ஆண்டுகளாக
தான் நடத்தி வருவதை குறிப்பிட்டு எதிர்காலத்தில் இதை நடத்த மாதவி இலக்கிய மன்ற
இளையர்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
73 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாதவி இலக்கிய மன்ற தலைவருக்கு எல்லோருக்கும்
வாய்ப்பு கொடுக்க வேண்டும், நிறைய மாணவர்களை மேடையேற்ற வேண்டும் என நல்ல
உள்ளம் கொண்டவர். சிறியதாய் ஏதும் முயற்சி எடுத்தாலும் அவர்களை முதலில் பாராட்டும்
பெரிய மனதுக்கு சொந்தக்காரர்.

இவருடைய நிகழ்ச்சிக்கு எல்லா அமைப்பு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வந்து
விடுவார்கள்.

அமைச்சர் தன்னுடைய உரையில், பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் பிரச்சனைகளே
பெரிதாக இருக்கும் ஆனால் சிங்கையின் பலமே பல்லின சமுதாயம்தான் என்று குறிப்பிட்டார்.
தனது ஒரு பகுதியின் உரையை தமிழில் எழுதிவைத்து பேசினார். அந்த முயற்சி
பாராட்டுக்குரியது.

திரு பாண்டி துரைக்கு இந்தாண்டுக்கான களம் மாதவி இலக்கிய மன்றம். ஆனால்
கொடுக்கப்பட்ட நேரமோ 45 நிமிடம் தான். அதிலும் பலர் அரங்கத்தை விட்டு
சென்றிருந்ததால் அவர் கொஞ்சம் தயக்கம் காட்டினார். ஆனால் பிறகு சிறிது நேரத்தில்
அப்பப்ப சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உள்ளே வந்து கொண்டிருந்தனர். திரு
பாண்டி துரைக்கு இடையிடையே அரங்கத்தில் நடந்து கொண்டிருந்திருப்பது பிடிக்காது. ஒரு
இலக்கிய பேச்சுக்கு அந்த இடையூறுகள் இல்லாமல் இருப்பதே சிறந்தது. இதற்கிடையே ஒரு
சில நகைச்சுவைகள், கம்பன், கண்ணதாசன் என்று முடிந்தவரை இருக்கிறவர்களை தன்
வசப்படுத்த முயற்சி செய்தார்.

கீழே உள்ள மூன்று விஷயங்களை சில எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார்.
1.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

3.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

சிலப்பதிகாரத்தை, மூவேந்தர்கள் குறித்தும் பேசும், முத்தமிழையும் கொண்டிருக்கும் மக்கள்
காவியம் என்றார். மாதவியின் பெருமைகளை கூறும் போது தன் குலத்தொழிலை தானும்
செய்யாமல் மணிமேகலையும் செய்ய விடாமல் புரட்சி செய்தார் என்றும் மணிமேகலையை
கண்ணகியின் மகள் என்று சொல்லும் பெருந்தன்மையோடு இருந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், மாதவியின் அன்னை தான் கோவலனின் கனையாழி காண்பித்து சொத்தை
அபகரித்தார் பின்னர் அதை மாதவி திரும்ப கொடுத்தார் என பல செய்திகளை சுவாரஸ்யமாக
சொன்னார்.

இறுதியில் சிலப்பதிகாரம் என்னும் சிறப்பான காவியத்தை பேச 45 நிமிடம் போதாது
என்பதை தெரியப்படுத்தினார், திரு பாண்டி துரையின் சங்கடங்களை புரிந்து கொண்டு
மீண்டும் அடுத்த ஆண்டு அவரையே சிறப்பு பேச்சாளராக அழைக்க முடிவெடுத்திருப்பதாக
மேடையில் அறிவிக்கப்பட்டது.

திரு அனுமோகன் அவர்களுக்கும், திரு பாண்டித்துரை அவர்களுக்கும் நினைவு பரிசு
வழங்கப்பட்டது.

பின்னர், மாணவர்களை நினைவு பரிசு பெற்றுக்கொள்ள வரச் சொன்னார்கள். ஆனால்,
மாணவர்கள் பெயர்களை அறிவிக்கவில்லை. அப்போது அரங்கத்தை விட்டு எல்லாரும்
கிளம்பிச்செல்ல ஆரம்பித்து விட்டனர். நான் மட்டும் பின்னால் உட்கார்ந்து கைதட்டி
கொண்டிருந்தேன். அதுவும் வேண்டாமென பார்வையாளர்கள் பக்கம் உள்ள விளக்கை
அணைத்து விட்டார்கள். இதற்கிடையே திடீரென்று பெங்களூரில் கேபிள் நெட்வர்க்
நிறுவனம் நடத்தும் திரு மூர்த்தி என்பவரை அழைத்து அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்'
விருது கொடுத்தது நம்மில் எத்னி பேருக்கு தெரியும்….

என் உரையை முடிப்பதற்கு முன் கடைசியாக ஒன்றை சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன்
முகநூல் மக்களே. முன்னர் சுத்திக்கொண்டே இருக்கும் 4G நெட்வொர்க் இப்போதெல்லாம்
உமறுப்புலவர் அரங்கத்தில் சிறப்பாக வேலை செய்கிறது என்பதை சொல்லிக்கொண்டு…..

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும்
கீட் ஹாங் சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்திய சிறப்பு பட்டிமன்றம் கடந்த சனிக்கிழமை, 08-ஏப்ரல்-2017, அன்று மாலை கீட் ஹாங் சமூக மன்றத்தில் சிறப்பாக நடந்தது.

“வாழ்க தமிழ்மொழி” என்ற பாரதியார் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக ஒலிக்க நிகழ்ச்சி தொடங்கியது.

அடுத்ததாக, செல்வி கயல்விழி மதிவாணன் சிறப்பாக பரதம் ஆடினார். இதை நன்கு கவனித்து அவரையும் அவரின் பெற்றோர்களின் பாராட்டிய பிறகே பட்டுமன்றத்தை தொடங்கினார் திரு பாக்கியராஜ்.

பட்டிமன்ற கலைக்கழகத்தின் தலைவர் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் வரவேற்புரை வழங்கினார்.

பேச்சாளர்களுக்கும், புரவலர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

இந்த பட்டிமன்றத்துக்கு நான் முதல்ல போற மாதிரி திட்டம் ஏதும் இல்லை. அதே நேரம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில நடக்கவிருந்த “சிவகாமியின் சபதம்” நாடகத்துக்கு வருவதாக அவர்களுடைய முகநூல் ‘நிகழ்வு பக்கத்தில்’ சொல்லியிருந்தேன். ஒரு வாரம் முன்னதாகத்தான் அதை மாத்தி பட்டிமன்றத்துக்கு செல்ல முடிவெடுத்தேன். அதற்கு ஒரு காரணம் திருமதி அகிலாவும், திரு மன்னை ஐயாவும். மற்றொரு காரணம், கடந்த சில ஆண்டுகளாக பட்டிமன்ற கலைக்கழகத்தின் பட்டிமன்றங்களை முடிந்த வரை தொடர்ந்து கேட்டு வருகிறேன். 90க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை மேடை ஏற்றிய பெருமை இவர்களுக்குண்டு.

மேலும் படிக்க…

தமிழ் விக்கிபீடியா

என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சொன்னார், ஒப்படைப்புகளுக்கு (assignments)
‘விக்கிபீடியா'(Wikipedia) தரவுகளை விவரப்பட்டியலில்(References)
சேர்க்கக்கூடாதென்று. பெரும்பாலான பல்கலைக்கழங்களில் அது ஏற்றுக்கொள்ள
படமாட்டாது. இதற்கு காரணம் Wikipediaவில் உள்ள தரவுகள்/உள்ளீடுகள் போதிய
அளவு சரிபார்க்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும்
அதில் பதிவேற்றம் செய்யலாம். இப்போது எப்படி என்று தெரியவில்லை. இது
ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ் விக்கிபீடியாவின் தரம் மேம்பட்டது. அதில் எப்படி பதிவேற்றம் செய்கிறார்கள்,
அது எப்படி சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது 2015ல்
கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்
இதற்கென நடந்த அமர்வில் இதன் நிர்வாகிகள்/ஒருங்கிணைப்பாளர்கள்
விளக்கினார்கள். நான், திண்ணப்பன் ஐயா, பேராசியர் மு இளங்கோவன் இன்னும்
சிலர் இதில் கலந்துகொண்டோம். அது மட்டுமல்ல, இதில் பதிவேற்றம் செய்பவர்கள்
பொரும்பாலும் தமிழ் நன்கு தெரிந்த, கற்றுத்தேர்ந்த தமிழ் ஆசான்கள், பேராசிரியர்கள்,
எழுத்தாளர்கள். எனக்கு தெரிந்து இதில் பெரும் பங்காற்றியிருப்பவர் பேராசிரியர்
மெய்கண்டான் ஐயா அவர்கள். திருக்குறளின் பரிமேலழகர் உரையினை முழுவதுமாக
பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் திருக்குறளை யாப்பு வடிவில் மட்டுமில்லாமல்
சொற்களாக எளிதில் மாணவர்களுக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார் மெய்கண்டான்
ஐயா(சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). இவர் பல சங்க இலக்கிய நூல்களை,
பாரதிதாசன் பாடல்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவேற்றங்களை
செய்துள்ளார். 'விக்கிமூலம்' பக்கத்தில் அதை நீங்கள் பார்க்கலாம். இவர் பங்கேற்பை
சிறப்பு செய்யும் வகையில் இவருக்கு ‘களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்’
கொடுத்திருக்கின்றனர் விக்கி அன்பு குழுமத்தினர். இவருடைய பதிவேற்றங்களை
பயன்படுத்தும் ஆய்வாளர்கள் பலர் உள்ளனர். இதெல்லாம் எதற்காக சொல்கிறேன்
என்றால் தமிழ் விக்கிபீடியா நம்பத்தகுந்தது, அதில் மாணவர்களுக்கு தேவையான பல
வளங்கள் உள்ளன, அதை தைரியமாக பயன்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்த
வேண்டும் என்ற நோக்கத்திலேயே.

சரி, எதுக்கு தமிழ் விக்கிபீடியா குறித்து இவ்வளவு பெரிய விளக்கம் என
கேட்குறீர்களா? சொல்கிறேன்…

சிங்கையின் தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக 'இளைமைத்தமிழ்.காம்'மும்
(www.ilamaithamizh.com), உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும் இணைந்து
நடத்திய விக்கிபீடியா கட்டுரை பதிவேற்ற நிகழ்வு 15-ஏப்ரல்- 2017, சனிக்கிழமை
காலை சிறப்பாக நடந்து முடிந்தது.

ஒன்றல்ல, இரண்டல்ல, இருநூற்றம்மைபது கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
அதுவும் முற்றிலும் சிங்கப்பூர் தொடர்பான கட்டுரைகள். இந்த சாதனையை செய்து
காட்டியவர்கள் நம் மாணவர்கள். அதற்கு துணை புரிந்த ஆசிரியர்களையும்
பெற்றோர்களையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

இப்படியொரு திட்டத்தை யோசித்து அதை செயல்படுத்திய இளமைத்தமிழ.காம்
நிறுவனர் திரு பாலு மணிமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்கு ஒப்புதல்
தெரிவித்து தமிழ்மொழி விழாவில் இணைத்துக்கொண்ட வளர்தமிழ் இயக்கத் தலைவர்
திரு ரா ராஜாராம், திட்டத்தை இணைந்து செயல்படுத்திய உமறுப்புலவர் தமிழ்மொழி
நிலைய இயக்குனர் திரு அன்பரசு மற்றும் நிலைய ஆசிரியர்கள் ஆகியோருக்கும்
வாழ்த்துகள்.

தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்ற முழக்கத்தை அடிப்படையாக
கொண்ட தமிழ்மொழி விழாவில் கூடதலாக தமிழில் எழுதுவோம் என்பதையும்
சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இது ஒரு பெரும் முயற்சி. குறுகிய
காலத்தில் இதை செய்து முடித்திருக்கிறார்கள்.

இப்ப இருக்கிற காலகட்டத்தில, தமிழில் பேச வச்சிடலாம், படிக்க கூட வச்சிடலாம்
ஆனா எழுத வைக்கிறது அவ்வளவு சுலபமல்ல. அதை பாலு கச்சிதமா ஆசிரியர்கள்,
பெற்றோர்கள் துணையோடு மாணவர்களை வைத்து செய்து காட்டியிருக்கிறார்.
பாலுவை கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக கவனித்து வருகிறேன். இன்று
சிங்ககையில் பேர் குறிப்பிடும் அளவில் உள்ள நல்ல பல எழுத்தாளர்களை,
கவிஞர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாலுவுக்கு உண்டு. அதை யாராலும் மறுக்க
முடியாது. இவரின் பட்டறையில் தீட்டப்பட்ட எழுத்தாணிகள் நிறைய. அதே போல்
இவர் தமிழ்மொழி விழாவில் தனித்தன்மையா வாய்ந்த நிகழ்ச்சிகள் படைப்பவர்.
முதன் முதலில் எஸ்ரா அவர்களை கூட்டி வந்து வளரும் எழுத்தாளர்களுக்கு பட்டறை
நடத்தியது முதல் கவிஞர் நா முத்துக்குமார் பாடல்களை மாணவர்களிடத்தில் கொண்டு
சேர்த்தது வரை அனைத்தும் நீண்டகால நோக்கத்தை அடிப்படையாக வைத்து
நிகழ்ச்சி செய்பவர்.

அந்த வகையில் இளமைத்தமிழ்.காம் என்ற இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம்
கடந்த நான்காண்டுகளாக தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவுடன் ஆதரவில்
உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரை,
புகைப்படம், காணொளி போட்டி நடத்தி அதில் மாதம் 15 பேருக்கு $30 வெள்ளியென
மொத்தம் $450 வெள்ளி பரிசாக அளித்து வருகிறார்.

அந்த இளமைத்தமிழ்.காம் மூலம் எடுத்த மற்றொரு முன்னெடுப்பு தான் இந்த
விக்கிபீடியா கட்டுரை பதிவேற்றம். 15-ஏப்ரல் அன்று காலை 9:00 மணியிலிருந்து

மதியம் 1 மணி வரை இந்த சாதனை நிகழ்வு அரங்கேறியது. இதை சிங்கப்பூர் சாதனை
புத்தகத்தில் இடம் பெற செய்திருக்கலாம் என்று வளர்தமிழ் இயக்கத்த தலைவர் திரு
ராஜாராம் கூறியதாக திரு அன்பரசு தன் நோக்கவுரையில் கூறினார்.

பின்னர் மணி 1:00க்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் உமறுப்புலவர் அரங்கத்தில் விழா
தொடங்கியது. இதுவரை நான் கலந்துகொண்ட அத்தனை விழாக்களிலும் 'வாழ்க்
தமிழ்மொழி..' என்ற பாரதியார் பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்ததை
கேட்டேன். முதன்முறையாக ஷபீர் இந்தாண்டு தமிழ்மொழி விழாவுக்கு பாடிய
'அழகியே..' என்ற பாட்டு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்ததை இங்கு கேட்டேன்!!

வரவேற்புரையாற்றிய முனைவர் சந்தன்ராஜ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும்
வரவேற்றார். குறிப்பாக உதவிபுரிந்த ஆசிரயர்களை கூட்டத்தினருக்கு அடையாளம்
காட்டினார்.
இந்த முயற்சியில் பங்கெடுத்தவர்கள் சார்பாக ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும்
பேசினார்கள்.
தஞ்சோங் கட்டோங் பள்ளியின் ஆசிரியர் திருமதி மீனாட்சி சபாபதி பேசும்போது
பெற்றோர்களின் பங்கு குறித்து பாராட்டி பேசினார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உயர்தமிழ் படிக்கும் மாணவி பூர்வா இது
மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நிறைய கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

நோக்கவுரையாற்றிய, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குனர் திரு அன்பரசு,
சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் திரு எஸ்.ஈஸ்வரன் பேசியதை குறிப்பிட்டு
தமிழ்மொழி விழா தொடங்கிய நோக்கத்தை தாண்டி தொழில்நுட்ப உதவியுடன்
அடுத்த தலைமுறையை சென்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

வாழ்த்துரை வழங்கிய வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு ஆர். இராஜாராம்
இத்தகைய நிகழ்வுகள் இளையர்களை மொழியின்பால் ஈர்த்து அவர்களை தொடர்ந்து
செயல்பட வைக்கும் என்றார். மேலும் தான் காலையிலிருந்து நிகழ்வை
பார்த்ததாகவும், ஊடகங்களும் நேரடியாக ஒலிபரப்பு செய்ததாகவும் கூறினார்.
ஆசிரியர்கள் ஒருவர் வானொளியில் இதுகுறித்து பேட்டி கொடுக்கும்போது தாங்கள்
அடுத்த முயற்சியாக 1000 கட்டுரைகள் பதிவேற்றம் செய்ய மாணவர்களுக்கு
உதவுவோம் என்று சொன்னதாக கூறினார். இதில் பெற்றோர்களும் மறைமுகமாக
பங்கெடுத்திருப்பது நல்லதே என்றும் தெரிவித்தார்.

நன்றியுரையாற்றிய இளைமைத்தமிழ்.காம் நிறுவனர் திரு பாலு மணிமாறன் இந்த
முயற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,
ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக இதற்காக கடுமையாக
உழைத்த ஆசிரியர் சந்தன்ராஜ் மற்றும் சுபா செந்தில்குமார் இருவருக்கும் மனமார்ந்த

நன்றியை தெரிவித்தார். போட்டியில் வெற்றியாளர்களை தேர்தெடுத்த
(இரகசிய)நடுவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்காக உதவிபுரிந்த ஆசிரியர்களுக்கும், தொண்டீழியர்களுக்கும் நினைவு
பரிசு வழங்கப்பட்டது.

மொத்தம் 28 பள்ளியில் இருந்து வந்த 250 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 20
கட்டுரைகளுக்கு $50 வெள்ளி பரிசு கொடுக்கப்பட்டது.

சிறந்த மூன்று கட்டுரைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு அளிக்கப்பட்டது.
முதல் பரிசு பெற்றவர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உயர்தமிழ் படிக்கும்
ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி மாணவி செல்வி விஷ்ணு வர்தினி. இரண்டாம் பரிசை
பெற்றவர்கள் செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலை பள்ளியை சேர்ந்த சிராப்திக் மற்றும்
மாணவர்கள் குழு.
மூன்றாம் பரிசை வென்றவர் தெமாசாக் தொடக்கக் கல்லூரியை சேர்ந்த மாணவி
சமிக்‌ஷா அஷோக் குமார்.

சிறந்த மூன்று பள்ளிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்
பரிசை தெமாசாக் தொடக்கக் கல்லூரி தட்டிச்செல்ல இரண்டாம் பரிசு டாங்களின்
உயர்நிலைப்பள்ளிக்கும், மூன்றாம் பரிசு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திற்கும்
அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சி நெறியாளர்கள் செல்வி அஷ்வினி செல்வராஜ்ஜும், திருமதி சுபா
செந்தில்குமாரும் மிக நேர்த்தியாக, எளிமையாக நிகழ்ச்சியை தொகுத்து
வழங்கினார்கள்.

சரி இந்த கட்டுரைகளை எப்படி படிப்பது என கேட்குறீர்களா? பதிவேற்றம்
செய்யப்பட்ட கட்டுரைகள் விக்கிபீடியா ஒருங்கிணைப்பாளர்களால் சரிபார்க்கப்பட்டு
பொதுவெளிக்கு விரைவில் வரும்.

இது ஒரு பெரிய முயற்சி. தொலைநோக்கு பார்வையுடன், தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி சிங்கப்பூரையும், மாணவர்களையும் முன்னிறுத்தி நீண்டகாலம்
நிலைத்திருக்க ஆவணப்படுத்தப்படுத்தபட்ட ஒரு கூட்டு முயற்சி. இந்த நிகழ்வு
இந்தாண்டு தமிழ்மொழி விழாவின் மகுடம் என்றால் மிகையல்ல.

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னூட்டம்

#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

https://ta.m.wikisource.org/wiki/பகுப்பு:திருக்குறள்