திலகவதியார் – நாட்டிய நாடகம்

“இப்ப நம்ம எங்க போறோம்னு தெரியுமா? நம்ம வீரமாகாளியம்மன் கோயிலுக்கு போவோம்ல, அங்க சிவன் சன்னதிக்குப் பின்னாடி ஓரத்துல நாலு பேரோட சிலை வச்சிருப்பாங்க தெரியுமா?”னு என் மனைவி என் மகளிடம் கேட்க, “ஆமாம்மா, அப்பா கூட அங்க நின்னு அந்த சாமிககிட்ட பேசிட்டிருப்பாங்களே?” என்று அவள் என்னை வம்பிழுக்க, சிரித்துக்கொண்டே, “ஆமாம், அங்க இருக்கிற நால்வர்ல, முதல்ல உள்ள சாமி கையில, நீ ‘பீச்சு’க்கு மண்ல விளையாட எடுத்துட்டு போவையே, நீளமா மண்ணள்ளுற கரண்டி, அதே மாதிரி வச்சிருப்பார்ல, அவர் பேர் தான் ‘திருநாவுக்கரசர்’. அவரோட அக்கா பெயர் ‘திலகவதியார்’. இவரு இங்க சாமியா நிக்க காரணம் அவங்க அக்கா தான். அவங்கள பத்தின நாட்டிய நாடகம் பார்க்கத்தான் இப்ப நம்ம போயிட்டுருக்கோம்”னு ஒரு முன்னுரை கொடுத்தாங்க என் மனைவி.

நேத்து பிஜிபி அரங்கத்துல நடந்த ‘திலகவதியார்’ நாட்டிய நாடகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்த சிறந்த ஆன்மீக கலைப் படைப்பு. பல்வேறு வயதுடைய சிவத் தொண்டூழியர்களின் தன்னலமற்ற உழைப்பு.

மேலும் படிக்க…

அம்மாவின் கடவுள்

கடிகார முள்ளை
மனத்தில் நகர்த்தி
நயனத்தின் ஓரத்தில்
ஏக்கத்தைத் தேக்கி
எண்ணத்தின் நடுவில்
நினைவுகளை நிறுத்தி
வேலைமுடிந்து வீடுவரும்
அம்மாக்களுக்கு,
மதங்களைக் கடந்த
கடவுள்,

எப்போதும் எண்ணிக்
கொண்டிருப்பதால்

பத்திரமாய்ப் பிள்ளைகளைப்
பார்த்துக் கொள்ளும்
பணிப் பெண்களே!

இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருது

#தமிழ்மொழி_விழா_2016

ஒரு நல்ல சந்திப்பு, ஒரு நல்ல நட்பு, ஒரு நல்ல கற்றல், ஒரு நல்ல முயற்சி, ஒரு நல்ல சிந்தனை, ஒரு நல்ல கவிதை இப்படி நம் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணும் அந்த ஒரு நல்ல நிகழ்வு எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் செய்ய வேண்டியது திறந்த மனத்துடன் அதை வரவேற்பதே. அப்படி நடந்த அந்த மாற்றம் இன்று எனக்கு இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருதை பெற்று தந்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த மாதம் ‘மகுடம்’ என்ற தலைப்பில் நடந்த கவிதை போட்டியிலும் முதல் பரிசு வாங்கியது, இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்று இளங்கவிஞர் விருது பெறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவான கவிஞர் கருணாகரசுக்கும், மரபு குறித்து சந்தேகங்களை அவ்வப்போது விளக்கம் தந்து உதவி புரிந்த கவிஞர் கி கோவிந்தராசுக்கும், மரபை ஆரம்பித்து வைத்த கவிஞர் பனசை நடராஜனுக்கும், எந்த பிழையையும் உடனே திருத்தி எனக்கு உதவி புரியும் கவிஞர் ராஜு ரமேஷுக்கும், என் கவிதைப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்த கவிஞர் இன்பாவுக்கும் மற்றும் மரபுக் கவிதை குழுவின் நண்பர்கள் கவிஞர் மதிகுமார், கவிஞர் ஹாஜா மொய்தீன், கவிஞர் கோ கண்ணன், கவிஞர் லலிதா சுந்தர், கவிமாலை நண்பர்கள் குழுவிற்கும், கவிமாலைக்கும் என் மனமார்ந்த நன்றி என் கவிதையை இரசித்து என்னை ஊக்கப்படுத்திய அத்தனை முகநூல் நண்பர்களுக்கும் என் நன்றி தங்கமுத்திரை விருதை வழங்குபவர் மலேசியாவின் இளையர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ எம் சரவணன்.

தமிழ்மொழி_விழா_2016

இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருது
___________________________________

ஒரு நல்ல சந்திப்பு, ஒரு நல்ல நட்பு, ஒரு நல்ல கற்றல், ஒரு நல்ல முயற்சி, ஒரு நல்ல சிந்தனை, ஒரு நல்ல கவிதை இப்படி நம் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணும் அந்த ஒரு நல்ல நிகழ்வு எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் செய்ய வேண்டியது திறந்த மனத்துடன் அதை வரவேற்பதே.

அப்படி நடந்த அந்த மாற்றம் இன்று எனக்கு இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருதை பெற்று தந்ததில் மிக்க மகிழ்ச்சி.

இந்த மாதம் ‘மகுடம்’ என்ற தலைப்பில் நடந்த கவிதை போட்டியிலும் முதல் பரிசு வாங்கியது, இரட்டிப்பு மகிழ்ச்சி.

இன்று இளங்கவிஞர் விருது பெறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவான கவிஞர் கருணாகரசுக்கும், மரபு குறித்து சந்தேகங்களை அவ்வப்போது விளக்கம் தந்து உதவி புரிந்த கவிஞர் கி கோவிந்தராசுக்கும், மரபை ஆரம்பித்து வைத்த கவிஞர் பனசை நடராஜனுக்கும், எந்த பிழையையும் உடனே திருத்தி எனக்கு உதவி புரியும் கவிஞர் ராஜு ரமேஷுக்கும், என் கவிதைப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்த கவிஞர் இன்பாவுக்கும் மற்றும் மரபுக் கவிதை குழுவின் நண்பர்கள் கவிஞர் மதிகுமார், கவிஞர் ஹாஜா மொய்தீன், கவிஞர் கோ கண்ணன், கவிஞர் லலிதா சுந்தர், கவிமாலை நண்பர்கள் குழுவிற்கும், கவிமாலைக்கும் என் மனமார்ந்த நன்றி🙏

என் கவிதையை இரசித்து என்னை ஊக்கப்படுத்திய அத்தனை முகநூல் நண்பர்களுக்கும் என் நன்றி🙏

தங்கமுத்திரை விருதை வழங்குபவர் மலேசியாவின் இளையர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ எம் சரவணன்.

#தமிழ்மொழி_விழா_2016 சொற்களம் 2016 —————— மாணவர்களின் கற்றல் பயணம்: ——————————- “புரிந்துணர்வு இருப்பதால் தான் பண்டிகை தினங்களில் அண்டை வீட்டிலுள்ள மற்ற இனத்தாரிடமும் தின்பண்டங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று ஒட்டிப் பேசிய அணியின் மாணவர் கூறியபோது “அரசாங்கம் போட்ட சட்டத்தினால்தான் மற்ற இனத்தவர்கள் நம் அண்டை வீட்டில் வாழும் சூழுல் ஏற்பட்டது” என்று அழகாக தங்களின் எதிர்வாதத்தை வைத்தார் வெட்டிப் பேசிய அணியிலுள்ள மாணவர். பல இன மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ சட்டங்களைவிடப் புரிந்துணர்வே அவசியமாகும் என்ற தலைப்பில் ஏப்ரல் 9ம் தேதி , சனிக்கிழமை மீடியாகார்ப் அரங்கத்தில் சொற்களம் 2016 இறுதிச்சுற்றில் நடந்த சுவாரசியமான அங்கமிது. இப்படி முதல் சுற்றிலிருந்து இறுதிச்சுற்று வரை கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடந்த சொற்களம் விவாதப் போட்டியில் சிங்கையின் அடுத்த தலைமுறையினர் தங்களது கருத்துகளை, வாதத் திறமையை ஒவ்வொரு போட்டியிலும் வெகு சிறப்பாக வெளிக்காட்டினர். இந்தப் போட்டிகள் மாணவர்களிடத்தில் வெறும் பேச்சுத் திறனையும், கவனிக்கும் ஆற்றலையும் மட்டும் வளர்க்கவில்லை, தமிழ் மீதான ஒரு பற்றுதலையும் உலக நடப்புகளை படித்து அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பினையும் வழங்குகிறது. மேலும், குழுவாக போட்டியிடுவதால் கூட்டு முயற்சியையும், விட்டுக் கொடுக்கும் பண்பையும் வளர்க்கிறது. போட்டி என்று வந்துவிட்டால் வெற்றியுடன் தோல்வி என்பதும் தவிர்க்க முடியாததாகிறது. தோல்வி அடைந்த குழுக்கள் அத்தோல்வியை எப்படி அணுக வேண்டும், சக போட்டியாளர்களை எப்படி மதிக்க வேண்டும், நீதிபதிகள் மற்றும் பார்வையாளர்களின் கருத்துகளை எப்படி கருத்தில் கொள்ள வேண்டும் என்று பல்வேறு பாடங்களைக் கற்றுத்தரும் ஒரு தளமாக இச் சொற்களம் போட்டி அமைகின்றது. இந்தக் கற்றல் பயணம், மாணவர்களைப் பக்குவப்படுத்தி போட்டித்தன்மை மிகுந்த இக்காலகட்டத்திலும் எதிர்காலத்திலும் அவர்களை எந்த ஒரு சவாலான சூழலையும் சந்திக்க பெரிதும் உதவும் என்பது திண்ணம். அடித்தளத் தலைவர்களின் பங்களிப்பு: ————————————- 12வது முறையாக நடைபெறும் இப்போட்டியின் பின்னணியில் மக்கள் கழக நற்பணிப் பேரவையின் மத்திய வட்டார இந்திய நற்பணிச் செயற்குழுக்களிலிருந்து 50 அடித்தளத் தலைவர்களின் தன்னலமற்ற உழைப்பு அடங்கியிருக்கிறது. சுமார் 50 நடுவர்கள், 15 அவைத் தலைவர்கள், 15க்கும் மேற்பட்ட தலைப்புகள் என்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விவாதப்போட்டி சரியாக 6 மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டு, நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. 30 இந்திய நற்பணிச் செயற்குழுவினர் தீவிரமாக பணி செய்து மாணவர்களிடத்தில் தமிழ் புழக்கத்தை வளர்ப்பதற்காக, தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக சொற்களம் 2016 நிகழ்வைச் சிறப்பாக நடத்திக் காட்டினர். இந்நிகழ்வை இணைந்து நடத்திய மீடியாகார்ப் நிறுவனம், இறுதிச்சுற்றின் நேரடி ஒளிபரப்பினையும் அரையிறுதிச்சுற்றின் பதிவுக் காட்சியையும் வசந்தம் ஒளிவழியில் சிறப்பாக ஒளிபரப்பி தன்னுடைய பங்களிப்பை நல்கியது. போட்டியின் வெற்றியாளர்கள்: —————————- 32 பள்ளிகள் கலந்துக்கொண்ட இவ்விவாதப்போட்டியின் முதல் சுற்றில் 16 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இரண்டாம் சுற்றில் 8 பள்ளிகள் கால்யிறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பேச்சுத்திறனை மேம்படுத்த பயிற்சிப்பட்டறையும் நடத்தப்பட்டது. காலிறுதிச்சுற்றிலிருந்து தயாரித்துப் பேசும் அங்கத்துடன், தலைப்பை போட்டியின் போதே கொடுத்து 3 நிமிடத்தில் முன் தயாரிப்பின்றி உடனடியாக பேசும் அங்கமும் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பின்னர் காலிறுதிச் சுற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளிகள் அரையிறுதி சுற்றில் மோதின. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் பெண்டமீர் உயர்நிலைப்பள்ளி விக்டோரியா உயர்நிலைப் பள்ளியை எதிர் கொண்டு வெற்றி பெற்றது. ராஃபில்ஸ் கல்வி நிலையம் மெக்ஃபெர்ஸன் உயர்நிலைப் பள்ளியை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. முடிவில் ராஃபில்ஸ் கல்வி நிலையம் வெற்றிவாகை சூடி கோப்பையைக் கைப்பற்றியது. இருந்தும் போட்டியில் பங்குகொண்டு தங்கள் திறைமைகளை வெளிப்படுத்திய அனைவரும் வெற்றியாளர்களே. இளையர்களுக்கே முக்கியத்துவம்: ——————————– சிங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பரவலாக அனைத்து தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்நிகழ்வில் சிறப்புரைகள் இல்லை, மாலைகள் இல்லை, பொன்னாடைகள் இல்லை, எந்தவித சம்பிரதாய சடங்குகளும் இல்லை. மாணவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி அடித்தளத் தலைவர்களால் நடத்தப்பட்ட ஒரு முக்கிய நிகழ்விது. நேரடியாக ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சியை முதன்முறையாக செய்தாலும் எந்தவித சிரமமுமின்றி மிக சிறப்பாக வழிநடத்திய அவைத் தலைவர் இலக்கியா செல்வராஜியும் ஒரு இளையரே. 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொற்களம் போட்டியாளரான இவர் அரையிறுதி போட்டியிலும் அவைத்தலைவராக சிறப்பாக பணியாற்றினார். இதுபோல மாணவர்களை முன்னிலைப்படுத்தும் விழாக்களும், இளையர்கள் ஏற்று நடத்தும் விழாக்களும் மேலும் அதிகமாக நடத்தப்பட வேண்டும். அதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்குத் தமிழ் நிகழ்ச்சிகளின் மீதும் தமிழ் மொழியின் மீதும் ஒரு பிடிப்பை ஏற்படுத்த வேண்டும்.