ஜெமோவின் சிங்கை படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் குறித்து என் பார்வை —————————————— முதலில் ஜெமோவுக்கு ஒரு பாராட்டு. எதற்கு என்று யோசிக்கிறீர்களா ?மூன்று விஷயம். 1.தனது நேரத்தை சிங்கை எழுத்தாளர்களின் நூலைப் படிப்பதற்கு செலவழித்ததற்காக. 2.என்னைப் போன்றவர்களை சிங்கை எழுத்தாளர்களின் படைப்புகளை ஆழமாக படிக்கத் தூண்டியதற்காக. 3.ஒரு விவாதத்தை ஏற்படுத்தியதற்காக ஜெமோவின் எழுத்துகள் பிடிக்கும் எனக்கு அவரின் கருத்துக்கள், வெளிப்படுத்தும் விதம் இதில் உடன்பாடில்லை. அவரின் விமர்சனம் குறித்தும் அதிலுள்ள சில குறைபாடுகள் என நான் நினைப்பதையும் கீழே கொடுத்துள்ளேன். உங்களின் நாகரீகமான, ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பதிவிடலாம். 1.”சிங்கப்பூர் இலக்கியச்சூழலின் பிரச்சினைகள் மற்றும் எல்லைகளைக் கணக்கில் கொண்டே இப்படைப்புகளை நாம் மதிப்பிட முடியும்” என்று குறிப்பிட்ட ஜெமோ 80,81களில் வெளியான கதைத் தொகுப்பை அந்த எல்லைகளுக்கு அப்பால் நின்று கொண்டு 2016 காலக் கண்ணாடி போட்டு பார்த்திருக்கிறார். எடுத்துக்காட்டாக: “தமிழ்நடை உருவாகி வர முடிவதில்லை” என்று சொல்லும் அவரே “பள்ளியாசிரிய மொழிநடையில் அமைந்துள்ளது” என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். அந்தச் சூழலில் அந்த எல்லைக்குள் அப்படித்தான் எழுத முடியும், அதை சரியாக செய்திருக்கிறார் என்று தானே சொல்ல வேண்டும். அடுத்து, ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு தாக்கம் இருக்கும். இந்த ஆசிரியர் மு.வ அவர்களை வாசித்து அவரின் பாதிப்பால் எழுத்துலகிற்கு வந்தவர். சுஜாதாவின் தாக்கத்தால் எழுதுபவர்கள் எப்படி சுஜாதாவை பின்பற்றி எழுதுவார்களோ அப்படித்தான். அதனால் இதில் குறையொன்றும் இல்லை என்பது என் கருத்து. வசனங்களால் நிறைந்தது பீம்சிங்கின் பழைய படங்கள். வசனங்கள் குறைந்து காணப்படுவது மணிரத்னத்தின் படங்கள். பீம்சிங் படங்களை பார்த்து ஏன் மணிரத்னம் படம் மாதிரியில்லை என்று கூறுவது போல்தான் உள்ளது அவரது குறைகூறல். 2.அடுத்து ஒப்பீடு என்பது சிங்கைச்சூழலில் அதன் தேவையறிந்து இங்கு வாழ்ந்த சக எழுத்தாளர்களிடைய இருக்க வேண்டும். இங்கு புதுமைப்பித்தன் எப்படி வந்தார். இது எப்படி இருக்கிறது என்றால் சென்னையில் ஓடுற மின்சார ரயிலை மும்பையில் ஓடும் மின்சார ரயிலோடு ஒப்பீடு செய்தால் சரி, அதை சிங்கையில் ஓடும் மின்சார ரயிலோடு ஒப்பிட்டால் எப்படி? சீர்திருத்தம் தேவைப்படும் ஒரு சூழலில், அந்தக் குறிப்பிட்டக் காலத்தில், அதைக் கதைகள் மூலம் மக்களுக்கு சொல்வதில் தப்பில்லை. 3.”அரசும்,அமைப்புகளும் ‘பாரபட்சமில்லாமல்’ ஊக்கப்படுத்துகின்றன” என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். இதில் வெளிப்படையாக அரசையும், தமிழ் அமைப்புகளையும் குற்றம் சாட்டுகிறார் என நினைக்கிறேன். சிங்கையில் தமிழ்மொழிக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த ஒரு வெகுமதிதான் அரசு கொடுக்கும் விருதும் ஊக்கமும். அதை சந்தேகப்படுவது, கேள்விக்கேட்பது என்பது தமிழை, தமிழ் இலக்கியத்தை சிங்கையில் சீர்குலைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கிறேன். ஆனால் அதே அரசும், அமைப்புகளும் தான் இவர்களை சிங்கைக்கு கூட்டி வந்து தமிழ் வளர்க்கின்றன. இது தான் சொந்தக்காசில் சூன்யம் வைத்துக்கொள்வது என்பதா? அவர் அந்தந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் எந்த சூழலில் எந்த நோக்கத்தில் அந்தக் கதைகளை எழுதினார்கள் என்று தெரிந்துக்கொண்டு பொதுவெளியில் ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை வைத்திருக்கலாம். 4. ஜெமோவின் விமர்சனம் குறித்து என்னை எழுதச்சொல்லி சில நண்பர்கள் கேட்டார்கள். நான் முதலில் எழுதவில்லை.அவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அடுத்து, அவர் விமர்சனங்கள் மூலம் தான் எப்போதும் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவர் என்று கேள்விப்பட்டேன். கூடுதலான வாசகர்களை தன் வலைப்பக்கத்துக்கு இழுத்து வர அவர் வீசி எறியும் வலை இதுவோ என விட்டுவிட்டேன். அவர் தினமும் ஒருவரை பற்றி எழுத, சரி எழுதி முடிக்கட்டும் என்றிருந்தேன். இந்தப்பதிவு போடுவதற்கு இன்னொரு காரணம். இங்கே இளையர்களை தமிழ் எழுத வைப்பது மிக கடினம். அவர்களை ஊக்கப்படுத்தி தமிழ்மொழி மீதும் இலக்கியம் மீதும் ஆர்வத்தை வர வைக்க இங்கே அரசும் அமைப்புகளும், ஆசிரியர்களும் படாதபாடு படுகின்றனர். அவர்களிடைய இந்த மாதிரி விமர்சனம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தான். அதனால் தான் அரசாங்கமும் அமைப்புகளும் அவர்களை தட்டிக்கொடுத்து அழைத்து செல்கின்றன். அவர்களுக்காகவும் இதை எழுதுகிறேன். எனக்கு ஒரு கேள்வி உண்டு. எழுத்தில் கரை கண்டு பல அங்கீகாரங்கள் பெற்றவர்களை, 70,80 வயதில் உள்ளவர்களை விமர்சிப்பதன் நோக்கம் என்ன? பயன் என்ன? உங்களால் சமகால எழுத்தாளர்களை, உங்களுடன் தோளுரசுபவர்களின் படைப்புகளை இந்த அளவு விமர்சிக்க முடியுமா? சரி இதை இன்னொரு விதமாக பார்ப்போம். நான் முதலில் கூறியது போல் அவர் நேரம் ஒதுக்கி வெளிப்படை விமர்சனமே இல்லாத நம் இலக்கியச் சூழலை ஒரு விவாதத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் எந்த ஒரு விமர்சனமும் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அது படைப்பை மேம்படுத்த வேண்டுமே தவிர படைப்பாளியை புண்படுத்தக்கூடாது. நம் நோக்கம் படைப்பாளியை பழிப்பது எனில் அதை தனி மனித தாக்குதலாக தொடுக்க தைரியம் வேண்டும். அதற்கு பதிலாக படைப்பை விமர்சனம் செய்கிறேன் என்ற போர்வையில் அதைச் செய்யக்கூடாது. எந்தவொரு படைப்பும் அந்த படைப்பாளியின் அறிவு, பட்டறிவு, திறமை,கற்பனை மற்றும் உழைப்பின் வெளிப்பாடு. படைப்பை விமர்சிப்பதன் மூலம் படைப்பாளியை உள்ளூடாக விமர்சிப்பது தவிர்க்க முடியாது. ஆனால் அதை வெளிப்படையாக விமர்சிப்பது என்பது நாகரீகமற்றது. நம்முடைய இன்றைய சூழல் ————————— சரி நம்ம இலக்கியச்சூழல் என்பது எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம். இது வாழ்த்துகளும் நன்றிகளும் மட்டுமே நிறைந்த விந்தை உலகம் என்பதில் ஐயமில்லை. காரணம், பொதுவாக விமர்சகர்கள், தாங்கள் நேரில் காணாதவர்களை தைரியமாக விமர்சிப்பார்கள். தான் நேரில் சந்திக்க வாய்ப்பிருக்கும் நபர்களின் படைப்பை விமர்சிக்க யோசிப்பார்கள். இன்னும் சிலர் வாய்ப்புக்காகவும் வசதிக்காகவும் வாயாற புகழ்வார்கள். சிலர் அது கிடைக்காதோ என்ற கவலையில் ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் இங்கிருந்துக் கொண்டு ஒபாமா என்ன செய்தார்?புடின் என்ன கிழித்தார்? என்று அறைகூவல் விடுவார்கள். ஆனால், பக்கத்திலுள்ளவர்களை பற்றி ஆக்கப்பூர்வமாக விமர்சனத்தை வைக்க நடுங்குவார்கள். இவர்கள் விசைப்பலகை வீரர்கள் என்று சொல்லக்கூட தகுதியில்லாதவர்கள். இப்படி பல காரணங்களால் விமர்சனம் என்பது ஒரு வேண்டாத விருந்தாளியாகவே பார்க்கப்படுகின்றது. இன்னொரு வகை, ஜெமோ சொன்னது சரிதான் என்று வாதிடுபவர்கள் ஆனா வெளியே சொல்லவ் கூச்சப்படுவர்கள். அடுத்து, சிங்கை இலக்கியவட்டம் மிகச் சிறிய வட்டம் அதில் ஒவ்வொருவரும் அடிக்கடி சந்திக்க கூடியவர்கள், நண்பர்கள். இங்கே விமர்சனத்தை வைப்பதும், எதிர்கொள்வதும் சற்று சிரமமானது. இங்கேயும் சில குறைபாடுகள் உள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இங்கே இலக்கியம் சார்ந்து இயங்குபவர்களை விட வேறு பல சார்புநிலைகளை பற்றிக்கொண்டு இயங்கும் இலக்கிய வட்டம் சில உள்ளது. பண்டமாற்று முறையில் பாராட்டிக்கொள்பவர்களும் உண்டு. நாம் என்ன செய்ய வேண்டும் ————————— 1.அமைப்பு ரீதியாகவோ அல்லது அரசு ரீதியாகவோ ஒவ்வொரு படைப்பையும் அங்கீகரிக்க ஒரு விருப்புவெறுப்பிலாத குழு அமைத்து படைப்பை அங்கீகரிக்கலாம். இதில் எந்தவித வேறுபாடுமின்றி படைப்புகள் ஆராயப்பட வேண்டும். அந்த படைப்புகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வைக்கப்பட வேண்டும். அதை வரவேற்க்கும் பக்குவம் படைப்பாளிக்கு வர வேண்டும். 2.அமைப்புகள் படைப்பாளிக்கு விருது வழங்கும் போது எந்த படைப்புக்கு விருது வழங்கப்படுகின்றது அதிலுள்ள பெருமைகள் என்ன என்பதை விளக்கி வெளியிட வேண்டும். தெரிந்தவர்களுக்கும், தனக்கு தேவைப்படுபவர்களுக்கும் விருது வழங்கக்கூடாது. விருதுக்கும், படைப்புக்கும்,படைப்பாளிக்கும் அந்த விருது பெருமை சேர்க்க வேண்டும். தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஒரு குழு அமைத்து, பரிசீலித்து விருதாளரை தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பு.
admin
கவிதைனாலே காதலிருக்கும்.
கவிதைனாலே காதலிருக்கும். கண்ணன் என்றாலும் காதலிருக்கும். அப்ப கண்ணனும் கவிதையும் சேர்ந்தா டபுள் காதல்தான். அதாங்க நம்ம காதல் கவிஞன் கண்ணன்னோட இரண்டாவது புத்தகம் ‘அடம்செய விரும்பு’ முழுக்க முழுக்க காதல் கவிதைகளை மட்டுமே சுமந்து வருது. இதோட கரு ,காதலில் வரும் ஊடல். இதோட சேர்ந்து இன்னும் இரண்டு தலைப்புகளையும் கொடுத்து எது நல்லாயிருக்குனு எங்க நட்பு வட்டத்தில அவர் கேட்டப்ப ,நாங்களெல்லாம் இந்த தலைப்பு நல்லாயிருக்குனு சொன்னோம். ஏன் இந்த தலைப்புனு அவர் நாளை நடக்கவிருக்கும் நூல் அறிமுக விழாவுல சொல்வார். அது குறித்த செய்தி கடைசியில இருக்கு அதனால கடைசி வரை படிங்க இல்ல கடைசி வரியையாவது படிங்க. இரண்டு நாள் முன்னாடிதான கிருஷ்ண ஜெயந்தி முடிஞ்சுச்சு. நாளைக்கு காதல் ஜெயந்தி வருது. இரண்டுமே கண்ணனுக்கு சொந்தமானது. ஆமாம் இந்த நூல்ல காதல் ஜெயந்தினு ஒரு கவிதை எழுதியிருக்காரு. இன்றென்ன காதல் ஜெயந்தியா என் வீடெங்கும் உன் கால் தடங்கள் இப்படி இந்த புத்தகம் முழுதும் சின்ன சின்னதாக அழகான கவிதைகள் நம்மை கவர்ந்திழுக்கும். “எப்போதும் போல் இயல்பாகப் பேசிச்சிரிக்கும் தோழிகள் தோழிகளாகவே இருக்கின்றனர் அதைக்கண்டு சிறு கோபம் கொள்ளும் நீ காதலியாகிக் கொண்டிருக்கிறாய்” என்று ஒரு கவிதை. நமக்கேன் இதை எழுத தோனலை அப்படினு யோசிக்க வைத்த கவிதை இது. ஏன்னு கேட்கப்புடாது. கண்ணனுடைய கவிதைகள் எல்லாம் பெரும்பாலும் குறைவான வரிகளுடனும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருக்கும். கவிதைங்கிற பேர்ல சிலர் கட்டுரைகளையும், இன்னும் சிலர் நவீனங்கற பேர்ல புரியாத புதிர்களையும், சிலர் படத்தோட வெறும் வார்த்தைகளை வைத்து சித்து காட்டும் வேலைகளையும், இன்னும் சிலர் முகநூலில் தினமும் எதையாவது போடனும்னு வெறியா கவிதைங்கிற பேர்ல 10 பதிவுகளை போட்டு நம்மள கொல்ல அத சிலர் அருமை அருமை என்று பாராட்ட, ஏன்டா முகநூலுக்கு வந்தோம்னு நினைக்கிற சமயத்தில இவரோட காதல் கவிதைகள் நம் மனதை குளிர்விக்கும். கண்ணன் காதல் கவிதைகள் மட்டுந்தான் எழுதுவார்னு பலர் நினைச்சிகிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அவர் முதல் புத்தகமான ‘கண் கொத்திப் பறவை’யில் வரதட்சணை,பசி, பெண்ணியம் இப்படி சில கவிதைகள் எழுதியிருக்கிறார். புதுக்கவிதைகள் மட்டுமல்ல மரபுலேயும் வெளுத்து வாங்குவார். கடந்தாண்டு சிங்கை பொன்விழா கொண்டாடங்கள் போது,எங்கள் ஆசான் கருணாகரசின் முயற்சியின் பேரில் நாங்க ஒரு பத்து பேர் பல கவிதைகள் எழுதினோம். அதில் கண்ணன் சிங்கையின் வரலாற்றை ரொம்ப அழகா ஒரு கவிதையில சொல்லியிருப்பார். நாளை மாலை அவரோட “அடம்செய விரும்பு” நூல் அறிமுக விழாவுக்கு கண்டிப்பாக அனைவரும் வாங்க. நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 28, 2016, இடம்: ஆனந்தபவன் உணவகம், தளம் இரண்டு(முஸ்தபா சென்டர் எதிரில்) நேரம் : மாலை 7 மணி
கவிதைனாலே காதலிருக்கும். கண்ணன் என்றாலும் காதலிருக்கும். அப்ப கண்ணனும் கவிதையும் சேர்ந்தா டபுள் காதல்தான். அதாங்க நம்ம காதல் கவிஞன் கண்ணன்னோட இரண்டாவது புத்தகம் ‘அடம்செய விரும்பு’ முழுக்க முழுக்க காதல் கவிதைகளை மட்டுமே சுமந்து வருது. இதோட கரு ,காதலில் வரும் ஊடல். இதோட சேர்ந்து இன்னும் இரண்டு தலைப்புகளையும் கொடுத்து எது நல்லாயிருக்குனு எங்க நட்பு வட்டத்தில அவர் கேட்டப்ப ,நாங்களெல்லாம் இந்த தலைப்பு நல்லாயிருக்குனு சொன்னோம். ஏன் இந்த தலைப்புனு அவர் நாளை நடக்கவிருக்கும் நூல் அறிமுக விழாவுல சொல்வார். அது குறித்த செய்தி கடைசியில இருக்கு அதனால கடைசி வரை படிங்க இல்ல கடைசி வரியையாவது படிங்க.
இரண்டு நாள் முன்னாடிதான கிருஷ்ண ஜெயந்தி முடிஞ்சுச்சு. நாளைக்கு காதல் ஜெயந்தி வருது. இரண்டுமே கண்ணனுக்கு சொந்தமானது. ஆமாம் இந்த நூல்ல காதல் ஜெயந்தினு ஒரு கவிதை எழுதியிருக்காரு.
இன்றென்ன
காதல் ஜெயந்தியா
என்
வீடெங்கும்
உன்
கால் தடங்கள்
இப்படி இந்த புத்தகம் முழுதும் சின்ன சின்னதாக அழகான கவிதைகள் நம்மை கவர்ந்திழுக்கும்.
“எப்போதும் போல்
இயல்பாகப் பேசிச்சிரிக்கும்
தோழிகள்
தோழிகளாகவே இருக்கின்றனர்
அதைக்கண்டு
சிறு கோபம் கொள்ளும்
நீ
காதலியாகிக் கொண்டிருக்கிறாய்”
என்று ஒரு கவிதை. நமக்கேன் இதை எழுத தோனலை அப்படினு யோசிக்க வைத்த கவிதை இது. ஏன்னு கேட்கப்புடாது.
கண்ணனுடைய கவிதைகள் எல்லாம் பெரும்பாலும் குறைவான வரிகளுடனும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருக்கும். கவிதைங்கிற பேர்ல சிலர் கட்டுரைகளையும், இன்னும் சிலர் நவீனங்கற பேர்ல புரியாத புதிர்களையும், சிலர் படத்தோட வெறும் வார்த்தைகளை வைத்து சித்து காட்டும் வேலைகளையும், இன்னும் சிலர் முகநூலில் தினமும் எதையாவது போடனும்னு வெறியா கவிதைங்கிற பேர்ல 10 பதிவுகளை போட்டு நம்மள கொல்ல அத சிலர் அருமை அருமை என்று பாராட்ட, ஏன்டா முகநூலுக்கு வந்தோம்னு நினைக்கிற சமயத்தில இவரோட காதல் கவிதைகள் நம் மனதை குளிர்விக்கும்.
கண்ணன் காதல் கவிதைகள் மட்டுந்தான் எழுதுவார்னு பலர் நினைச்சிகிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அவர் முதல் புத்தகமான ‘கண் கொத்திப் பறவை’யில் வரதட்சணை,பசி, பெண்ணியம் இப்படி சில கவிதைகள் எழுதியிருக்கிறார். புதுக்கவிதைகள் மட்டுமல்ல மரபுலேயும் வெளுத்து வாங்குவார். கடந்தாண்டு சிங்கை பொன்விழா கொண்டாடங்கள் போது,எங்கள் ஆசான் கருணாகரசின் முயற்சியின் பேரில் நாங்க ஒரு பத்து பேர் பல கவிதைகள் எழுதினோம். அதில் கண்ணன் சிங்கையின் வரலாற்றை ரொம்ப அழகா ஒரு கவிதையில சொல்லியிருப்பார்.
நாளை மாலை அவரோட “அடம்செய விரும்பு” நூல் அறிமுக விழாவுக்கு கண்டிப்பாக அனைவரும் வாங்க.
நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 28, 2016,
இடம்: ஆனந்தபவன் உணவகம், தளம் இரண்டு(முஸ்தபா சென்டர் எதிரில்)
நேரம் : மாலை 7 மணி
அஞ்சலி_திரு_எஸ்_ஆர்_நாதன்
“….ஹார்பர் போர்டு தன் இந்தியத் தொழிலாளர்களுக்காக நடத்திய உணவுக் கூடத்திற்குச் சென்று உணவு கேட்டுக் கெஞ்சினேன்………”தொழிலாளர்கள் மட்டும்தான் சாப்பிடலாம்,நீ இங்கே சாப்பிட முடியாது,” ஒரு வாய்ச் சோறு கூடக் கொடுக்க அவர்கள் மறுத்து விட்டனர். நடந்ததை எல்லாம் ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் நான் கண்ணீருடன் இருப்பதைப் பார்த்து என்னிடம் வந்து கேட்டார், “ஏன் சாப்பாட்டுக்குப் பிச்சை எடுக்கிறாய்?” நான் வீட்டிலிருந்து ஓடி வந்துவிட்டேன் என்பதையோ எதற்காக ஓடிவந்தேன் என்பதையோ சொல்லவில்லை. இருந்தாலும்,”எனக்கு பசிக்கிறது. சாப்பிடுவதற்கு எனக்கு ஏதாவது வேணும்” என்றேன். அவர் தனக்கென வாங்கின உணவை என்னிடம் தந்தார். குடிக்கக் கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தார். அந்த உணவு மிகவும் ருசியாக இருந்தது. நான் எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தேன். அதன் பிறகு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு தற்காலிக அறை. தஞ்சோங் பகாரில் 34 செங் சியோக் ஸ்ட்ரீட்டின் பின்புறம் அது அமைந்திருந்தது. அவர் அங்கு உள்வாடகைக்குக் குடியிருந்தார். அவர் என்னிடம் ஒரு கைலியையும் சோப்பையும் கொடுத்துக் குளித்துவிட்டு நான் அணிந்திருந்த ஆடையைத் துவைக்கச் சொன்னார். நான் ஒரு நாள் ஓர் இரவு முழுவதும் தூங்கியிருப்பேன். நான் எழுந்து புத்துணர்வு பெற்றவுடன், அவரிடம் என் கதையைச் சொல்லி, நான் அவரோடு இருக்கலாமா என்று கேட்டேன். நான் வீட்டுக்குப் போக விரும்பவில்லை என்று அவரிடம் சொன்னதுடன் அப்படியே அவர் என்னை வீட்டுக்கு அனுப்பினால் மீண்டும் ஓடிவிடுவேன் என்று கூறினேன். இறுதியில் அவர், “சரி, நான் உனக்கு உதவி செய்கிறேன்” என்றார். அவரின் பெயர் பாவாடை. ….ஆர்பென்ஸ் கம்பெனி என்றும் ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்றில் எனக்கு அவர் அலுவலகப் பையனாக வேலை வாங்கித் தந்தார்….. காலை நேரத்தில் முதலில் நான் அலுவலகத்திற்குள் சென்று அறையில் உள்ள தூசியைத் தட்டுவேன். தரையைக் கூட்டுவேன், குப்பையை வெளியில் கொண்டு போய்ப் போடுவேன்……..என்னிடம் பணம் இல்லாததால், என் மதிய உணவிற்காக பாவாடை ஒவ்வொரு நாளும் எனக்கு 20 காசு கொடுப்பார்….என் முதல் மாதச் சம்பளத்தைப், பத்து வெள்ளி என்று நினைக்கிறேன், பெற்றுக் கொண்டேன். நான் அதை அப்படியே பாவாடையிடம் கொடுத்து விட்டேன். அதைப் பயன்படுத்தி வேலைக்கு அணிந்து செல்ல அவர் எனக்கு இரண்டு முழுக்கால் சட்டைகளையும் இரண்டு சட்டைகளையும் வாங்கிக்கொடுத்தார்….” —–மேல உள்ள வரிகள் 2014ல் திரு ஆ பழனியப்பன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட “உழைப்பின் உயர்வு” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அந்த வரிகள் திரு எஸ் ஆர் நாதனின் “An Unexpected Journey- Path to the Presidency” என்ற ஆங்கில புத்தகத்தில் திரு எஸ் ஆர் நாதன் தன் ஆரம்பக்கால வாழ்க்கை பயணத்தை பற்றி #உழைப்பின்_உயர்வு #அஞ்சலி_திரு_எஸ்_ஆர்_நாதன்