பேரீச்சம்பழம்

சீதா : ஏங்க இந்த பேரீச்சம்பழம் வாங்குனீங்க? போன தடவையே சொன்னேன்ல இதை வாங்காதீங்கனு…

நான்: அதை இப்ப சொல்றேயேமா. நான் இதை வாங்கிட்டு வந்து வீட்டில் வச்சு ஒரு மாசம் ஆச்சே. அன்னைக்கே சொல்லியிருந்தேனா மாத்தியிருப்பேன்ல…

சீதா: நான் இன்னைக்குதானே பார்க்குறேன்.

நான்: அது, உன் தப்பு. வாங்குனவுடனே பார்த்திருக்குணும்.

சீதா: அத அன்னைக்கே பார்த்துட்டேன்….உங்கள அதுக்கப்புறம் வீட்ல இன்னைக்குதான பார்க்குறேன்…

நான் :

#இனிமே_வாரயிறுதியில_ஒருநாளாவது_வீட்ல_இருக்ணும்

ஆண்டாள்

ஆண்டாள் : பக்தா, ஆமாம் பூலோகத்தில் யாரோ ஒரு கவிஞர் என்னை பத்தி தவறாக பேசினாராமே.

பக்தன் : ஆமாம், தாயே. யாரோ ஒரு ஆய்வாளரை மேற்கோள் காட்டி அவர் சொன்னதாக தகாத சொற்களை பயன்படுத்தி பேசிவிட்டார். அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தில் பலர் இந்த மாதிரி உளறிக்கொட்டியிருக்கிறார்கள்.

ஆண்டாள் : அதானே, அந்தக் காலத்தில் என் பெருமானை அவர்கள் தூற்றாத மேடையில்லை. ஆனால், அதனால் எனக்கோ எம்பெருமானுக்கோ ஒரு இழுக்கும் இல்லையே பக்தா. நம்பிக்கையில்லாதவர்கள்தானே பேசினார்கள். சரி, பூலோகத்தில் என்னை வைத்து இதனால் ஏதும் சண்டை நடக்கிறதா?

பக்தன் : ஆமாம், தாயே. இதுதான் வாய்ப்பு என்று பத்தாஸ் கூட்டம் ஒரு பக்கம் தரமற்று அந்த கவிஞரை கழுவி ஊத்துகிறது. இன்னொரு பக்கம் கடவுள் மறுப்பாளர்கள் கருத்து சுதந்திரம் இல்லையா? அவர் ஆய்வாளரைதானே மேற்கோள் காட்டினார் என்று வக்காளத்து வாங்குகிறது. இதில் அரசியல்வாதிகள் வேற வாக்கு வங்கிக்காக உள்ளே இறங்கியுள்ளனர்.

ஆண்டாள் : சரி, முகநூல்ல போராளிகள் என்ன சொல்கிறார்கள்?

பக்தன் : அத ஏன் கேட்கிறீர்கள் தாயே…நம்ம ராசாவ மிஞ்சும் வைகையில சில பக்தாஸ் தரமற்று தூற்றுகிறார்கள். அவர்களின் முகத்திரை இப்போது கிழிந்து தொங்குகிறது. பதிவு போட தைரியமில்லாதவர்கள் அந்த கேவலமான பதிவுகளில் ‘கமன்ட்’ போட்டு திருப்தியடைகிறார்கள். “இதுவே வேறு கடவுளா இருந்தா சும்மா இருப்பாங்காளா”னு வழக்கம் போல் தூண்டி விடுகிறார்கள். இந்த பக்கம் ஆதரவு கூட்டம் ‘இதிலென்ன தப்பு’ என ஒரு சொம்பை தூக்கி கொண்டு பஞ்சாயத்து கூட்டுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், கவிஞரையும் பிடிக்காமல் காவியையும் பிடிக்காமல் போனவர்கள் சொம்பை எந்தப் பக்கம் வைக்க என தடுமாறுகிறார்கள்.

ஆண்டாள் : சரி, உன்னோட கருத்து என்ன?

பக்தன் : இதல்லாம் அப்பாவி இந்துக்களை கிளப்பிவிட்டு அவர்கள் ஓட்டு வங்கியை பலப்படுத்த இல்லுமினாட்டிஸ் பண்ற சதி வேலைனு புதுசா ஒன்ன கிளிப்பி விடலாம்னு இருக்கேன் தாயே….

ஆண்டாள் : அட பக்தி பழமே, இதெல்லாம் விட்டுவிட்டு, கடவுளை நம்பும் நீ, மனதை ஒரு நிலைப்படுத்தி உன்னால் முடிந்த வரை முடியாதவர்களுக்கு உதவி செய்.

பக்தன் : சரி தாயே, இன்றைக்கு கூடாரவள்ளி. உனக்கு பொங்கல் படைச்சிருக்கேன், சிறப்பு பூசை செய்திருக்கிறேன், என்னுடைய பக்தியை ஏற்று இந்த கூட்டத்திடமிருந்து என்னை காப்பாற்று தாயே….

முகநூல் போராளிகள்

இந்த முகநூல் போராளிகள், கோலாவ கூவி கூவி வித்து அவருக்கு கல்லாகட்ட உதவுறதோட முதல்வர் நாற்காலியிலும் உட்கார வச்சு அழகு பார்க்காம ஓய மாட்டாங்க போலையே #ப்பா_நம்மளும்_போட்டாச்சு.

வாட்ஸப்பில் பகடி

இது வாட்ஸப்பில் வந்தது…அருமையான பகடி:) 😄😄😄😄 டேய், நம்ம ஸ்கூலுக்கு ஒருத்தரை புது ஹெச் எம்மா ப்ரோமோட் பண்ண போறாங்க. யாரு கணக்கு சாரா..? இல்லை அறிவியல் டீச்சரா..? இல்லை தமிழய்யா தானே..? ம்ஹூம் அப்படின்னா இங்க்லிஷ் சார் தான்..! கிடையாது. என்னாது… அப்படின்னா அந்த ஹிஸ்டரி ஜியாக்ரபி மிஸ்சா..! இந்த வருஷம் வேலைக்கு சேர்ந்து… இன்னும் கல்யாணம் கூட ஆகாத ஜுனியர்மோஸ்ட் டீச்சருக்கா அதுக்குள்ளே ஹெச் எம் ப்ரோமோஷன்..? என்னடா சொல்றே..? இல்லைடா… நம்ம ஸ்கூல் பியூன் சசிகுமார் சித்தப்பு இல்லே… அவருதான்டா நெக்ஸ்ட் ஹெச் எம்..! என்னது… சித்தப்புவா..? ஆமாடா. ரொம்ப வருஷமாவே அவரு நம்ம எக்ஸ் ஹெச் எம் ஆபீசிலேயே… ஹெச் எம் கூடவே ஒண்ணாவே இருந்து ஹெச் எம் எங்கே போனாலும் கூடவே போயி உதவி பண்ணிக்கிட்டு இருந்தார்லே… அதுனாலே அவருதாண்டா அந்த போஸ்டுக்கு சரியான ஆளுன்னு சொல்லி… எல்லா டீச்சிங் ஸ்டாஃபும் ஒன்னு கூடி அவரையே தேர்வு பண்ண போறாங்களாம்டா. நம்மகிட்டேலாம் யாருமே கருத்து கேட்க மாட்டாங்களாடா… நாம இல்லைன்னா ஸ்கூலே இல்லையேடா மச்சான்… ஆமான்டா… பரீட்சை வரட்டும்…