லா பாய்ன்ட்

ஆட்டோ சங்கரின் பேட்டி இதை விட தெளிவாக இருக்கும், நித்தியின் ‘லா பாய்ன்ட்’ செல்லும்படி இருக்கும், குற்றவாளிகள் பலர் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் சிரித்து கொண்டே செல்வதை பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாம்.

உணர்ச்சிவசப்படாமல் பிரச்சனைகளை, சூழ்நிலைகளை சமாளிப்பது, சாதுர்யமாக பேசுவது, பேட்டி கொடுப்பது ஒரு தலைவனுக்கான தகுதி என்று வைத்துக்கொண்டாலும் அது மக்களுக்காக, மக்கள் நலனுக்காக இல்லாமல், பலரின் வைத்தெரிச்சலைக் கொட்டி கொள்ளையடித்த சொத்தை, புழக்கடைவாசல் வழியாக, பணத்தால் வந்த பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே என்பதை உணராத மக்கள் இருக்கும் வரை தின(ம்) க(ரன்)ரையான்கள் நம்மை அரித்துக் கொண்டேதான் இருக்கும், நாம் உணர்ச்சிவயப்பட்டுக் கொண்டுதான் இருப்போம்.

பாண்டேவை ஏளனபடுத்துவதாக நினைத்து பாம்புக்கு மகுடி ஊதுகின்றனர்….😱

#தந்தி_பேட்டி
#புகழும்_போராளிகள்

Leave a Comment