ஶ்ரீதேவி இரங்கல்

தன் அழகால், நடிப்பால் தமிழ் இரசிகர்களையும் பிறகு இந்திய திரைப்பட இரசிகர்களையும் கொள்ளை கொண்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த நடிகை. இன்று வரை அவருடைய அழகுடன் கூடிய நடிப்பிற்கு இணையானவர்கள் யாருமில்லை. கமல் ரசிகனாக நான் ஶ்ரீதேவியை கமலுக்கு ஜோடியாக திரையில் மிகவும் இரசித்ததுண்டு. ரஜினி ரசிகர்களும் அவரை ரஜினியின் ஜோடியாக திரையில் இரசித்திருப்பார்கள். முருக கடவுளாய் அவர் குழந்தையில் நடித்த வேடம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவர்ந்த ஒரு அற்புதமான நடிகை. இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது…ஆழ்ந்த இரங்கல்… எனக்கு பிடித்த, நான் மிகவும் இரசித்த ‘சாந்தினி’ இந்தி படத்திலிருந்து அவர் பாடிய இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்… https://m.youtube.com/watch?v=oIAWNE_pulk

மநீம : ஒரு கற்பனை தொலைக்காட்சி விவாதம் —————————————————- தொலைக்காட்சி நெறியாளர் : இன்றைய விவாதத்தில் கமல் கட்சி குறித்த பேச போறோம். முதலில் கமல் இரசிகர். கமல் இரசிகர் : ஒரு ரசிகனாக, கமல் கட்சி தொடங்கியதில் எனக்கு வருத்தமே, ஏனென்றால் ஒரு மாபெரும் கலைஞனை இந்த திரை உலகம் இழந்துவிட்டது. கமல் இரசிகர் ஆனால் கழகத் தொண்டர் : கமல் நல்லவர்தான், ஆனா அரசியல்ல அவர் எங்களை எதிர்த்து தாக்குப்பிடிப்பது கடினம். கமல் உத்தமனா, வில்லனா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அவருக்கு எங்கள் வாழ்த்துகள். களத்தில் சந்திப்போம் கமல் அவர்களே. கட்சித் தொண்டராக மாறிய இரசிகர் : கமல் ஒரு அறிவாளி, அவர் எந்த துறையில் கால் வச்சாலும் அது குறித்து கரைச்சு குடிச்சிட்டு கலக்குவார்னு இயக்குனர் இமயமே சொல்லியிருக்கிறார். முகநூல் போராளி : ஆமா, ஒரு தொடக்க நிகழ்ச்சியிலேயே பேசத் தெரியல, காவிரி பிரச்சனை பத்தி கேட்டா ஏதோ தண்ணீர், இரத்தம்னு உளறுகிறார். இவர் என்னத்த கலக்கப்போறார்? தமிழ் ஆர்வலர் : இவர் கட்சி பெயரையே ஏதோ சீர்திருத்தம் செய்றேனு புரியாத மாதிரி எழுதியிருக்கிறார். இவர் தமிழ அழிக்காம விட மாட்டாரு. தமிழனுக்கு ஒன்னும் செய்ய மாட்டாரு. கழக ஆதரவாளர் : முதல்ல அவரோட கட்சி கொள்கை என்னனென்னு சொல்லட்டும். எல்லோருக்கும் கல்வினு ஏதோ சொன்னார், சரி என்னவோ வரிசையா அப்படியே சொல்லப்போறார்னு பார்த்தா, சப்புனு முடிச்சிட்டார்…. தமிழ்த் தேசியவாதி : ஒரு நடிகன் தமிழ்நாட்டை ஆளக்கூடாது. ஒரு தமிழன் தான் ஆளனும். மநீம தொண்டர் : கமல் தமிழன் தானே. அப்படிப் பார்த்தால் உங்க தலைவரும் நடிகர்தானே? தமிழ்த் தேசியவாதி : அவரு நடிகர் இல்ல, இயக்குனராக்கும். கழக எதிர்ப்பாளர் : கமல் கட்சி பெயரிலேயே புரட்சி செய்திருக்கிறார். கழகம், கட்சி என்ற இரு சொல்லையும் தமிழக அரசியில் கட்சி வரலாற்றில் இருந்து அகற்றி விட்டார். இது நல்ல தொடக்கம். கமல் எதிர்ப்பாளர் : கமலுக்கு பின்னால் இலுமினாட்டி கும்பல் உள்ளது. அவர் கட்சிக் கொடியில் நட்சத்திரம் உள்ளது. இலுமினாட்டி ஆய்வாளர் : அவர் கட்சி தொடங்கியதே, அமித் ஷாவின் ஆதரவால்தான். காவிகள், தமிழ் நாட்டின் ஓட்டை பிரிப்பதற்காக, ரஜினியையும், கமலையும் களமிறக்குகிறார்கள். இவருக்கு கருப்பில் காவி இருக்கு. அவருக்கு காவியில் கருப்பு இருக்கு. ஆக இருவரும் காவியும் கருப்பும் கலந்த கருமம்தாம். அவர்கள் இருவரும் காவியின் ‘சிலீப்பர் செல்கள்’. அதனால் அவருக்கும் இலுமினாட்டிற்கும் சம்பந்தமில்லை. கமலுக்கும் மும்பைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த கொடி மும்பைல உள்ள தமிழர் பாசறையோடது. மநீம தொண்டர் : அப்படி ஒரு அமைப்பு இருப்பதே எங்களுக்கு இப்பத்தான் தெரியும். ஏன், எல்லோருக்குமே இப்பத்தான் தெரியும். இவங்க ரூம் போட்டு யோசிப்பாங்க போல. காவி ஆதரவாளர் : கமலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்களே தமிழ்நாட்டில தூங்கிட்டுதான் இருக்கோம்….அப்படி பார்த்த நாங்கதான் ‘சிலீப்பர் செல்’. தொலைக்காட்சி நெறியாளர் : இல்லங்க ‘சிலீப்பர் செல்’னா….. சிந்தனைவாதி : அட அத விடுங்க….கமல் கட்சி தொடங்கியது நல்ல நிகழ்வு. ஆனால் அவர் அறிமுகப்படுத்திய உயர்மட்டக்குழுவில் உள்ளவர்கள் அதில் இடம்பெற ஒரே காரணம், கமலின் அபிமானத்தை பெற்றவர்கள் என்ற ஒரே தகுதிதான். அவர்களுக்கு கட்சி நடத்துவது குறித்தோ, ஆட்சி செய்வது குறித்தோ ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மக்களின் பிரச்சனைகளோ, தீர்க்கும் முறைகளோ எதுவும் தெரியாத கமலின் விசிறிகள், அவ்வளவுதான். இவர்களை வைத்து பிக்பாஸ் வேணா நடந்துலாம். இல்லை ஒரு நல்ல மசாலா படம் எடுக்கலாம். கட்சியும் நடத்த முடியாது, ஆட்சியையும் பிடிக்க முடியாது. மய்யநிலைவாதி (நடுநிலைவாதி) : அப்படி, முழுவதுமாக ஒதுக்கி விட முடியாது. அதில், முன்னாள் காவல்துறை அதிகாரி, ஐ ஏ எஸ் அதிகாரி, வழக்கறிஞர், தமிழறிஞர், இலக்கியவாதி, பேச்சாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர், சமூக பணியாளர் இப்படி பலரும் உள்ளனர். முகநூல் போராளி : பேச்சாளாரா? யாரு? முதல்ல ராசியா ஒருத்தர் பேசினாரே அவரா? சம்பத்தமே இல்லாம உணர்ச்சிபிழம்பாக கொப்பளித்தார். இதுக்கு அம்மா கட்சி அடிமைகளின் துதிபாடல்கள் எவ்வளவோ மேல்… மநீம தொண்டர் : நாங்க பொது இடங்களிலே கால்ல விழாக்கூடாது, பொன்னாடை போர்த்தக்கூடாது என தெளிவாக எல்லோருக்கும் கட்டளை இட்டிருக்கிறோம். குக்கர் ஆதரவாளர் : நாங்கள் அடிமைகள் அல்ல விசுவாசம் உள்ளவர்கள். அதனால்தான் மக்களும் எங்களுக்கு விசுவாசமாக ஓட்டுப் போடுகிறார்கள். நீங்க எத்தனை கட்சி ஆரம்பித்தாலும் வெற்றி பெறுவது நாங்கதான். நோட்டு உள்ள வரை எங்களுக்கு ஓட்டு உண்டு. ரஜினி இரசிகர் : கமல் என்ன பெரிசா பண்ணிட்டார். எங்க தலைவரு கட்சி தொடக்க விழா பாருங்க உலகமே அதிரும்ல.. மநீம தொண்டர் : ஆமா, அரசியலுக்கு வரேன், வரேனு பல ஆண்டுகளாக சொல்றீங்க. முதல்ல கட்சியை தொடங்குங்க, அப்புறம் அதிருதா இல்ல கலகலத்து போதானு பார்ப்போம். மய்யநிலைவாதி (நடுநிலைவாதி) : ரஜனிக்கு குடும்பம் உள்ளதால், அரசியலுக்கு வந்தால் தோற்றுப் போவார். கமலுக்கு குடும்பம் இல்லாததால் அரசியலில் தோற்றுப் போவார். நித்தி ஆதரவாளர் : கமல் வைரமுத்துவின் நண்பர். அதனால் ஆண்டாளின் எதிரி. எங்கள் கிளையை தமிழ்நாட்ல வேறு பெயர்ல தொடங்க பார்க்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். எங்கள் ஆசிரம பக்த கோடிகள் இதற்கு காணொளி மூலம் சரியான பதிலடி தருவார்கள். மநீம தொண்டர் : என்ன தொலைக்காட்சிய்யா இது…இவன எல்லாம் யாரு இங்க உள்ள விட்டது… தொலைக்காட்சி நெறியாளர் : இல்லங்க அவரும் கமல் இரசிகர்தான், திடீர்னு ‘கன்ஃபூஸ்’ ஆகி வேற அவதாரம் எடுத்துட்டார்…ஒரு நிமிஷம் இருங்க…இதோ நம்ம உலக நாயகனே ‘லைன்’ல வர்றார். வாங்க திரு கமல். நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க? கமல் : ‘வெல்’…ஆ…நான் என்ன சொல்றது, அதான் தில்லி முதல்வர் சொல்லிட்டார், அண்டை மாநில முதல்வர்கள் சொல்லிவிட்டார்கள். நான் ஒன்னே ஒன்னுதான் மக்களுக்கு சொல்வேன். “நீங்க தமிழ்நாட்டுல, சந்தோஷமா, நிம்மதியா இருக்கீங்கனா, இந்த கட்சி உங்களுக்கு இல்ல, நீங்க எல்லோரும் கிளம்பலாம்”…… முகநூல் போராளி (குறுக்கிட்டு): அப்ப சோகமா இருக்குறவங்க போற ‘மய்யம்’மா அது…. தொலைக்காட்சி நெறியாளர்(பதட்டதுடன்..) : இத்துடன் இந்நிகழ்ச்சி ஒரு முடிவுக்கு வருகிறது. வணக்கம்…🙏🙏

தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்

பக்தர்களுக்கு தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்🙏🙏🙏

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் …

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும்…

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா!

மேலே உள்ள வரிகள் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசத்தில் உள்ளது.

நித்தி மற்றும் சிஷ்ய கோ(கே)டிகள்

நித்தி : சிஷ்ய கோ(கே)டிகளே நம்மளக்கு வசமா ஒரு ‘மேட்டர்’ சிக்கியிருக்கு….

கோ(கே)டிகள் : ‘மேட்டரா’…..? என்ன சுவாமி…புதுசா?

நித்தி : ச்சி அது இல்ல, கவிப்பேரரசு ஏதோ சொன்னாராம், அத வச்சு நம்ம ஏதாவது பரபரப்பா பண்ணலாம். என்ன பண்ணுங்க, முதல்ல நம்ம ‘இளவரசி’யை வச்சு அவர அசிங்கசிங்கமா திட்டி பேசச்சொல்லி ஒரு காணொளி வெளியிடுங்க.

கோ(கே)டிகள் : ஏன், ‘இளவரசி’ சுவாமி ?

நித்தி : அவ பேசுனாதான், மக்கள் ஏதோ அழகான பொண்ணு பேசுதேனு பாப்பாங்க, அது கெட்ட வார்த்தை பேசும்போது இன்னும் எஃப்க்ட் கூடும், அதான்.

கோ(கே)டிகள் : உள்ள பேசுறமாதிரியே வெளியேவும் பேசுனா, நம்மள தப்பா நினைக்க மாட்டாங்களா சிவாமி.

நித்தி : இப்ப மட்டும் என்ன நம்மள நல்லவங்கனா நினைக்குறாங்க, நம்ம லீலைதான் எல்லா ‘சேனல்’லையும் ஓட்டுனாங்களே..

கோ(கே)டிகள் : அது சரி சுவாமி, நம்ம மேல ஏற்கனவே பல கேஸ் இருக்கு இப்ப புதுசா ஏதாவது பிரச்சனை பண்ணி, திரும்ப உள்ள பிடிச்சு போட்றபோறாங்க.

நித்தி : வாய்ப்பே இல்லை, இப்ப கர்நாடகாவுல தேர்தல் வரப் போகுது. நம்மள பிடிச்சா, பிஜேபி அத வச்சு அரசியல் பண்ணி ஆட்சிய பிடிச்சடும்னு பயத்துல காங்கிரஸ் நம்ம மேல கைய வைக்காது, கவலப்படாதீங்க. தமிழ்நாட்டுல ஆட்சி நடக்குதானே பலருக்கு சந்தேகமா இருக்கு. அதனால் நம்மள தூக்கி நிறுத்திக்க இதுதான் சரியான சமயம்.

கோ(கே)டிகள் : சரி, இந்து மக்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வருமா சுவாமி?

நித்தி : ரொம்ப சிம்பிள், சம்பந்தமே இல்லாம இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் திட்டுங்க. பக்தாஸ் கூட்டம் நம்ம பக்கம் சாய்ஞ்சிடும். அப்புறம் நம்மளுக்காக அவங்க பேசுவாங்க.

கோ(கே)டிகள் : ஆனா, இஸ்லாமியர்களும், கிறுத்தவர்களுக்கும் நம்ம மேல கோபம் வந்தா என்ன பண்றது?

நித்தி : அது வரணும். அப்பத்தான் இந்து மதத்தின் ஒட்டு மொத்த குத்தகைகாரங்க நாமதான்னு ஒரு ‘பில்டப் டெவலப்’பாகும். வேற எந்த இந்து அமைப்பும் இது வரை தீவிரமா இறங்கல, அதனால நாம இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்து மதத்தின் காவலர்கள் நாமதான்னு சொல்லி தினமும் ஒரு நாலு காணொளி போடணும்.

கோ(கே)டிகள் : இதனால, நிறைய எதிர்வினைகள் வருமே சுவாமி?

நித்தி : வரட்டும், அது தானே நமக்கு வேணும். நம்மள எல்லாரும் திரும்பி பார்க்கணும். இலவசமா நமக்கு விளம்பரம் கிடைக்கணும். முக்கியமா, காணொளில திட்டும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கமா திட்டுங்க. எதாவது சந்தேகம்னா என்கிட்ட வாங்க, நா சொல்லித்தரேன்.

கோ(கே)டிகள் : பரவாயில்லை சுவாமி. அதெல்லாம் இந்த ஆசிரமத்தில நல்ல பழகிடுச்சி சாமி. ஆனா இந்த முகநூல் போராளிகள் நினைச்சா பயமாயிருக்கு சுவாமி.

நித்தி : அத பத்தி கவலப்படாநீங்க. அதுக்குதான் பெண்கள பேச சொல்றேன். அவங்க கவனம் வேற மாதிரி போய்டும். அடுத்து, சில படிச்ச கூட்டம், ”இதுல என்ன தப்பு இருக்கு, இப்ப யாரு கெட்டவார்த்தை பேசல? இரண்டாம் வகுப்பு பொண்ணு ‘F’ world use பண்ணுது” அப்படினு கிளம்பும். இன்னொரு கூட்டம், பெண்ணியம் பேசும். முக்கியமா இந்த நாத்திகர்கள எதிர்க்கிற கூட்டம் நம்மள நிறையவே ‘சப்போர்ட்’ பண்ணும். இன்னொரு கூட்டம் நம்மள வச்சு மீம்ஸ் போடும். அடுத்த ஒரு கூட்டம் நம்ம எத போட்டாலும் ‘share’ பண்ணும்.இப்படியே அவங்கள தொடர்ந்து ‘எங்கேஜ்’ பண்ணலாம்.

கோ(கே)டிகள் : சுவாமி, சரி பத்திரிக்கை, நியூஸ் சேனல் நம்மள கிழிகிழினு கிழிக்குமே சுவாமி.

நித்தி : அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் பண்ணாது. கவிஞர் சொன்ன விஷயத்தை இரண்டு நாள் போடுவாங்க, அப்புறம் வேற பிரச்சனைக்கு போய்டுவாங்க. ஆனால் நம்ம இந்த பிரச்சனைய வச்சதான் கல்லா கட்ட முடியும். அதனால அடுத்த ஒரு மாசத்துக்கு நமக்கு இதுதான் வேலை. ‘சேனல்ஸ்’ ரேட்டிங்க கூட்ட நம்மள போட்டி போட்டு காண்பிக்கும். அதனால், எல்லோரும் நம்ம சீருடைய போட்டுக்கோங்க. இரவு எத்தனை மணி ஆனாலும், சீருடையுடன், நல்ல ‘make up’ பண்ணி, நெத்தில பட்டை, கழுத்தல ருத்திராட்சை கொட்டை கண்டிப்பாக இருக்கணும். இதெல்லாம் விட மிக முக்கியம் உங்களுக்கு பின்னாடி என்னோட முழு உருவச் சிலை இல்லனா என்னோட முழு உருவக் கட்டவுட் இல்லை படம் இருக்கணும். நம்ம ஆசிரம ‘காமிரமேன்’, மேக்கப் ஆர்டிஸ்ட் எல்லோரையும் போர்க்கால அடிப்படையில வேலை பார்க்கச் சொல்லியிருக்கேன்.

கோ(கே)டிகள் : சரி சுவாமி, பணம் நிறைய செலவாகுமே…

நித்தி : அதுக்குத்தான், நம்ம வெளிநாட்டு பக்த கோ(கே)டிகள் இருக்காங்களே, அவங்க சரியான ஏமாந்தவனுங்க. நம்ம நாலு சமஸ்கிருத மந்திரித்ததை சொல்லி, ‘stress relief’, ‘inner awakening’, yoga, meditation அப்படி ஏதாவது சொன்னா போதும் பணத்தை வாரி இறைப்பாணுங்க…சொல்ல மறந்துட்டேன். அவன்களுக்கும் அந்த தமிழ் கெட்ட வார்த்தையை அப்படியே ஆங்கிலத்தில எழுதி கொடுங்க….அப்படியே அந்த கெட்டவார்த்தைக்கு நடுவுல அங்கங்க மந்திரம், பாரதியார் பாட்டு, இந்து, சனாதன தர்மம் இப்படி மானே தேனேனு போட்டுகோங்க…அப்பத்தான் நம்மள பாமர மக்கள் நாலும் தெரிஞ்சவங்கனு நம்புவாங்க…

கோ(கே)டிகள் : இந்த ஆண்டாள் பத்தி ஏதாவது சொல்லனுமா சுவாமி?

நித்தி : நோ, நமக்கு ஆண்டாள பத்தி ஒன்னும் தெரியாது. அதனால் அந்த ‘சப்ஜக்ட்’குள்ள போக வேண்டாம். முதல்ல இரண்டு காணோளியில ஆண்டாள் பேர மட்டும் சொல்லுங்கள். அப்புறம் ஃபோகஸ் முழுக்க திட்றதுலதான் இருக்கணும். அந்த இராசாவே மிரண்டு போயிடணும். அப்புறம் இந்த கவியுக ஆண்டாளும் நானே, பெருமாளும் நானே என்பதை மறந்துடாதீங்க.

கோ(கே)டிகள் : நன்றி சுவாமி.
கேடியானந்தம்….

படம் : நித்தி செட்டு, சந்யாசி கதாபாத்திரங்கள் கடவுள் அரிதாரம் பூசிய போது எடுக்கப்பட்டது. இளவரசி பகத்திலிருந்து ஆட்டைய போட்டது.

 

ஆண்டாள்

ஆண்டாள் : பக்தா, ஆமாம் பூலோகத்தில் யாரோ ஒரு கவிஞர் என்னை பத்தி தவறாக பேசினாராமே.

பக்தன் : ஆமாம், தாயே. யாரோ ஒரு ஆய்வாளரை மேற்கோள் காட்டி அவர் சொன்னதாக தகாத சொற்களை பயன்படுத்தி பேசிவிட்டார். அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தில் பலர் இந்த மாதிரி உளறிக்கொட்டியிருக்கிறார்கள்.

ஆண்டாள் : அதானே, அந்தக் காலத்தில் என் பெருமானை அவர்கள் தூற்றாத மேடையில்லை. ஆனால், அதனால் எனக்கோ எம்பெருமானுக்கோ ஒரு இழுக்கும் இல்லையே பக்தா. நம்பிக்கையில்லாதவர்கள்தானே பேசினார்கள். சரி, பூலோகத்தில் என்னை வைத்து இதனால் ஏதும் சண்டை நடக்கிறதா?

பக்தன் : ஆமாம், தாயே. இதுதான் வாய்ப்பு என்று பத்தாஸ் கூட்டம் ஒரு பக்கம் தரமற்று அந்த கவிஞரை கழுவி ஊத்துகிறது. இன்னொரு பக்கம் கடவுள் மறுப்பாளர்கள் கருத்து சுதந்திரம் இல்லையா? அவர் ஆய்வாளரைதானே மேற்கோள் காட்டினார் என்று வக்காளத்து வாங்குகிறது. இதில் அரசியல்வாதிகள் வேற வாக்கு வங்கிக்காக உள்ளே இறங்கியுள்ளனர்.

ஆண்டாள் : சரி, முகநூல்ல போராளிகள் என்ன சொல்கிறார்கள்?

பக்தன் : அத ஏன் கேட்கிறீர்கள் தாயே…நம்ம ராசாவ மிஞ்சும் வைகையில சில பக்தாஸ் தரமற்று தூற்றுகிறார்கள். அவர்களின் முகத்திரை இப்போது கிழிந்து தொங்குகிறது. பதிவு போட தைரியமில்லாதவர்கள் அந்த கேவலமான பதிவுகளில் ‘கமன்ட்’ போட்டு திருப்தியடைகிறார்கள். “இதுவே வேறு கடவுளா இருந்தா சும்மா இருப்பாங்காளா”னு வழக்கம் போல் தூண்டி விடுகிறார்கள். இந்த பக்கம் ஆதரவு கூட்டம் ‘இதிலென்ன தப்பு’ என ஒரு சொம்பை தூக்கி கொண்டு பஞ்சாயத்து கூட்டுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், கவிஞரையும் பிடிக்காமல் காவியையும் பிடிக்காமல் போனவர்கள் சொம்பை எந்தப் பக்கம் வைக்க என தடுமாறுகிறார்கள்.

ஆண்டாள் : சரி, உன்னோட கருத்து என்ன?

பக்தன் : இதல்லாம் அப்பாவி இந்துக்களை கிளப்பிவிட்டு அவர்கள் ஓட்டு வங்கியை பலப்படுத்த இல்லுமினாட்டிஸ் பண்ற சதி வேலைனு புதுசா ஒன்ன கிளிப்பி விடலாம்னு இருக்கேன் தாயே….

ஆண்டாள் : அட பக்தி பழமே, இதெல்லாம் விட்டுவிட்டு, கடவுளை நம்பும் நீ, மனதை ஒரு நிலைப்படுத்தி உன்னால் முடிந்த வரை முடியாதவர்களுக்கு உதவி செய்.

பக்தன் : சரி தாயே, இன்றைக்கு கூடாரவள்ளி. உனக்கு பொங்கல் படைச்சிருக்கேன், சிறப்பு பூசை செய்திருக்கிறேன், என்னுடைய பக்தியை ஏற்று இந்த கூட்டத்திடமிருந்து என்னை காப்பாற்று தாயே….