நித்தி : சிஷ்ய கோ(கே)டிகளே நம்மளக்கு வசமா ஒரு ‘மேட்டர்’ சிக்கியிருக்கு….
கோ(கே)டிகள் : ‘மேட்டரா’…..? என்ன சுவாமி…புதுசா?
நித்தி : ச்சி அது இல்ல, கவிப்பேரரசு ஏதோ சொன்னாராம், அத வச்சு நம்ம ஏதாவது பரபரப்பா பண்ணலாம். என்ன பண்ணுங்க, முதல்ல நம்ம ‘இளவரசி’யை வச்சு அவர அசிங்கசிங்கமா திட்டி பேசச்சொல்லி ஒரு காணொளி வெளியிடுங்க.
கோ(கே)டிகள் : ஏன், ‘இளவரசி’ சுவாமி ?
நித்தி : அவ பேசுனாதான், மக்கள் ஏதோ அழகான பொண்ணு பேசுதேனு பாப்பாங்க, அது கெட்ட வார்த்தை பேசும்போது இன்னும் எஃப்க்ட் கூடும், அதான்.
கோ(கே)டிகள் : உள்ள பேசுறமாதிரியே வெளியேவும் பேசுனா, நம்மள தப்பா நினைக்க மாட்டாங்களா சிவாமி.
நித்தி : இப்ப மட்டும் என்ன நம்மள நல்லவங்கனா நினைக்குறாங்க, நம்ம லீலைதான் எல்லா ‘சேனல்’லையும் ஓட்டுனாங்களே..
கோ(கே)டிகள் : அது சரி சுவாமி, நம்ம மேல ஏற்கனவே பல கேஸ் இருக்கு இப்ப புதுசா ஏதாவது பிரச்சனை பண்ணி, திரும்ப உள்ள பிடிச்சு போட்றபோறாங்க.
நித்தி : வாய்ப்பே இல்லை, இப்ப கர்நாடகாவுல தேர்தல் வரப் போகுது. நம்மள பிடிச்சா, பிஜேபி அத வச்சு அரசியல் பண்ணி ஆட்சிய பிடிச்சடும்னு பயத்துல காங்கிரஸ் நம்ம மேல கைய வைக்காது, கவலப்படாதீங்க. தமிழ்நாட்டுல ஆட்சி நடக்குதானே பலருக்கு சந்தேகமா இருக்கு. அதனால் நம்மள தூக்கி நிறுத்திக்க இதுதான் சரியான சமயம்.
கோ(கே)டிகள் : சரி, இந்து மக்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வருமா சுவாமி?
நித்தி : ரொம்ப சிம்பிள், சம்பந்தமே இல்லாம இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் திட்டுங்க. பக்தாஸ் கூட்டம் நம்ம பக்கம் சாய்ஞ்சிடும். அப்புறம் நம்மளுக்காக அவங்க பேசுவாங்க.
கோ(கே)டிகள் : ஆனா, இஸ்லாமியர்களும், கிறுத்தவர்களுக்கும் நம்ம மேல கோபம் வந்தா என்ன பண்றது?
நித்தி : அது வரணும். அப்பத்தான் இந்து மதத்தின் ஒட்டு மொத்த குத்தகைகாரங்க நாமதான்னு ஒரு ‘பில்டப் டெவலப்’பாகும். வேற எந்த இந்து அமைப்பும் இது வரை தீவிரமா இறங்கல, அதனால நாம இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்து மதத்தின் காவலர்கள் நாமதான்னு சொல்லி தினமும் ஒரு நாலு காணொளி போடணும்.
கோ(கே)டிகள் : இதனால, நிறைய எதிர்வினைகள் வருமே சுவாமி?
நித்தி : வரட்டும், அது தானே நமக்கு வேணும். நம்மள எல்லாரும் திரும்பி பார்க்கணும். இலவசமா நமக்கு விளம்பரம் கிடைக்கணும். முக்கியமா, காணொளில திட்டும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கமா திட்டுங்க. எதாவது சந்தேகம்னா என்கிட்ட வாங்க, நா சொல்லித்தரேன்.
கோ(கே)டிகள் : பரவாயில்லை சுவாமி. அதெல்லாம் இந்த ஆசிரமத்தில நல்ல பழகிடுச்சி சாமி. ஆனா இந்த முகநூல் போராளிகள் நினைச்சா பயமாயிருக்கு சுவாமி.
நித்தி : அத பத்தி கவலப்படாநீங்க. அதுக்குதான் பெண்கள பேச சொல்றேன். அவங்க கவனம் வேற மாதிரி போய்டும். அடுத்து, சில படிச்ச கூட்டம், ”இதுல என்ன தப்பு இருக்கு, இப்ப யாரு கெட்டவார்த்தை பேசல? இரண்டாம் வகுப்பு பொண்ணு ‘F’ world use பண்ணுது” அப்படினு கிளம்பும். இன்னொரு கூட்டம், பெண்ணியம் பேசும். முக்கியமா இந்த நாத்திகர்கள எதிர்க்கிற கூட்டம் நம்மள நிறையவே ‘சப்போர்ட்’ பண்ணும். இன்னொரு கூட்டம் நம்மள வச்சு மீம்ஸ் போடும். அடுத்த ஒரு கூட்டம் நம்ம எத போட்டாலும் ‘share’ பண்ணும்.இப்படியே அவங்கள தொடர்ந்து ‘எங்கேஜ்’ பண்ணலாம்.
கோ(கே)டிகள் : சுவாமி, சரி பத்திரிக்கை, நியூஸ் சேனல் நம்மள கிழிகிழினு கிழிக்குமே சுவாமி.
நித்தி : அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் பண்ணாது. கவிஞர் சொன்ன விஷயத்தை இரண்டு நாள் போடுவாங்க, அப்புறம் வேற பிரச்சனைக்கு போய்டுவாங்க. ஆனால் நம்ம இந்த பிரச்சனைய வச்சதான் கல்லா கட்ட முடியும். அதனால அடுத்த ஒரு மாசத்துக்கு நமக்கு இதுதான் வேலை. ‘சேனல்ஸ்’ ரேட்டிங்க கூட்ட நம்மள போட்டி போட்டு காண்பிக்கும். அதனால், எல்லோரும் நம்ம சீருடைய போட்டுக்கோங்க. இரவு எத்தனை மணி ஆனாலும், சீருடையுடன், நல்ல ‘make up’ பண்ணி, நெத்தில பட்டை, கழுத்தல ருத்திராட்சை கொட்டை கண்டிப்பாக இருக்கணும். இதெல்லாம் விட மிக முக்கியம் உங்களுக்கு பின்னாடி என்னோட முழு உருவச் சிலை இல்லனா என்னோட முழு உருவக் கட்டவுட் இல்லை படம் இருக்கணும். நம்ம ஆசிரம ‘காமிரமேன்’, மேக்கப் ஆர்டிஸ்ட் எல்லோரையும் போர்க்கால அடிப்படையில வேலை பார்க்கச் சொல்லியிருக்கேன்.
கோ(கே)டிகள் : சரி சுவாமி, பணம் நிறைய செலவாகுமே…
நித்தி : அதுக்குத்தான், நம்ம வெளிநாட்டு பக்த கோ(கே)டிகள் இருக்காங்களே, அவங்க சரியான ஏமாந்தவனுங்க. நம்ம நாலு சமஸ்கிருத மந்திரித்ததை சொல்லி, ‘stress relief’, ‘inner awakening’, yoga, meditation அப்படி ஏதாவது சொன்னா போதும் பணத்தை வாரி இறைப்பாணுங்க…சொல்ல மறந்துட்டேன். அவன்களுக்கும் அந்த தமிழ் கெட்ட வார்த்தையை அப்படியே ஆங்கிலத்தில எழுதி கொடுங்க….அப்படியே அந்த கெட்டவார்த்தைக்கு நடுவுல அங்கங்க மந்திரம், பாரதியார் பாட்டு, இந்து, சனாதன தர்மம் இப்படி மானே தேனேனு போட்டுகோங்க…அப்பத்தான் நம்மள பாமர மக்கள் நாலும் தெரிஞ்சவங்கனு நம்புவாங்க…
கோ(கே)டிகள் : இந்த ஆண்டாள் பத்தி ஏதாவது சொல்லனுமா சுவாமி?
நித்தி : நோ, நமக்கு ஆண்டாள பத்தி ஒன்னும் தெரியாது. அதனால் அந்த ‘சப்ஜக்ட்’குள்ள போக வேண்டாம். முதல்ல இரண்டு காணோளியில ஆண்டாள் பேர மட்டும் சொல்லுங்கள். அப்புறம் ஃபோகஸ் முழுக்க திட்றதுலதான் இருக்கணும். அந்த இராசாவே மிரண்டு போயிடணும். அப்புறம் இந்த கவியுக ஆண்டாளும் நானே, பெருமாளும் நானே என்பதை மறந்துடாதீங்க.
கோ(கே)டிகள் : நன்றி சுவாமி.
கேடியானந்தம்….
படம் : நித்தி செட்டு, சந்யாசி கதாபாத்திரங்கள் கடவுள் அரிதாரம் பூசிய போது எடுக்கப்பட்டது. இளவரசி பகத்திலிருந்து ஆட்டைய போட்டது.