இந்த முகநூல் போராளிகள், கோலாவ கூவி கூவி வித்து அவருக்கு கல்லாகட்ட உதவுறதோட முதல்வர் நாற்காலியிலும் உட்கார வச்சு அழகு பார்க்காம ஓய மாட்டாங்க போலையே #ப்பா_நம்மளும்_போட்டாச்சு.
Month: June 2017
ரமலான் மாதத்தையொட்டி சிங்கையின் வட மேற்கு பகுதிகளில் வசிக்கும் சில இஸ்லாமிய குடும்பங்களுக்கு நோன்பு துறக்க 5000 நோன்பு கஞ்சியும், பிரியாணி உணவும் தயாரிக்க தொண்டூழியர்கள் தேவைப்படுகிறார்கள். “இதயத்தில் ஒளியேற்று இல்லத்திற்கு வெளிச்சம் கொடு” என்ற குழு இதற்கு உதவ முன் வந்துள்ளது. நீங்களும் இதில் சேர்ந்து உதவ முன் வர வேண்டுகிறோம். தொண்டூழியர்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை, 4-ஜீன்-2017 அன்று 100, அட்மிரால்டி சாலை, சிங்கப்பூர் 739980 என்ற முகவரியில் அமைந்திருக்கும் மார்ஷ்லிங் சமூக மன்றத்துக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். காலை மணி 9:00 முதல் 1:00 மணி வரை, மதியம் மணி 12:00 மணி முதல் 4:00 மணி வரை என இரண்டு வேளைகளாக நடைபெறும் இதில் சமையல் செய்வது, காய்கறிகள் நறுக்குவது, சாப்பாடு கட்டுவது என தொண்டூழியர்கள் தங்களுக்கு ஏற்ற வேலைகளை செய்யலாம். இயன்றவர்கள் வருக, இப்புனித பணிக்கு உதவி புரிக.