வாங்க பழகலாம் தமிழ்

பாலர் பள்ளி குழந்தைகளுக்கு சிண்டா(SINDA), லின் (LYNN – Literacy and Numeracy) என்ற வகுப்பு நடத்தி வருகிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலத்தையும், எண்களையும் ஒரு இனிய கற்றல் அனுபமாக சொல்லிக் கொடுத்து அவர்களை தொடக்கநிலை பள்ளிக்கு தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த திட்டத்தை வசதி குறைந்த குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தம் நோக்கத்துடன் இந்த திட்டத்தை எங்கள் பகுதியில் நடத்த
சட்டம், நிதி ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சரும், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான குமாரி இந்திராணி ராஜா கூறினார். அதனுடன் குழந்தைகளுக்கு தமிழும் சொல்லி கொடுக்க வேண்டும் என என்னிடம் அதற்கான திட்டத்தை தயார் செய்ய சொன்னார். கடந்த ஆண்டு மத்தியில் இத்திட்டத்திற்காக முயற்சிகளை தொடங்கினோம். சிண்டாவின் ‘லின்’ வகுப்புகள் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடியும் என்பதால் கடந்தாண்டு தொடங்க முடியாமல் போனது ஒரு காரணம். இந்தாண்டு கண்டிப்பாக தொடங்கி விடுவேன் என்று சொல்லியிருந்தேன்.

அதன்படியே, இன்றிலிருந்து பாலர் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், இதில் சில குழந்தைகள் பாலர் பள்ளிக்கு செல்லவில்லை. சிலர் வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். சிலர் வீட்டில் ,ஒருவர் மட்டுமே தமிழ் தெரிந்தவராகவோ இல்லை வீட்டில் சுத்தமாக தமிழ் பேசாதவர்களாகவுள்ள குடும்பங்களிலருந்து வரும் குழந்தைகள். பாலர்பள்ளியில் தமிழ் படிக்காதவர்களும் உண்டு. இவர்களுக்கு இலவசமாக தமிழ் சொல்லித்தரும் வகுப்பு நடத்துவதில் பேரானந்தம். தமிழ் படிக்காத, தெரியாத குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தமிழ்மொழி மீது ஆர்வத்தை வளர்க்க வேண்டும். அதற்கான ஒரு நீண்டகாலத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதை தீவு முழுவதும் விரிவுப்படுத்தவேண்டும் என்பதே நோக்கம். அதன் மாதிரி வடிவம்தான் இந்த திட்டம்.

சரி, இது எப்படி சாத்தியமானது. நல்லவர்கள் நம்மை சுற்றி இருப்பின் நல்ல செயல்கள் செய்வது சுலபம். முதலில், “இருமொழியின் கற்றல் அவசியம், சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்தால்தான் மொழியை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்” என தமிழ்சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்ய சொன்ன எங்கள் அடித்தள ஆலோசகர் குமாரி இந்திராணி ராஜாவுக்கு நன்றி. அதற்கான முழு சுதந்திரம் கொடுத்து ஆதரித்த எங்கள் இந்திய நற்பணி செயற்குழுவின் தலைவர் திரு கோபால், துணைத்தலைவர் திரு GanGanesan Kulandaiன் சமூகபணியில் வழிகாட்டியாக இருந்து இந்த திட்டத்திற்கு என் கூடவே பயணித்து ஆதரித்த RadRadhakrishnan Menon Sreelatha Menon்கிளுக்கு நன்றி. நான் இந்த திட்டம் தொடர்பாக என்ன உதவி கேட்டாலும் உடனிருந்து செய்த அனைத்து அடித்தள தலைவர்களுக்கும் நன்றி.

சரி, இப்படி ஒரு வகுப்பு நடத்த வேண்டுமே, எங்கே நடத்துவது என்று இடத்தை தேடியபோது குடியிருப்பாளர்களுக்கு மிக அருகில் உள்ள இடத்தை தேடினோம். ஜங்ட தொடக்கப்பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினோம். உடனே ஒத்துக்கொண்டார்கள். அதில் சில நிபந்தனைகளும் உண்டு. பள்ளிக்கூட பைகள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வர வேண்டும். காலணிகள் அணிந்து வர வேண்டும் என்பது சில. அவற்றை எப்படி வாங்குவது என யோசித்த போது, எங்கள் ஆலோசகர் அதற்கும் ஏற்பாடு செய்தார்.

யாரை வைத்து பாடம் எடுப்பது என தெரியவில்லை. எனக்கு தெரிந்த நண்பர்கள், ‘பாடம் எடுக்கிறேன்’ என ஒப்புதல் அளித்த நண்பர்கள்கூட நாள், நேரம், இடம் இவற்றில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போக, மறுத்துவிட்டனர். உடனே ஒரு யோசனை தோன்றியது, நீ ஆன் பல்துறை தொழில்நுட்ப கல்லூரியில் பாலர் பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதில் பட்டப்படிப்பு கடந்தாண்டு தொடங்கப்பட்டது. அதில் உள்ள மாணவர்களை வைத்து பாடம் எடுத்தால் என்ன? அவர்களுக்கும் இது ஒரு பயிற்சி களமாக இருக்கும் என அதில் முதலாண்டு முடித்திருக்கும் Naseemaவிடம் கேட்டேன். அவருக்கு இயலாத சூழ்நிலையை விளக்கிய அவர் உம்ராவிற்காக ஊருக்கு சென்ற இடத்திலும் அங்கிருந்தபடியே உடனடியாக தன்னுடன் பயிலும் நண்பர்களை அணுகி நான்கு பேரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் நால்வரும் உடனே தமிழ் சொல்லித்தர (தொண்டூழியராக) சம்மதித்தார்கள்.

சரி, இப்போ இடம் தயார், ஆசிரியர்கள் தயார். அடுத்து பாடத்திட்டம், பயிற்சிதிட்டம் இதை எப்படி தயார் செய்ய என நினைத்த போது, நமக்கு உதவியவர் திருமதி பத்மாவதி இராஜேந்திரன். சரஸ்வதி பாலர்பள்ளியில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் மூத்த தலைமையாசிரியராக இருந்தவர். அவரை சந்தித்து திட்டத்தை பற்றி கூறியவுடன் உடனே பாடத்திட்டம், குழந்தை பாடல்கள் என எல்லாம் தயார் செய்து எனக்கு அனுப்பி வைத்தார்.
கூடுதலாக ஒரு உதவி வேண்டும், வகுப்பு நடத்தவிருக்கும் மாணவ/ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறை நடத்தவேண்டும் என கூறினேன். அதற்கும் ஒத்துக்கொண்டு, நான்கு ஆசிரிய-மாணவர்களுக்கும் எப்படி பாடம் எடுக்க வேண்டும், குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளலாம், அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என தன் அனுபவத்தை விடுமுறை நாளாக இருந்தும் நேற்று காலை, மிக அழகாக பட்டறையில் விளக்கினார். அதை கேட்ட எனக்கே குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம் என ஆசை வந்தது(இதை வீட்டில் வந்து என் மனைவியிடம் சொல்லி வாங்கிகட்டிக்கொண்டது என் பசங்களுக்கு தெரியவேண்டாம்:). அதோடு மட்டுமில்லாமல், இந்த தமிழ் வகுப்பு திட்டத்துக்கு திருமதி பத்மாவதி வழிக்காட்டியாகயிருந்து நடத்தித்தர சம்மதித்தார்.

அடுத்து புத்தகம். தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என ஊருக்கு போன ஆசிரியர் GanGanga Baskaranம், குழந்தைகளுக்கு புத்தகம் வேண்டும் என சொன்னவுடன், அங்கிருந்த குறுகிய காலத்திலும், அந்த சூழ்நிலையிலும் எங்களுக்காக குழந்தைகளுக்கு பல புத்தகங்களை வாங்கி வந்தார். அவருக்கு நன்றி.

இந்த தமிழ் நிகழ்ச்சியை குறித்து அறிவிக்க துண்டறிக்கை தேவை என சிலரிடம் சொன்னேன். அவர்களுக்கு முடியாத சூழலில், நண்பர் Sethuraman Srinivasanன்னேன். உடனடியாக அவரே அழகாக வடிவமைத்து கொடுத்தார். சேதுவிற்கு நன்றி.

சரி, இப்போ எல்லாம் தயார். படிக்க பசங்க வேணுமே. வழக்கம் போல் வீடு, சந்தை, கடைகள் என எல்லா இடங்களிலும் சென்று மாணவர்கள் சேர்க்கைக்கு உதவிய அடித்தள தலைவர்கள் Achi Kumar MnVenkatesan Karthikeyini Sivakolunthu VenkatesanrJeremy AruldossnKannappan Mohan அனைவருக்கும் நன்றி. மூன்று மணி நேரம் தொடர்ச்சியா குழந்தைகள் பள்ளியில் இருக்க வேண்டுமே அவர்களுக்கு சாப்பிட, குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டுமே என்றபோது, அடித்தள தலைவர்கள் அனைவரும் நாமே இந்தாண்டு முழுவதும் அதை கொடுக்கலாம் என செலவை பகிர்ந்துகொண்டனர்.

மாணவர்களோடு, நானும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என ஒரு வயதான அடித்தளத் தலைவர் சொல்ல, சரி கற்றுக்கொள்ளலாம் ஆனால் அப்படியே குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும், சரியாக அவர்கள் பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும், அதற்கு உதவ முடியுமா என கேட்டவுடன் அவரும் ஒத்துக்கொண்டார்.

சரி, இதையெல்லாம் தாண்டி முக்கியமா நன்றி சொல்ல வேண்டியது சிண்டாவிற்கும்(SINDA), அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பரதன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு, அதன் குடும்ப நலத்துறை அதிகாரி திருமதி ஜெயந்தி மற்றும் அவரது குழுவிற்கும்தான்.
இந்த திட்டம் குறித்து திரு அன்பரசுவை சந்தித்து பேசியபோது எனக்கு ஆதரவு கொடுத்து ஊக்குவித்தார். சிண்டாவும் இந்த மாதிரியான திட்டத்தை தயார் செய்து வருகிறது இருந்தாலும் முதலில் நீங்கள் தொடங்குங்கள் அதற்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார். திரு பரதனிடம் பேசியபோது தமிழ் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, சிண்டா சம்பளம் வழங்க தயார் என தெரிவித்தார். இப்படி மாணவ-ஆசிரியர்களுக்கு ஊதியம், பட்டறை நடத்த மதிப்பூதியம், திட்டத்துக்கு ஆதரவு என திரு Anbarasu Rajendran தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி, உதவிகள் புரிந்து இந்த தமிழ்வகுப்பு நடத்துவதற்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறார் (தமிழில் சிண்டாவின் துண்டறிக்கை கொடுத்ததற்கும் நன்றி).

தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் தொடங்கிய இந்நாளில் தமிழ்மொழி கற்பிக்க அதுவும் தமிழ் தெரியாத சில குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர நீண்டநாள் திட்டத்தை தொடங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதை சாத்தியப்படுத்தியவர்களை திரும்பி பார்க்கையில் இதில் எத்தனை பேர் பங்கெடுத்திருக்கிறார்கள் என ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.

என் மீது நம்பிக்கை வைத்து அன்போடு ஆதரவளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏🙏

   

       

          

 

Leave a Comment