29 -ஆம் பல்கலைக்கழகப் கருத்தரங்கு 2017

29 -ஆம் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி/ இலக்கியக்
கருத்தரங்கு 2017
யீசூன் தொடக்கக் கல்லூரி இந்தியக் கலாச்சார மன்றம், பல்கலைக்கழகப் புகுமுக
வகுப்புகளுக்கான தமிழ்மமொழி / இலக்கியக் கருத்தரங்கை நாளை நடத்தவுள்ளது.

நாள் : 22/04/2017 (சனிக்கிழமை)
நேரம் : காலை 8.30 – 12.30 மணி வரை
இடம் : யீசூன் தொடக்கக் கல்லூரி அரங்கு இவ்வாண்டின் கருப்பொருள்: “இளையரும்
இலக்கிய ஈடுபாடும்’’ (Youth and their Literary Involvement)

நோக்கம்: இலக்கியம் நமது சமூகத்தின் கண்ணாடி என்று கூறலாம். கடந்த 50
ஆண்டுகளாகப் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூல்கள் யாவும் மின்னிலக்கமாக்கப்பட்டு
இணணயத்தில் கண்டு படித்தறியும் நிலையை நாம் இப்போது பெற்றுள்ளோம். இதை
மாணவரிடையே பரப்பி அவர்களது ஈடுபாட்டைப் பெருக்க வேண்டும்.
1. இளையர்களிடையே சில தற்கால இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தி
அவர்களிடையே இலக்கிய ஈடுபாடு குறித்த ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி
ஆர்வத்தைத் தூண்டுதல்.
2. எதிர்காலத்தில் இலக்கிய ஈடுபாட்டை நம் இளையர்களிடையே அதிகரிக்கும்
வழிவகைகளை ஆராய்தல்.
நிகழ்ச்சி அமையும் விதம்:
படைப்புகள்:
— — — — — — –
1.இலக்கிய ஈடுபாட்டின் அவசியம், பண்பு வளர்ச்சியில் அவற்றின் பங்கு, இலக்கிய
ஆர்வம் கொண்ட சில இளையர்களின் அறிமுகம், இலக்கிய வளர்ச்சிக்கு நமது நாடும்
அமைப்புகளும் வழங்கி வரும் ஆதரவுகள், ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் இன்றைய
இளையரின் நிலை, இலக்கிய ஈடுபாடு வளர மூத்தோரின் வழிகாட்டுதல்
போன்றவைக் குறித்த ஒரு படைப்பு. (YJC)
2. மூன்று கல்லூரிகள் – நமது நாட்டு எழுத்தாளர்கள் சிலரின் கவிதை, நாடகம்,
சிறுகதை குறித்து ஒரு சிறு படைப்பை முன்வைப்பார்கள். (சிப்பிக்குள் முத்து –
இலக்கிய அறிமுகம்) (from Tamil digitalised texts) NLB ( skit, ted talk, talk show)
எழுத்தாளர் அறிமுகத்தோடு படைப்புகளை அறிமுகம் செய்வர்.(SAJC, JJC, MI )

3.இப்படைப்புகளை ஒட்டி பார்வையாளர்களிடம் ஒரு புதிர்ப் போட்டி நடைபெறும்.
(Kahoot) பரிசுகள் (காசோலைகள்) வழங்கப்படும்.

இடைவேளை…….

4.மாணவர்கள் குழு கலந்துரையாடல் – ‘இலக்கிய ஈடுபாட்டை வளர்ப்பதற்கான
வழிவகைகளை’ ஆராய்ந்து – கொடுக்கப்படும் கணினியில் தங்கள் கருத்துகளை உடன்

பதிவேற்றம் செய்வர். (45 நிமிடங்கள்) ஆசிரியர்கள், பெரியவர்கள் அவர்களுக்கு
வழிக்காட்டிகளாக (facilitators) இருப்பபார்கள்.

5.கருத்தாடல் – குறிப்பிட்ட (கவிதை, நாடகம், சிறுகதை) எழுத்தாளர்கள், வளரும்
இளம் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் (தலைப்பு – இலக்கியத் தேடல்) (45
நிமிடங்கள்) கருத்தாடல் நிகழ்த்துவார்கள். ஒரு தலைவரின் வழிகாட்டுதலோடு. (இது
நடைபெறும்போது மாணவர்களின் குழுப்படைப்புகள் ஆராயப்பட்டுச் சிறந்த 5
படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.)

6.பரிசளிப்பு – படைப்பாளர்களுக்கும் , வெற்றி பெற்றவர்களுக்கும்

7.முடிவு

பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மேனிலை
(குறிப்பாக உயர்தமிழ் படிக்கும்) மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும்,
பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். இது
இளையர்களே தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு என்பதால்
நிச்சயமாக மற்ற மாணவர்களுக்கும் பயனளிக்கும்.
ஒரு முன்னேற்பாடு – வருகையளிக்கும் மாணவர்கள் booksg என்ற
இணையத்தளத்திற்குச் சென்று நமது மின்னிலக்கம் செய்யப்பட்டுள்ள தமிழ்
நூல்களைப் (Tamil digital heritage collection) பார்வையிடலாம். புத்தகங்கள்,
நூலாசிரியர்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். (போட்டி உண்டு – பரிசுகளும் உண்டு)
பெரியோர்களும் இளையர்களின் சிந்தணைப் போக்கைப்புரிந்து கொள்ளலாம்.
இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை.

முயற்சி வெற்றியடைய உங்கள் நல்லாதரவை அன்புடன் நாடுகிறோம்
நன்றி. வணக்கம்.

இப்படிக்கு
கருத்தரங்கக் குழு
யீசூன் தொடக்கக் கல்லூரி

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

தமிழ்மொழி விழா 2017

“தமிழ்மொழி விழா 2017” வரும் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2ஆம் தேதி மாலை,
வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் அவர்களால்
அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படுகிறது.

11ஆம் ஆண்டாக நடைபெறும் தமிழ்மொழி விழா கொண்டாட்டங்களை வளர்தமிழ்
இயக்கம் ஒருங்கிணைக்கிறது. மாதம் முழுதும் நடக்கும் இந்நிகழ்ச்சி தமிழ்
ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

இந்தாண்டு தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்மொழி சார்ந்த பாடல்,
நடனம் மற்றும் நாடகங்கள் இடம்பெறும். உள்ளூர் இளையர்களை முன்னிறுத்தி சில
அங்கங்கள் இருக்கும். முக்கிய இரண்டு இளைஞர்கள் அங்கங்களை சொல்ல
வேண்டுமானால், ஷபீர் மற்றும் பிரவீன் சைவி பங்குபெறும் அங்கம்.

ஷபீர் தமிழால் இன்று தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். இவருடைய இசையில்
வெளிவர இருக்கும் ‘சகா’ படத்திலிருந்து ஒரு பாடலைப் பாட உள்ளார்.

பிரவீன் சைவி இன்று தமிழகத்தில் பின்னணி பாடல் துறையில்
முத்திரைப்பதித்துள்ளார். அவரின் பாடலும் இடம்பெறும்.

இது தவிர சிறார்களின் அழகிய நடனம், கண்ணதாசன், பாரதிதாசன் மற்றும்
இன்றைய கவிஞர் தாமரையின் பாடல்கள் யாவும் இடம்பெறும்.

‘வாழும் மொழி, வாழும் மரபு’ மூன்றாவது பதிப்பு – ‘சொல்லிச் செல்லும்
சொல்லடைகள்’ புத்தகத்தில் பழமொழிகள் விளக்கத்துடன் எளிமையாக
கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளை அடிப்படையாக
வைத்து கருத்துள்ள நாடகம் அரங்கேறும்.

இளையர்களை கவரும் வண்ணம் சில புதிய தமிழ் பாடல்கள் இடம்பெறும்.

இது தவிர பல சிறப்பு அங்கங்கள் உள்ளது.

இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் யார் என்று உங்களுக்கு ஆவலாக இருக்கும்.
ஆனால் அதச் சொல்ல மாட்டேன்.

ஆக மொத்ததில் நல்ல இயல், இசை, நாடக விருந்து காத்துக்கொண்டிருக்கிறது.

சரி, எங்க நடக்கிறது என்று கேட்கிறீர்களா. முதன் முறையாக புதிய எம்.ஈ.எஸ்
மீடியாகார்ப் அரங்கத்தில் தான். வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக்குழு மற்றும் வசந்தம் ஒளிவழியின் ஆதரவில் தமிழ்மொழி விழா தொடக்க
நிகழ்ச்சி மாலை 6:30 முதல் 8:30 நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அழைப்பிதழ் உள்ளவர்கள் அரங்கத்திற்கு வரலாம். மற்றவர்களுக்கு அரங்கம்
அவர்களுடைய வரவேற்பறை தேடி வரும். நீங்கள் செய்ய வேண்டியது
தொலைக்காட்சியை 'வசந்தம்' ஒளிவழிக்கு மாற்றவேண்டியது மட்டும் தான்:)

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்

நன்றி : Anbarasu Rajendran