யாக்கை

பேருந்து கவிமாலையின் போது மார்ச் மாத கவிதை போட்டிக்கான தலைப்பை ஆசான் Karuna Karasu ‘யாக்கை திரி’ என்று கொடுக்க, அந்த அருமையான தலைப்பில் பலரும் கவிதைகள் படைத்தனர்.

இன்று கவிமாலையில் இரண்டாம் பரிசு பெற்ற ‘யாக்கை’ தலைப்பிலான என் கவிதை..

யாக்கை
———
யாக்கை பேணி
காக்க மறந்து
கைப்பேசியுடனே
காலம் கழித்து
தூக்கம் துறந்து
வேலை புரிந்து
துரித உணவில்
உடம்பு வளர்த்து
அதையும் ஒழுங்காய்
அசைக்க மறுத்து
செரிக்கத் தவித்து
துருவும் பிடிக்க
மருந்தெனும் பேரில்
இரசாயனம் உண்டு
மேலும் சீக்கு
மெல்ல வளர்த்து
‘புற்று’ தின்னு
முற்றுப் பெறாமல்
வாழ்ந்த முறையை
பின்னோக்கிப் பார்த்தால்
புரிந்தது உண்மை…

மின்சாரம் மட்டும்
கண்டிராவிட்டால்
இந்தக் கட்டை
வாழும்போதும்
மட்டுமின்றி
நீட்டிய பின்னும்
நிதானமாய் வெந்திருக்கும்!

கொலு பொம்மை

அப்பா தொலைக்காட்சி
செய்தியிலே லயித்துப் போக
அம்மா சாமியிடம் மணி
அடித்து வரம் வேண்ட
மனைவி பணிப்பெண்னுடன்
பட்டிமன்றம் நடத்த
மகன் கைப்பேசியோடு
கட்டிப் புரள
மகள் கார்ட்டூன்களுடன்
தனிக் குடித்தனம் பண்ண
வீட்டுத் தொலைப்பேசி தொந்தரவாய்
தொடர்ந்து ஒலிக்க
முகநூலில் முழுவதுமாய்
மூழ்கிப் போனான்
குடும்ப தலைவன்!
அலங்காரமாய் அவனுமுள்ளான்
வரவேற்பு அறையினிலே!
ஏதுமறியா கொலு பொம்மையைப் போல்!

காதல் தினம்

கவிதையில் மட்டுமே தொடுவாய் எனில்! அதன் வரிகளாய் என்னை படைத்துவிடு! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
கதைகளில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனையே! ஆனால் என் கற்பனையில் வரும் சம்பவங்களும், நீயும் நிஜமே! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
தோற்பதும் சுகமே உன்னுடன் காதல் விளையாட்டில்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!
உன்னை பார்த்த குற்றத்திற்காகவா என்னை மனச்சிறையில் அடைத்து வைத்தாய் ஆயுட்கைதியாக! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்

காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்! 2

தொலைவிலிருந்தும் என் அருகில் தெரிந்தாய்! உரிமையோடு என் உயிரைத் தொட்டாய்! அழகாய் பேசி அழுத்தம் குறைத்தாய்!உன் ஒற்றை சொல்லில் மாற்றம் செய்தாய்! கன்னிப் பேச்சில் கவிஞனாக்கினாய்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!

காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!

எப்படி புரண்டு படுத்தாலும் என் தூக்கத்தை புரட்டி போடுகிறது உன் நினைவுகள்! இமைகள் மூடினேன் காட்சிகள் அகலவில்லை! தூங்க எண்ணினேன் எண்ணங்கள் விடவில்லை! கட்டிலின்மேல் கிடந்தேன் கனவுகள் வேலையில்லா பட்டதாரியானது! பொழுது புலர்ந்தது படுக்கை பிடிக்கவில்லை! உறங்கினால் தானே விழிப்பதற்கு, உன் முப்பரிமான நிழல் முன்னே ஊஞ்சாலடியது! தூக்கம் தொலைந்து போனது! தாக்கம் எஞ்சி நின்றது! ஏக்கம் ஏனோ கொன்றது! என்னை மீட்க உன்னை தேடுகின்றேன்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!