கவிமாலை விழா

கடந்த 30-ஏப்ரல்-2017, ஞாயிறன்று மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கவிமாலையின் செந்தமிழ்ச் செல்வர் வை திருநாவுக்கரசர் புகழ் போற்றும் விழாவும், தமிழ் மொழி மாத நிறைவு விழாவும் ஒருங்கே நடந்தது.
தலைமை உரையாற்றிய கவிமாலையின் தலைவர் திரு இறை மதியழகன், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சான்றோர் ஒருவரை போற்றும் விழாவாக தமிழ் மொழி மாதத்தில் விழா எடுத்து வருவதாகவும், உள்ளூரில் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களின் பெருமையை போற்றும் வண்ணம் கடந்த ஆண்டு மூவருக்கு புகழாரம் சூட்டிய கவிமாலை இவ்வாண்டு உள்ளூர் படைப்பாளிகள் பலருக்கு தளம் அமைத்து கொடுத்த திரு வை. திருநாவுக்கரசு அவர்களுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறது என்றார்.

மாணவர்கள் கவிதை வாசித்தல்
—————————————————–

 பொங்கோல் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மிக அழகாக முத்திரை கவிதைகளை பெரும்பாலும் பார்க்காமல் படித்தனர். நம்முடைய கவிதையே நாமே மறந்து போகும் நிலையில் மாணவர்கள் மற்றவர்களின் கவிதைகளை சிறப்பாக நினைவில் வைத்து ரசித்து படித்தனர். மூளையை துளைத்த கவிதை, சிறந்த கற்பனை  கவிதை, மனதுக்கு பிடித்த கவிதை என கடைசி நாள்களில் வெளியிடப்பட்ட ஒரு சிலரது கவிதைகள் தவிர, மற்ற அனைத்து ‘முத்திரை வரிகளும்’ மேடையில் பல சுற்றுகளாக படிக்கப்பட்டன. இதில் சிறந்தது, சிறப்பில்லாதது என்று மாணவர்கள் பிரித்து பார்க்கவில்லை. நல்ல பயிற்சி. சிறந்த முயற்சி. அந்த மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட நினைவு பரிசு பார்வைக்கு நன்றாக இருந்தது. என்ன பரிசு என்று அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக கவிதைப் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அந்த பயிலரங்கில் கலந்துகொண்டு கவிதை எழுதும் போட்டியில் பென்டமியர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த துரை குமரனும், குழலி சரவணனும் முதல் பரிசைப் பெற்றனர். இவ்வாண்டு முதல்முறையாக மாணவர்களுக்கு கவிதை மனனப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிதை மனனப் போட்டியில் ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கோபிகா நரசா லட்சுமியும் போத்தோங் பாசிர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முத்து சுவேதாவும் முதல் பரிசை வென்றனர்.
கவிதைப் பயிலரங்கு நடத்திய மன்னை ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஏப்ரல் மாதத்திற்கான ‘எதிர்மறை’ எனும் தலைப்பில் கவிதைப் போட்டிக்கான கவிதை எழுதி வென்றவர்களுக்கும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க…

கவிமாலையின் முத்திரை வரிகள்

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு, ஓர் புத்தாக்க சிந்தனையாக கவிஞர்களின் சிறந்த கவிதையை, முத்திரை வரிகளை அதற்கேற்ப கருத்து படங்களுடன் சிறப்பான வடிவமைப்பில் இப்போது எல்லோரும் அதிகம் புழங்கும் ‘வாட்ஸப்’, முகநூலில் தமிழ்மொழி விழாவினையொட்டி தினந்தோறும் வெளியீடு செய்து வந்தது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தமிழறிஞர்கள் முதல் தமிழ் ஆர்வலர்கள் வரை, புலவர்கள் முதல் புரவலர்கள் வரை, மாணவர்கள் முதல் மந்திரிகள் வரை, சிங்கையில் மட்டுமன்றி பல வெளிநாட்டிலுள்ள தமிழர்களையும் சென்றைடைந்தது. இதற்காக உழைத்தவர்கள் பலர். இது கவிமாலை, கவிஞர்களுக்கு செய்த மிகப் பெரிய சிறப்பு. இதை தொடக்கத்திலிருந்தே மிகவும் ஊக்குவித்து ஆதரவு நல்கிய வளர்தமிழ் இயக்கித்தின் தலைவர் திரு இராஜாராம் அவர்களுக்கு நன்றி.

எதையும் வேகமாக கடந்து செல்லும் இந்த அவசர யுகத்தில் சின்னதாய், அழகாய் நான்கு வரிகளில் கவிதையை வெயீடு செய்யும் இந்த திட்டத்தை யோசித்து, வடிவமைத்து, சிறப்பாக செயல்படுத்திய கவிமாலை தலைவர் திரு இறை மதியழகன் அவர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும், ‘முத்திரை வரிகள்’ தேர்வு குழுவிற்கும் மற்றும் திட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

மேலும் படிக்க…

பழமொழி பேசலாம்

‘பழமொழி பேசலாம்’ என்ற நிகழ்ச்சியை “உறுமி” தமிழ் மின்னிதழ் என்ற அமைப்பு நேற்று(29-ஏப்ரல்-2017, சனிக்கிழமை) காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது.

இது என்ன நிகழ்ச்சினு கேக்குறீங்களா?

இப்ப இந்த இளைஞர்களிடையே ‘தம்படம்’ என்ற Selfie மிக பிரபலமாயிருக்கு. அதையே ‘தம்-காணொளி'(selfie-video) பதிவா உயர்நிலைப்பள்ளி மாணவர்களை செய்யச்சொல்லலாம் என்ற அதில் ஒரு போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறார் ‘உறுமி’யின் தலைவர் திரு கல்யாண்குமார் . இவர் பலதுறைதொழிற் கல்லூரியில் மென்பொருள் துறையில் பணி புரிந்து வருகிறார்.

தமிழ்மொழியை மாணவர்களிடைய கொண்டு செல்வதின் ஒரு யுக்தியாக அவர்களை ‘பழமொழிகள்’ பேசச்சொல்லி அதை அவர்கள் பாணியில் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் ‘YouTube’ல் வலம் வரச்செய்திருக்கிறார். இது நிறையபேர்களுக்கு

மேலும் படிக்க…

அதிபதியின் ‘தெனாலி’

அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம் தமிழ்மொழி விழாவினையொட்டி இந்தாண்டு ஏப்ரல் 20(வியாழன் மாலை மணி 3:30), ஏப்ரல் 21 (வெள்ளி மாலை மணி 3:00, இரவு மணி 8:00), ஏப்ரல் 22 (சனி இரவு மணி 8:00) ஆகிய மூன்று நாள்கள் நான்கு காட்சிகள் “தெனாலிராமன் – விகடகவி” என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். மாலை காட்சிகள் மாணவர்களுக்கானது.

நான் வெள்ளிக்கிழமை இரவு மணி 8:00 காட்சிக்கு 7:00 மணிக்கே சென்றுவிட்டேன்.
நாடகம் குறித்த கையேடு உதவியாக இருந்தது. என்னுடைய இந்த பதிவு இந்த காட்சியை குறித்து மட்டுமே.

நாடகம் தொடங்கும் முன் ‘யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம், காணொளியில் பதிவு செய்யலாம், முகநூலில் நேரலையாக ஒளிப்பரலாம்’ என அறிவிப்பு செய்தது எதிர்பார்க்காதது. வரவேற்கத்தக்க அறிவிப்பு.

சரியாக மணி 8:00க்கு நாடகம் தொடங்கியது. முதலில் சாமியார் ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுடன் அனைவரது இருக்கைக்கு அருகில் சென்று நலம் விசாரித்து வரவேற்றார். சிஷ்யர்களாக வந்த குழந்தைகள் அனைவரும் அழகாக சில பார்வையாளர்களிடம் சென்று ‘வாங்க, வணக்கம்’னு பேசியது மிக அழகு. திரை விலகுவதற்கு முன்னரே வித்தியாசமான இந்த வரவேற்பு, நாடகத் தொடக்கம் நன்றாகயிருந்தது.

மேலும் படிக்க…

கவிச்சாரல்

அவாண்ட் நாடகக் குழு இந்தாண்டு தமிழ்மொழி விழாவையொட்டி சே.வெ. சண்முகத்தின் நாடகத்தை மலாய் மரபுடைமை நிலையத்தில் இரண்டு நாள்களில் (21-ஏப்ரல்-2017,22-ஏப்ரல்-2017) மூன்று காட்சிகளாக(சனிக்கிழமை மதியம் -1, வெள்ளி, சனி மாலை-2) அரங்கேற்றினார்கள்.

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் தொகுத்து வெளியிட்ட எழுத்துச்சிற்பி சே வெ சண்முகத்தின் கல்யாணமாம் கல்யாணம், ‘‘அதுதான் ரகசியம்’, ‘நாலு நம்பர்’, ‘மீன் குழம்பு’, ‘மாப்பிள்ளை வந்தார்’ என்ற ஐந்து மேடை நாடகங்களை ஒன்றாக இணைத்து ஒரே நாடகமாக மேடையேற்றினார்கள். எழுத்துச்சிற்பி சே வெ சண்முகத்தை பற்றிய குறிப்பு படத்தில் உள்ளது.

என்னுடைய இந்த பின்னூட்டம் சனிக்கிழமை மதியம் பார்த்த காட்சிக்கு தொடர்புடையது. வேறு காட்சிகள் பார்த்தவர்களுக்கு இது பொருந்தாமல் போகலாம். ஏனென்றால், நாடகத்தில் ஒவ்வொரு காட்சியும் ஒரு புதிய படைப்பு.

காட்சி – 1
———–
கதாபாத்திரங்கள் எல்லொரும் ஒன்றாக ‘டீபாய்’யை சுத்தி நின்னு ஏதோ செய்வார்கள். அவ்வளவு தான் காட்சி. சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல. ஆனா அந்த பழைய காலத்து பிண்ணனி இசை ஈர்த்தது.

மேலும் படிக்க…