திலகவதியார் – நாட்டிய நாடகம்

“இப்ப நம்ம எங்க போறோம்னு தெரியுமா? நம்ம வீரமாகாளியம்மன் கோயிலுக்கு போவோம்ல, அங்க சிவன் சன்னதிக்குப் பின்னாடி ஓரத்துல நாலு பேரோட சிலை வச்சிருப்பாங்க தெரியுமா?”னு என் மனைவி என் மகளிடம் கேட்க, “ஆமாம்மா, அப்பா கூட அங்க நின்னு அந்த சாமிககிட்ட பேசிட்டிருப்பாங்களே?” என்று அவள் என்னை வம்பிழுக்க, சிரித்துக்கொண்டே, “ஆமாம், அங்க இருக்கிற நால்வர்ல, முதல்ல உள்ள சாமி கையில, நீ ‘பீச்சு’க்கு மண்ல விளையாட எடுத்துட்டு போவையே, நீளமா மண்ணள்ளுற கரண்டி, அதே மாதிரி வச்சிருப்பார்ல, அவர் பேர் தான் ‘திருநாவுக்கரசர்’. அவரோட அக்கா பெயர் ‘திலகவதியார்’. இவரு இங்க சாமியா நிக்க காரணம் அவங்க அக்கா தான். அவங்கள பத்தின நாட்டிய நாடகம் பார்க்கத்தான் இப்ப நம்ம போயிட்டுருக்கோம்”னு ஒரு முன்னுரை கொடுத்தாங்க என் மனைவி.

நேத்து பிஜிபி அரங்கத்துல நடந்த ‘திலகவதியார்’ நாட்டிய நாடகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்த சிறந்த ஆன்மீக கலைப் படைப்பு. பல்வேறு வயதுடைய சிவத் தொண்டூழியர்களின் தன்னலமற்ற உழைப்பு.

மேலும் படிக்க…