சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும்

கவிமாலையின் ‘சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும்’ வரிசையில் இரண்டாவது காணொளி கவிஞர் வி.இக்குவனம் ஐயாவை பெருமையை சொல்கிறது.

மறைந்த கவிஞர் வி. இக்குவனம் ஐயாவின் 27 நூல்களில் நான் தேர்ந்தெடுத்தது ‘காரம் இனித்திடுமே காண்’ என்ற நூல். இதில் 108 வெண்பாக்கள் புணைந்துள்ளார். 108 வெண்பாவின் ஈற்றடியும் ‘கார(ம்) இனித்திடுமே காண்’ என்றே முடியும்.

இதில் எனக்கு பிடித்த வெண்பா:

கைகட்டி நின்று கணக்கற்ற சேவைகள்
மெய்கூட்டிச் செய்ய விழைந்தாலும் – பொய்யெனவே
மாறி யுணர்ந்துவரும் வல்லாளர் சொல்லலங்
கார(ம்) இனித்திடுமே காண்.

ஆவணப்படம் : https://www.youtube.com/watch?v=exlmE-Q8yWs

படைப்புகளைப் படிக்க : http://kavimaalai.com/2018/03/kavignar-v-ikkuvanam/

கவிமாலை YouTube Channel : https://www.youtube.com/channel/UCfVz64TOzmi5-imdVy7jZLA

Leave a Comment