நினைவின் தடங்கள்

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு முதன் முறையாக ‘நினைவின் தடங்கள்’ என்ற நகழ்ச்சியை நடத்துகிறது. இதில் இந்தாண்டு மறைந்த 7 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து 7 பேச்சாளர்கள் பேச இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி, சனிக்கிழமை சரியாக மாலை ‪6:00‬ மணிக்கு விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலக வாரியத்தின் 5வது தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் தொடங்குகிறது. ‪7:30‬ மணிக்கு நிகழ்ச்சி முடிந்துவிடும் என அறிகிறேன்.

படைப்பாளிக்கு மரணம் என்பது என்றுமே இல்லை. அவனின் எழுத்துகள் என்றும் அவன் பெயர் சொல்லும். அந்த வகையில் கீழ்கண்ட எழுத்தாளர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், அவர்களுடைய படைப்புகள் என்றும் நமக்கு அவர்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இந்தப் படைப்பாளர்களில், நான் நேரில் சந்தித்தது திரு எம் ஜி சுரேஷ் அவர்களை மட்டும்தான். தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் ஒரு மாதாந்திர கூட்டத்தில் என் கவிதைக்காக அவரிடம் இருந்து பரிசு பெற்றது மறக்க முடியாத தருணம்.

மறைந்த அந்த எழுத்தாளர்களின் பெயர்கள் இதோ:

1. அசோகமித்ரன் – தோற்றம் : 22 செப்டம்பர் 1931, மறைவு : 23 மார்ச் 2017
2. மேலாண்மை பொன்னுசாமி – தோற்றம் : 1951, மறைவு : 30 அக்டோபர் 2017
3. எம் ஜி சுரேஷ் – தோற்றம் : 1953, மறைவு : 2 அக்டோபர் 2017
4. பெ திருவேங்கடம் – தோற்றம் : 28 செப்டம்பர் 1944, மறைவு : 9 செப்டம்பர் 2017
5. பி பி காந்தம் – தோற்றம் : 2 ஜனவரி 1937, மறைவு : 21 ஜூன் 2017
6. பாக்கியம் ராமசாமி – தோற்றம் : 1 ஜூன் 1932, மறைவு : 7 டிசம்பர் 2017
7. மா நன்னன் – தோற்றம் : 30 ஜூலை 1923, மறைவு : 7 நவம்பர் 2017

நம் சிங்கை நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு இந்நிகழ்ச்சியை நடத்துவதால், இலக்கிய ஆர்வலர்கள் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது. அப்படி அதிக அளவில் கலந்துகொண்டால்தான் மேலும் நல்ல பல நிகழ்ச்சிகள் நடத்த நூலகம் ஊக்கம் கொடுக்கும். அதிலும் இந்தப் பிரிவின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற திரு Azhagiya Pandiyan அவர்களின் முயற்சியால் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் நிச்சயம் பயனுள்ளதாகவும், தரமாகவும் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. 7 எழுத்தாளர்களின் படைப்புகள் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்படும். நிகழ்ச்சிக்கு வருபவர்கள் புத்தகங்களை இரவல் பெற்றுச் செல்லலாம்.

அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தரவும்.

Leave a Comment