வேலைக்காரன்

கருத்து கருத்து கருத்து…..படம் முழுக்க ஒன்லி கருத்து.
சிவகார்த்திகேயனின் சிறந்த நடிப்பு, மக்களை ஈர்க்கும் நல்ல கதைக் கரு, மனதில் பதியும் நறுக்கென்ற வசனம், நயன்தாரா என்ற மந்திரச் சொல்(!) இருந்தும் படம் சோபிக்கவில்லை.

படத்தை பாதிக்கு மேல் ‘லாஜிக்’ தின்றுவிடுகிறது. ஒரு தொழிலாளி CEO ஆவது, குரு நண்பனாவது, 12 மணிக்கு ஊரே விளக்கு போடுவது, எல்லோரும் சிவகார்த்திகேயனின் வானொலி பேச்சை மட்டும் எப்போதும் கேட்டுகொண்டிருப்பது, முதலாளி தொழிலாளியாய் கடைசி வரை யாருக்கும் தெரியாமல் நடிப்பது, பல நிறுவன தொழிலாளர்கள் ஒன்றாக இணைவது, ஒரு நிறுவனத்தின் பொருளை சாப்பிடும் பலரில் ஒரு குழந்தை மட்டும் இறப்பது…..இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

நல்ல வேளை நயன்தாராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் காதல் மலர்வதை விலாவாரியாக காண்பிக்காமல் போனார்கள். நயன் காதல் காட்சிகளில் முடிந்தவரை சிவாவை தொடாமல் நடித்திருக்கிறார். ரோபோ சங்கருக்கு ஏதும் கால்ஷீட் பிரச்சனையா என்று தெரியவில்லை, ஆள் திடீரென காணாமல் போய்விடுகிறார். பிரகாஷ்ராஜ் ‘டம்மி வில்லன்’னாக வருகிறார். நம்ம புன்னகை இளவரசி ஸ்னேகா சோகத்தை புழிந்து கொடுக்கிறார்.

சம்பந்தமில்லாமல் ஒரு டூயட் பாடல், போடணுமே என்று போட்டிருக்கிறார்கள். பாடலில் கீழே உள்ள ஆங்கில ‘சப் டைட்டில்’ பார்த்து பல வரிகளை புரிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. ஒரு பாடலும் நம்மை ஈர்க்கவில்லை. எடிட்டிங்கும் சொதப்பல். ஒளிப்பதிவு பரவாயில்லை. இயக்கம் சுணக்கம்.

சிவகார்த்திகேயன், தன் நண்பனின் இறுதி ஊர்வலத்தில் ஆடும் நடனத்திற்கு நிறைய உழைத்திருக்கிறார். தன் வீட்டிற்கு ‘stabilizer’ விற்க வரும் விற்பனையாளரிடம் பேசும் வசனங்கள், யதார்த்தை விளக்கியது. அந்த சித்தாந்தம் நிர்வாக மேலாண்மை படிப்பில் வரும் பாடத்திலிருந்து எடுத்து எல்லாரும் புரியும் வகையில் கையாளப்பட்டிருக்கிறது. மருத்துவர் கு சிவராமன் ஒரு காட்சியில் வந்து கருத்து சொல்கிறார். இப்போது கதை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும். படம் முதலிருந்து கடைசிவரை ஒரே மாதிரி ‘சீரியஸாக’வே இருப்பது திரைக்கதை ஓட்டத்தின் பெருங்குறை.

சிவகார்த்திகேயன், வளர்ந்து வரும் சிறந்த நடிகர். இப்போதிருக்கும் இளம் கதைநாயகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர். தன் உழைப்பால், திறமையால் நம் கண்முன்னே முன்னேறியவர். நல்ல கருத்துள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு, ஆனால் அதை மக்களுக்கு, அவர்களுக்கு பிடித்த வகையில் கொண்டு சேர்ப்பது மிக அவசியம். அதை அறிந்து கொண்டால் வெற்றிபெறலாம். ஆனால் இந்த முறை வேலைக்காரன், ‘அப்ரென்டிஸ்’ஸாகவே (apprentice) இருக்கிறார்.

Tumhari Sulu

Tumari Sulu ————- Here are my views about this 🎥 1.The one and only name shown, first in the title card is Vidya Balan – She is the Hero and Heroine of this movie. 2.Wondering what is meant by Sulu – Sulu is short name of Sulochana. She is a ambitious house wife takes part in all competitions whether it happens in her son’s school or in FM channels in Radio or anywhere else:) 3.Dialogues are short, sweet and apt – Like listening to people next door or sometimes within our door as well 4.Song sequences are limited and shown as short clips mostly – Situational songs and no usual Switzerland trip Bollywood duets 5.House they live still has fans with big regulator on the switch board, transistor etc. – Good visualization of a middle class Mumbai family 6.Best Scene – Sulu’s chat with the elderly caller in the midnight – Well scripted and captured 7.Emotional Scene – Tears will roll out when Sulu hug her son and cry(didn’t specify the details just to avoid telling the story) 8.Comedy Moments – Sulu’s conversation with her husband on many occasions are so natural and entertaining. No separate comedian in this movie 9.Best of Direction – Managed to portray the Night RJ role of Sulu pretty decent. Even a small slip on that part would changed otherwise 10.The only thing which is cinematic is Sulu getting a RJ job. Didn’t know becoming RJ is that easy. In general, Mrs will love to watch such a close to heart subject – Not-to-Miss movie. Tumari Sulu….Hamari Sulu👍👍👍👍

Dangal

Why Dangal is my favorite movie of this decade? 1. It demonstrates how a father should be. Father and daughter relationship re-defined. 2. It never allowed me to touch my phone during the entire show 3. It gave me feeling that I was out of a stadium having watched a thrilling wrestling match in the end 4. It will certainly have a positive influence in the minds of certain people who carry wrong notion about giving birth to girl child 5. It will change the attitude towards sports other than cricket 6. It can entertain even those people who doesn’t understand the wrestling game 7. It has no separate comedy track, unwanted scenes, duet songs, unbelievable fights, meaningless characters or senseless dialogues 8. Utmost care was taken even on the small level of details like English pronunciation and Hindi slang which matched the perfect village accent, both indoor and outdoor locations, costumes for all the characters particularly the girls, chirping of the Lizard in the background during the quiet dinner, match score card, timing, camera angle…etc 9. Finally it’s Aamir, my favorite…after Kamal:) It has few shortcomings as well 1. Getting out of NSA at 5 AM not logical where they have strict security for entering 2. The iron rod couldn’t break the glass fixed on the door Dangal -Dazzled🌟🌟🌟🌟🌟

அச்சம் என்பது மடைமையடா

“அச்சம் என்பது மடைமையடா” ——————————- கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக பல காரணங்களால படத்துக்கு போகாம(கபாலி உள்பட) இந்தப் படத்துக்கு, நம்ம சிம்புவுக்காகவும், என் பையனுக்காகவும் போனேன். (போன வாரம் ஒரு இந்திப்படம் பார்த்தத கெட்ட கனவா மறந்துட்டேன்) கதாநாயகனின் பேரையே படத்துக்கு தலைப்பா வச்சு படம் வர வேளையில கதாநாயகனோட பேரே என்னன்னு ‘கிளைமாக்ஸ்’ வர சொல்லாம இருக்கும் கௌதம் மேனனின் ‘அஞ்சாமை’ய வரவேற்கலாம். காதல அனுபவிச்சு “அவ ஒரு ஏ.ஆர் ரஹ்மான் பாடல்டா”னு நண்பர்கள் கிட்ட சிம்பு சொல்லும் போது, “‘ஹோசானா’ மாதிரியாடா மச்சான்”னு கேப்பாங்க. அப்ப சிம்பு “அதுலே கதாநாயகி நம்ம வீட்டு மாடில இருப்பா, இதுல கீழேயே நம்ம கூடவே நம்ம விட்லேயே இருக்காடா”னு சொல்லும்போது ‘தியேட்டர்’ ல விசிலும், கைக்தட்டலும் அடுத்த வசனத்தை கேட்க விடல. விஸ்வரூபம் படத்துல கமலையும், பூஜாவையும் கட்டி வைத்து முட்டிப் போட வச்சிருப்பாங்களே…அப்ப அப்பாவிய இருக்க கமல் அப்படியே சுழன்று எந்திரிச்சு சுத்தி சுத்தி அடிப்பார்ல…அந்த மாதிரி ஒரு காட்சி, சிம்புவையும், மஞ்சிமாவையும் முட்டி போட வைத்து வில்லன்கள் சுடப்போகும் போது எடுத்திருப்காங்க. அப்பவும் விசிலும், கைக்தட்டலும் பறக்கும். இந்த மாதிரி இரசிக்கும்படியான பல வசனங்கள், காட்சிகள் அப்பப்ப வரும். ஹெல்மட்டே போடாம கன்னியாகுமரி வரைக்கும் ‘பைக்’ல போற கதாநாயகனும், கதாநாயகியும் திடீர்னு ‘ஹெல்மெட்’ போடறது, ‘பைக்’ மெதுவா போற மாதிரி காண்பிக்கிறது, எதிர்த்தாப்புல பெரிய ‘டிரக்’ வேகமாக வரற்து எல்லாம் பார்த்தவுடனே சரி ஆக்ஸிடன்ட் ஆகப்போகுது, ரத்த வெள்ளத்தில் கிடக்கப் போறாங்கனு ஒரு சராசரி சினிமா இரசிகனா யூகிச்சா…அங்க வச்சாரு ஒரு டிவிஸ்ட்ட…தமிழ் சினிமா வரலாற்றிலேயே பார்த்திருக்காத ஒன்று. என்னன்னு படத்துல போய் பாருங்க. படத்துலே ‘தள்ளிப் போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதமும், பாடலும், “அவளும் நானும்” பாடலில், விஜய் யேசுதாஸ் குரலும் மிக அருமை. அதேபோல் பாரதிதாசன் வரிகளான ‘அவளும் நானும்’, ‘ஷோக்காளி’, ‘ராசாளி’, ‘இது நாள்’ ன்னு எல்லா பாடல்களும், வரிகளும் அப்படித்தான் இருக்குது. அருமை அருமை அருமை. போன வாரம் இந்திப்படத்துக்கு போனேனு சொன்னேன்ல. அது ‘கரன் ஜோஹர’ நம்பி போன ‘ஹே தில் ஹை முஷ்கில்’கிற படம். பார்த்துட்டு, ஏன்டா இந்தப் படத்துக்கு போனோம்னு கடுப்பாகி வெளிய வந்தது வேற கதை. அந்தப்படம் முழுக்க லன்டண், பாரீஸ், விய்ன்னானு எடுக்கப்பட்ட படம். கதைகளம் அப்படி. அப்ப நினைச்சேன் வெளிநாட்லேயே எடுத்தா தான் இந்திப்படம் போலனு. ஆனா ‘அச்சம்….’ படத்துல தமிழ்நாட்ல உள்ள சில இடங்கள அவ்வளவு அழகா படம் பிடிச்சி காண்பிச்சிருப்காரு ‘டேன் மெக்கர்தர்’ங்கிற ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர். இவர் ஏற்கனவே கௌதம் மேனனோட ‘என்னை அறிந்தால்’ பண்ணியிருக்காரு. அதுக்காகவும் இசைய அந்த ‘எஃபக்ட்ல’ இரசிச்சு கேக்கவும் தயவுசெய்து இந்தப்படத்தை ‘தியேட்டர்’ல போய் மட்டும் பாருங்க. கண்ணுக்கும் காதுக்கும் இனிமையான காதலுடன் கூடிய அருமையா இசை விருந்து படத்தின் முதல் பாதி. என்ன மாதிரி இளைஞர்களுக்கு(😄) இது ரொம்ப பிடிக்கும். ஆனா இடைவேளைக்குப் அப்புறம் கௌதம் மேனன் நம்மள மாதிரி ‘பாப்கார்ன்’ சாப்பிட எந்திரிச்சு போக அந்த சீட்டை நம்ம பழைய தமிழ் சினிமா தேய்வழக்கு இயக்குநர்கள் யாரோ பிடித்துக்கொள்ள படம் ‘ஆம்புலன்ஸ்’ல ஏறிடுச்சு. வண்டியே ஓட்ட தெரியாதுனு சொல்ற சிம்பு, உயிருக்கு போராடிக்கிட்டிருக்குற, பிழைக்கறது கஷட்டம்னு சொல்லப்படுற ஒரு நோயாளிய ‘ஆம்புலன்ஸ்’ல வச்சுகிட்டு ஒரு ‘ஜீப் சேஸ்’ காட்சில வண்டி ஓட்டுவாரு பாருங்க…மிடில. பைக்ல அடிபட்டு, கைய கட்டி தொங்க விட்டுருக்க சிம்பு அப்படியே நேரா மருத்துவமனையிலிருந்து போய் கட்ட கழட்டி விட்டுட்டு சண்டை போடுவாரு பாருங்க அது அடுத்த மிடில. அதக்கு பிறகு திடீர்னு திடீர்னு சர்வசாதரணமாக சுடறது, சாவுறதுனு இப்படியே போற படத்துல, ஏன் வில்லன்க கதாநாயகிய தொரத்துராங்கனு கடகடவனு சின்ன பசங்களுக்கு கதை சொல்ற மாதிரி சொல்வாங்க பாருங்க, அது இன்னொரு மிடில… அதையெல்லாம் தாண்டி மூனு வருஷத்துக்கு பிறகு, அப்படினு ஒரு டிவிஸ்ட்டோட வரும் போது, பக்கத்துல பையன்கிட்ட இப்ப ‘இதுவாத்தான்’ வருவாரு பாருனு சொன்னேன்…அதே மாதிரி வந்து நம்மளையும் ஒரு கதாசிரியராக்கிய பெருமை இந்தப்படத்தோட இரண்டாவது பாதி இயக்கனர்களுக்கு உண்டு. ஆனா இந்தப்படத்துல சிம்பு மிக இயல்பா நடிச்சிருப்பாரு. பல இடங்கள்ல கமலை ஞாபகப்படுத்துறாரு. ஒரு வேளை கமல் இரசிகன்றதால எனக்கு அப்படி தெரியுதானு தெரியல. மஞ்சிமாவும் அவர் நடிப்பும் அருமை. மொத்தத்துல படத்தை முதல் பாதிக்காக பார்க்கனும்னா பார்க்கலாம். அப்ப இரண்டாவது பாதினு கேக்கறவங்களுக்கு… “அச்சம் என்பது மடைமையடா….”

பாபநாசம் அட்டகாசம்

த்ருஷ்யம் படமோ, விமர்சனமோ, கதையோ பார்க்காததால், முழுவதுமாக இரசிக்க முடிந்தது! நெல்லை மண் சொந்தம் என்பதால் கூடுதலாக இரசிக்க முடிந்தது.
எனக்கு பிடித்த நடிகைகளில் கௌவுதமியும் ஒருவர் ஆனால் முதலில் சில காட்சிகளில் கொஞ்சம் சொதப்பல்ஸ்.
த்ருஷ்யம் மாதிரி இல்லையே என்று சொல்பவர்களுக்கு: ஐபோன் பிடித்தவர்களுக்கு சாம்சங் பிடிப்பதில்லை, அப்படித்தான்! ஆனால் கமல், கமல் தான்👍! கமல் அண்ணாச்சி அசத்தி புட்டீயளே!

பி.கு: சென்னை தமிழ், கொங்கு தமிழ், மதுரை தமிழ், இலங்கை தமிழ், இதனுடன் மற்ற மொழிகளான மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகியவற்றுடன் கலந்த தமிழ் இப்படி பல தமிழை பேசி நடித்த கமல், தான் விட்டு வைத்த நெல்லை தமிழையும் இப்போது பேசி முத்திரை பதித்து தன் நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார்!