பழமொழி பேசலாம்

‘பழமொழி பேசலாம்’ என்ற நிகழ்ச்சியை “உறுமி” தமிழ் மின்னிதழ் என்ற அமைப்பு நேற்று(29-ஏப்ரல்-2017, சனிக்கிழமை) காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது.

இது என்ன நிகழ்ச்சினு கேக்குறீங்களா?

இப்ப இந்த இளைஞர்களிடையே ‘தம்படம்’ என்ற Selfie மிக பிரபலமாயிருக்கு. அதையே ‘தம்-காணொளி'(selfie-video) பதிவா உயர்நிலைப்பள்ளி மாணவர்களை செய்யச்சொல்லலாம் என்ற அதில் ஒரு போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறார் ‘உறுமி’யின் தலைவர் திரு கல்யாண்குமார் . இவர் பலதுறைதொழிற் கல்லூரியில் மென்பொருள் துறையில் பணி புரிந்து வருகிறார்.

தமிழ்மொழியை மாணவர்களிடைய கொண்டு செல்வதின் ஒரு யுக்தியாக அவர்களை ‘பழமொழிகள்’ பேசச்சொல்லி அதை அவர்கள் பாணியில் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் ‘YouTube’ல் வலம் வரச்செய்திருக்கிறார். இது நிறையபேர்களுக்கு

மேலும் படிக்க…

அதிபதியின் ‘தெனாலி’

அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம் தமிழ்மொழி விழாவினையொட்டி இந்தாண்டு ஏப்ரல் 20(வியாழன் மாலை மணி 3:30), ஏப்ரல் 21 (வெள்ளி மாலை மணி 3:00, இரவு மணி 8:00), ஏப்ரல் 22 (சனி இரவு மணி 8:00) ஆகிய மூன்று நாள்கள் நான்கு காட்சிகள் “தெனாலிராமன் – விகடகவி” என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். மாலை காட்சிகள் மாணவர்களுக்கானது.

நான் வெள்ளிக்கிழமை இரவு மணி 8:00 காட்சிக்கு 7:00 மணிக்கே சென்றுவிட்டேன்.
நாடகம் குறித்த கையேடு உதவியாக இருந்தது. என்னுடைய இந்த பதிவு இந்த காட்சியை குறித்து மட்டுமே.

நாடகம் தொடங்கும் முன் ‘யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம், காணொளியில் பதிவு செய்யலாம், முகநூலில் நேரலையாக ஒளிப்பரலாம்’ என அறிவிப்பு செய்தது எதிர்பார்க்காதது. வரவேற்கத்தக்க அறிவிப்பு.

சரியாக மணி 8:00க்கு நாடகம் தொடங்கியது. முதலில் சாமியார் ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுடன் அனைவரது இருக்கைக்கு அருகில் சென்று நலம் விசாரித்து வரவேற்றார். சிஷ்யர்களாக வந்த குழந்தைகள் அனைவரும் அழகாக சில பார்வையாளர்களிடம் சென்று ‘வாங்க, வணக்கம்’னு பேசியது மிக அழகு. திரை விலகுவதற்கு முன்னரே வித்தியாசமான இந்த வரவேற்பு, நாடகத் தொடக்கம் நன்றாகயிருந்தது.

மேலும் படிக்க…

கவிச்சாரல்

அவாண்ட் நாடகக் குழு இந்தாண்டு தமிழ்மொழி விழாவையொட்டி சே.வெ. சண்முகத்தின் நாடகத்தை மலாய் மரபுடைமை நிலையத்தில் இரண்டு நாள்களில் (21-ஏப்ரல்-2017,22-ஏப்ரல்-2017) மூன்று காட்சிகளாக(சனிக்கிழமை மதியம் -1, வெள்ளி, சனி மாலை-2) அரங்கேற்றினார்கள்.

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் தொகுத்து வெளியிட்ட எழுத்துச்சிற்பி சே வெ சண்முகத்தின் கல்யாணமாம் கல்யாணம், ‘‘அதுதான் ரகசியம்’, ‘நாலு நம்பர்’, ‘மீன் குழம்பு’, ‘மாப்பிள்ளை வந்தார்’ என்ற ஐந்து மேடை நாடகங்களை ஒன்றாக இணைத்து ஒரே நாடகமாக மேடையேற்றினார்கள். எழுத்துச்சிற்பி சே வெ சண்முகத்தை பற்றிய குறிப்பு படத்தில் உள்ளது.

என்னுடைய இந்த பின்னூட்டம் சனிக்கிழமை மதியம் பார்த்த காட்சிக்கு தொடர்புடையது. வேறு காட்சிகள் பார்த்தவர்களுக்கு இது பொருந்தாமல் போகலாம். ஏனென்றால், நாடகத்தில் ஒவ்வொரு காட்சியும் ஒரு புதிய படைப்பு.

காட்சி – 1
———–
கதாபாத்திரங்கள் எல்லொரும் ஒன்றாக ‘டீபாய்’யை சுத்தி நின்னு ஏதோ செய்வார்கள். அவ்வளவு தான் காட்சி. சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல. ஆனா அந்த பழைய காலத்து பிண்ணனி இசை ஈர்த்தது.

மேலும் படிக்க…

தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்

 எச்சரிக்கை: கண்டிப்பாக முதல் பகுதியை படிக்கவும். இரண்டு பகுதியையும் பொறுமையாக உள்வாங்கி படிக்க 4 நிமிடமும் 40 நொடிகளாகும். மேலோட்டமாக படிக்க 2 நிமுடமும் 38 நொடிகளாகும். படிக்காமல் வாழ்த்துகள் மட்டும் போட 18 வினாடிகளாகும். படிக்காமல் வெறும் ‘லைக்’ மட்டும் போட ஒரு வினாடி ஆகும். படித்துவிட்டு ‘லைக்’ போடாமல் போனால் பல மணி நேரம் வருத்தப்பட வேண்டியிருக்கும் .

முதல் பகுதி
——————–

“பேலியோ உணவு முறைக்கு மாற போறேன்”,னு சொன்னதும்
“என்னது போலியோவா”னு என் மனைவி சீத்தா  கேட்க,
“இல்லம்மா, இது ஒரு உணவு முறை. இத கடைபிடிக்கறவங்க சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் இப்படி எதுவும் சாப்பிடக்கூடாது”
“அப்புறம், என்ன இலை, தழையவா சாப்பிடனும்”
“இல்ல, தினமும் காலைல 100 பாதாம்பருப்பு அப்புறம், பட்டர் டீ…”
“இங்க பாருங்க, என் உயிர வாங்காம, ஒழங்கா போடுறத சாப்பிட்டு, அமைதியா போயிடுங்க…”

மேலும் படிக்க…

தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்

எச்சரிக்கை: கண்டிப்பாக முதல் பகுதியை படிக்கவும். இரண்டு பகுதியையும்
பொறுமையாக உள்வாங்கி படிக்க 4 நிமிடமும் 40 நொடிகளாகும். மேலோட்டமாக
படிக்க 2 நிமுடமும் 38 நொடிகளாகும். படிக்காமல் வாழ்த்துகள் மட்டும் போட 18
வினாடிகளாகும். படிக்காமல் வெறும் 'லைக்' மட்டும் போட ஒரு வினாடி ஆகும்.
படித்துவிட்டு 'லைக்' போடாமல் போனால் பல மணி நேரம் வருத்தப்பட
வேண்டியிருக்கும் ��

முதல் பகுதி
— — — — — —

"பேலியோ உணவு முறைக்கு மாற போறேன்",னு சொன்னதும்
"என்னது போலியோவா"னு என் மனைவி Seetha கேட்க,
"இல்லம்மா, இது ஒரு உணவு முறை. இத கடைபிடிக்கறவங்க சோறு, இட்லி, தோசை,
சப்பாத்தி, பொங்கல் இப்படி எதுவும் சாப்பிடக்கூடாது"
"அப்புறம், என்ன இலை, தழையவா சாப்பிடனும்"
"இல்ல, தினமும் காலைல 100 பாதாம்பருப்பு அப்புறம், பட்டர் டீ…"
"இங்க பாருங்க, என் உயிர வாங்காம, ஒழங்கா போடுறத சாப்பிட்டு, அமைதியா
போயிடுங்க…"
"இல்லம்மா, இந்த பேலியோவ கடைபிடிச்சு, நம்ம ரவியோட அப்பாவுக்கு நீரிழிவு
நோய் சரியாகிடுச்சாம், அவரோட அண்ணன் ஒருத்தர் 110 கிலோ எடையிலயிருந்து
80 கிலோவுக்கு குறைஞ்சிடுச்சாம்"
"சாப்பிடாமா இருந்தா எடை குறையத்தான் செய்யும். நம்ம சாப்பிடற இட்லியில
எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு தெரியுமா. ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிட்டு, நல்ல
உடற்பயிற்சி பண்ணா ஆரோக்கியமா இருக்கலாம்"
இப்படி மூனு ஆண்டுகளுக்கு முன்னாடி என் பேலியோ சமயமாற்றத்தை தடை
செஞ்சுட்டாங்க என் மனைவி.

பேலியோ மக்களே என்னை அடிக்க வராதீங்க, நான் பேலியோவுக்கு எதிரானவன்
அல்ல. கடவுள் இல்லேனு சொல்லல, இருந்தா நல்லாயிருக்கும்தான்னு சொல்றேன்.

சரி, இப்ப எதுக்கு இத சொல்றேனு கேக்குறீங்களா? கடந்த வாரம் தமிழ்மொழி
விழாவில், 15-ஏப்ரல்- 2017, சனிக்கிழமை மாலை உமறுப்புலவர் அரங்கில்
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்(சிங்கப்பூர்) நடத்திய
விழாவில் "தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர்" என்று சிறப்புரையாற்றிய மருத்துவர்
கு சிவராமன் இட்லியின் பெருமையை எடுத்துச்சொன்னார்.

ஜெர்மனி, இத்தாலி, சீனா, பிரேசில், மத்திய தரைகடல் பகுதி, இந்தியா என பல
நாட்டு உணவு வகைகளையும் வைத்து ஆராய்ச்சி மேற்கொண்ட உணவு மற்றும்
வேளாண் அமைப்பு உலகத்தின் மிகச் சிறந்த காலை உணவு என தேர்ந்தெடுத்தது
இட்லி தான் என கூறினார். இதை ஐக்கிய நாட்டின் உணவு மற்றும் வேளாண்
அமைப்பில்(Food and Agriculture Organization of United Nation) வேலை செய்த
அக்‌ஷயா என்ற இந்தியர் ஆக்ஸ்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸின் "Ancient Indian Foods"
என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார். அது ஏன் என்ற காரணத்தை
கூறும்போது இந்த ஒரு உணவைத்தான் தாய்பாலூட்டிய காலத்திற்கு(weaning period)
பிறகு குழந்தைகளுக்கு கொடுக்க முடியும், நோயுற்றவர்களுக்கு கொடுக்க முடியும்,
அறுவை சிகிச்சைக்கு பிறகு கொடுக்க முடியும், இளமையிலும், முதுமையிலும்
கொடுக்க முடியும். எல்லாம் காலத்திலும், எல்லா பருவத்திலும் கொடுக்க கூடிய ஒரே
உணவு இட்லிதான் என சொன்னார்.

உலகில் பல்வேறு உணவு கட்டமைப்பு உள்ளது. சீனாவில் மகிச் சிறந்த உணவு
கட்டமைப்பு உள்ளது, பிரேசிலில் மிகச் சிறந்த உணவு கட்டமைப்பு உள்ளது, பல்வேறு
ஆப்பிரிக்க நாடுகளில் அவர்களுக்கென்று மிகச் சிறந்த உணவு கட்டமைப்பு உள்ளது.
ஆனால் இங்கெல்லாம் இல்லாத ஆகச்சிறந்த நுண்ணறிவு நம் தமிழ் பாராம்பரிய
உணவில்தான் உள்ளது என்றார். எடுத்துகாட்டாக சமைத்து உணவை தாளிச்சு
எடுப்பது என்பது தமிழ் உணவில் மட்டும்தான், வேறு எந்த நாட்டு உணவு
வகைகளிலும் 'தாளிதம்' என்ற முறை கிடையாது. தாளிப்பது என்பது மணத்திற்காக
அல்ல அதற்கு பின்னால் நிறைய மருத்துவம் குணம் உள்ளது என்றார். நான்காயிரம்
ஐந்தாயிரம் ஆண்டு அறிவு இதில் உள்ளது. அதனால் இந்த தமிழ் உணவை
அமுதென்று சொல்கிறோம் என்றார்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த
உணவு 'இட்லி தாளிச்சது'தான்:) சின்ன வயசில இருந்து இன்னைக்கு வரைக்கும்
எத்தனை முறை சாப்பிட்டாலும் திகட்டாத, அலுக்காத உணவு. நெல்லை
வட்டாரத்தில் அதிகமாக இந்த உணவு சாப்பிடுவார்கள். பொதுவாக இது தமிழ்நாட்டு
மக்களிடையே 'இட்லி உப்புமா' என அறிமுகமாகி பிரபலமானது 'சூரியவம்சம்'
படத்தக்கு பிறகுதான் என்று நினைக்கிறேன்.

தான் தமிழ் உணவு குறித்து பேசவேண்டிய அவசியம் ஏன் என்று விளக்கினார்.

உணவு என்றால் என்ன என்று விளக்குவதற்கு உலகம் முழுதும் யோசித்து
கொண்டிருக்கிறார்கள். "உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" என்று தமிழில்
அன்றே சொல்லியிருக்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால் எந்த அளவிற்கு
நிலத்தையும் நீரையும் பாதுக்காப்பாக வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு உணவு
பாதுகாப்பாக இருக்கும் என்பதே என்று விளக்கினார்.

20 ஆண்டுக்கும் மேலாக தான் பல்வேறு விதமான நோய்க்கு ஆளானவர்களை
தன்னுடைய மருத்தமனையில் சந்தித்து வருவதாகவும். அதில் அண்மையில் நன்கு
படித்து நல்ல வேலையில் உள்ள இளம் தம்பதிகள் தங்கள் 3 வயது குழந்தையுடன்
தன்னை காண வந்ததை கூறினார். காலை எப்போதும் போல் வேலைக்கு சென்ற
அந்த இள வயது தந்தை மாலையில் தலைவலி என்று மருத்துமனைக்கு போக
அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை கூறிய அவர் ஒரே
நாளில் மனிதனின் வாழ்க்கையை புற்றுநோய் எப்படி புரட்டி போடுகிறது என்பது
பற்றி குறிப்பிட்டார்.

இது உண்மை, திரைப்படத்தில் மட்டுமே பார்த்து வந்த இந்த புற்று நோய் கடந்த
ஐந்தாண்டுகளில் எனக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களையும் , நண்பர்களையும்
தாக்கிய போது அதன் கொடுமை என்ன என்பதை நேரடியாக பார்க்க முடிந்தது.
இந்த நோய்கள் கூட்டம் ஏன் இப்படி பெருகிவருகிறது என்று நானும் சிந்தித்ததுண்டு.

இந்தியாவில் புற்றுநோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்
என்றும் அதிகமாக குழந்தைகள் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவதில் தமிழகம்
முதலிடம் என்றும் கூறினார்.

இந்த மாதிரியான நோய்கள் கூட்டம் நம்மை தாக்குவதற்கான மூன்று முக்கியமான
காரணங்களில் முதலில் நிற்பது உணவு. நமக்கு முன் வைக்கப்படுகின்ற
பரிமாறப்படுகின்ற இந்த உணவு முறைக்கு பின் ஒரு மிகப்பெரிய வணிக வன்முறை
உள்ளது, அது பயிரிடுவதில் தொடங்கி, வளர்த்து, தயாரித்து, பக்குவபடுத்தி,
பதப்படுத்தி, பாதுகாத்து பரிமாறப்படுவது வரை வணிகப் பிண்ணணி உள்ளது என்று
கூறினார். மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருப்பதாக
கூறினார்.

நம் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் பெரிய கல்வியாளராக,
ஆளுமைமிக்கவராக, பண்பாளராக வளர்க்க வேண்டுமென்று பாடுபடுவோம். நாம்
பட்ட கஷ்டம் நம் குழந்தைகள் படகூடாதென்று நினைப்போம். அந்த கல்வியை
பெறுவதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் நிறைய வந்துவிட்டன. நம்
குழந்தைகளுக்கு மாபெரும் எதிர்காலம் இருக்கிறது. ஆனால் ஆரோக்கியம்?
நமக்கு நம் மரபு மீது பரிச்சயம் உண்டு, பழக்கம் உண்டு, நம்பிக்கை உண்டு ஆனால்
நம் மரபு பரிமாறப்படுகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி என்றார். நாம்
ஒவ்வொரு நாளும் மெனக்கெட்டால் மட்டுமே, ஒவ்வொரு நாளும் அக்கறை
கொண்டால் மட்டுமே நாம் நம் அடுத்த தலைமுறையை ஆபத்தில்லாமல் வைத்திருக்க
முடியும் என்றார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மிகப்பெரிய கருத்தரங்கு
ஒன்றில் திருமதி மதுபாலா என்பவர் அங்கு கூடியிருந்த மருத்துவர்கள், நோயாளிகள்,

செவிலியர்கள் என பலருக்கும் மத்தியில் பேசிய போது தானும் அங்கிருந்ததாகவும்,
அவர் தொடக்கத்தில் சொன்ன வரிகள் தன்னை மிகவும் பாதித்தாகவும் கூறினார்.
அப்படி அவர் சொன்னது இதுதான், "இந்த ஒரு தலைமுறைதான் தன் அடுத்த
தலைமுறையினரின் மரணத்தை அருகிலிருந்து தங்கள் கண்களால் பார்க்கபோகிற
துரதிர்ஷ்டமான தலைமுறை" இதனை தரவுகளோடு விளக்கியுள்ளார்.

நாம் அடுப்பங்கரையில் நாம் செலவழிக்ககூடிய 5, 10 நிமிடங்கள் நம் குழந்தைகளுக்கு,
அடுத்த தலைமுறைக்கு 5,10 வருடங்களை அளிக்கும் என கூறினார்.

மேலும் பல தமிழ் உணவு வகைகளின் பெருமை குறித்து பேசிய மருத்துவர்,
சின்ன வெங்காயம் போட்ட தயிர் பச்சடி எப்படி புற்றுநோயை தடுப்பதற்கு சிறந்த
உணவாகிறது என்று விளக்கினார். ரத்தசோகை போக்குவதற்கு மிகச் சிறந்த உணவு
கம்பு. கேழ்வரகு குழுந்தைகளுக்கு மிகச்சிறந்த திட உணவு என்றார். சிறு தானியங்கள்,
செஞ்சோறு, உளுந்தம் பருப்புச் சோறு மற்றும் பெருங்காயம், சோம்பு, லவங்கம்,
பட்டை போன்ற மணமூட்டிகளில் பல மருத்துவ குணங்கள் உண்டு என்றார். நாவல்
பழம் எவ்வளவு சிறந்தது என்றும் விளக்கினார். எந்த வகையிலும், எந்த காலத்திலும்
எள்ளளவு மது கூட உடம்பிற்கு நல்லதல்ல, இளையர்கள் மதுவை தவிர்க்கவேண்டும்
என வலியுறுத்தினார்.

1870ல் இங்கிலாந்தில் அதிகமாக நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய்
வருவதற்கான காரணங்களை ஆராய அந்நாட்டு மகாராணி பல நாடுகளில் இருந்து
பிரபல மருத்துவர்களும் ஆராயச்சியாளர்களும் கலந்து கொண்ட கூட்டத்தை
கூட்டினார். பத்து காரணங்கள் கண்டறியப்பட்டு விவாதப்பட்டன(கையில்
புகைச்சுருட்டுடன்:)). ஆனால் புகைப்பிடிப்பது அதில் இல்லை. பிறகு 20 ஆண்டுகள்
கழித்து ஜெர்மானிய மாணவர் ஒருவர் புகையிலை தொழிற்சாலைகளுக்கும் இந்த
புற்றுநோய்க்கும் சம்பந்தம் இருக்கு என சொல்கிறார். அது நிராகரிக்கப்படுகிறது. 40
ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே மாணவர் தனது போராசிரியர்களுடன் சேர்ந்து சில
நோயாளிகளிடம் செய்த சோதனையின் அடிப்படையில் ஓர் ஆய்வறிக்கை
சமர்பிக்கிறார். இப்போதும் அது நிராகரிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் டொபாக்கோ
கம்பெனி ஒரு 'டாக்குமென்டரி' படம் எடுத்து புகையிலைக்கும் புற்றுநோய்க்கும்
சம்பந்தம் இல்லை என ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் மூலம் சொல்கிறது.
கடைசியில் 70 ஆண்டுகள் பிடித்தது இந்த புற்றுநோய்க்கு புகையிலைதான் காரணம்
என்பதை உறுதி செய்வதற்கு. அதற்குள் பல கோடி மக்கள் அதனால்
பாதிப்புக்குள்ளாயினர்.

அதுபோலவே துரித உணவுகள் மற்றும் இராசாயனத்தை கொட்டி தயாரிக்கப்படும்
உணவுகளால் புற்றுநோய் தாக்கும் என்று இன்று அறுதியிட்டு கூற முடியாது ஆனால்
இன்னும் 20, 25 ஆண்டுகள் கழித்து உறுதி செய்யப்படலாம். ஆனால் அதற்குள் இந்த
நோய்க்குள் நம்மில் பாதிபேர் சிக்கியிருப்போம் என கூறினார்.

சரியாக ஒரு மணி நேரம் பேசிய மருத்துவர் மிக அழகாக தலைப்பையொட்டி எந்த
குறிப்பும் இல்லாமல் சரளமாக நகைச்சுவையோடு சிந்திக்கவும் பல அருமையான
கருத்துகளை தரவுகளோடு வைத்தார். ஏற்கனவே அவருடைய காணொளிகளை
பார்த்திருந்தாலும் மிகவும் பயனளித்த உரை. என்னை போலவே கண்டிப்பாக நிறைய
பார்வையாளர்களிடையே அவரின் உரை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க
வேண்டும்.

ஒரே ஒரு விஷயம் சொல்ல வேண்டுமானால் ஓட்ஸ் பற்றிக்குறிப்பிடும் போதும்,
பழங்கள் குறித்து பேசும்போதும் அவர் குறிப்பிட்ட செய்திகள் சிங்கப்பூர் சூழலுக்கு
பொருந்தாது.

இரண்டாம் பகுதி
— — — — — — — — —

இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி
மாணவர்களுக்கு "தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்" என்ற தலைப்பில்
ஆய்வுபோட்டியை ஒன்றை நடத்தி அதிலிருந்து இறுதிச்சுற்றுக்கு சிறந்த நான்கு
ஆய்வை நிகழ்ச்சியில் படைக்கச் செய்தனர். மொத்தம் 60 மாணவர்கள் 38 குழுக்களாக
படைத்த ஆய்விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் படைப்புகளை
மேடையிலே படைத்தனர்.

முதலில் உயர்நிலைப் பள்ளிக்கான பிரிவில் இந்திய அனைத்துலகப்பள்ளியின்
மாணவி வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன் எள் குறித்து தன் ஆய்வை அருமையாக
படைத்தார். ஐம்புலன்களுக்கான சஞ்சீவினி 'எள்' என கூறிய அவர் அதை
புராணத்திலும், சங்க இலக்கியங்களிலும் எப்படி சொல்லியிருக்கிறார்கள் என
சான்றுடன் விளக்கினார்.

அடுத்து மண் மணம் மாறாத தமிழர்களின் உணவும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில்
தன் ஆய்வை படைத்த நார்த்தலான்ட் உயர்நிலையைப் பள்ளியை சேர்ந்த ரிஹானா
பேகம் மற்றும் ராகா இருவரும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்து விளக்கினர்.
அறுசுவைகள் கொண்ட உணவின் சிறப்பையும் பகிர்ந்து கொண்டார்கள்.

தொடக்கக்கல்லூரிக்கான பிரிவில் முதலில் செயிண்ட் ஆண்ட்ருஸ் தொடக்கக் கல்லூரி
குழுவைச் சேர்ந்த மீனலோச்சனி முத்துக்குமார் மற்றும் சிம்மரோஷினி மகேந்திரன்
தங்கள் ஆய்வுக் கட்டுரையை படைத்தனர். எந்த உணவு பிடிக்கும் என்று
இளையர்களிடம் நேரடியாக கேட்டறிந்து அதை பதிவு செய்து காணொளியாக
காண்பித்தனர். மஞ்சளின் மகிமையை குறித்தும் விளக்கினர். நகைச்சுவை கலந்து
தங்கள் ஆய்வை சிறப்பாக படைத்தனர்.

கடைசியாக தன் ஆய்வை படைத்த அண்டர்சன் தொடக்கக்கல்லூரியைச் சேர்ந்த
மாணவி பா நிருபமா நிலம் சார்ந்த உணவு குறித்து சொன்னது சிறப்பாக இருந்தது.

அனைத்து மாணவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை சிறப்பாக
பயன்படுத்தி நன்றாக படைத்தனர். நிறைய உழைத்திருந்தது அவர்கள் படைப்பில்
தெரிந்தது.
இவர்களின் படைப்பை பார்த்துவிட்டு, மருத்துவர் சிவராமன் தான் 25 நாடுகளுக்கு
சென்று வந்தாலும் சிங்கையிலதான் முதன் முதலாக மாணவர்கள் தமிழர் பாரம்பரிய
உணவு குறித்து மிக அழகாக பேசி பார்க்கிறேன் என்றார்.

இந்த போட்டியில் இந்திய அனைத்துலகப்பள்ளியின் மாணவி
வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன் உயர்நிலைப் பள்ளிக்கான பிரிவில் முதல் பரிசு
வென்றார். செயிண்ட் ஆண்ட்ருஸ் தொடக்கக் கல்லூரி குழுவைச் சேர்ந்த
மீனலோச்சனி முத்துக்குமார் மற்றும் சிம்மரோஷினி மகேந்திரன் தொடக்கல்லூரி
பிரிவில் முதல் பரிசை வென்றனர். என்ன பரிசு என்று அறிவிக்கவில்லை.

முன்னதாக 'வாழ்க தமிழ்மொழி..' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி
தொடங்கியது.

அடுத்து வரவேற்புரையாற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்
மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு அன்பழகன் இளங்கோவன் தனது உரையில்
தங்கள் அமைப்பு நான்காவது ஆண்டாக தமிழ்மொழி விழாவில் கலந்து
கொள்வதாகும், மாணவர்களை ஊக்குவிக்கும் பணிகள் குறித்தும் மற்ற சமூக பணிகள்
குறித்தும் குறிப்பிட்டார். தலைவர் உரையின் போது அந்த 'பவர்பாய்ன்ட்
ஸ்லைட்களை' தவிர்த்து
கொஞ்சம் வேகமாக, சுருக்கமாக பேசியிருக்கலாமோ என தோன்றியது.

அமைப்பின் பணிகள் குறித்த காணொளி காண்பிக்கப்பட்டது. சிங்கப்பூரில் 1998ல்
தொடங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்
தற்போது 750 உறுப்பினர்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புரவலர்கள் சிறப்பு செய்யப்பட்டனர். கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும்,
மாணவர்களுக்கும், நடுவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆனால் பெற
வருகிறன்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மேடையில் வந்து என்ன
செய்யவேண்டும் என தெரியாமல் அங்குமிங்கும் நடந்தார்கள். இதை
ஏற்பாட்டாளர்கள் தவிர்த்திருக்கலாம். மேலும், நடுவர்களுக்கு நினைவு பரிசு
கொடுப்பதிலும் குளறுபடி. போன ஆண்டு அவ்வாறு இல்லை. அடுத்த ஆண்டு சரி
செய்யப்படும் என நம்பலாம்.

தனது நன்றியுரையில் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த
அனைவருக்கும் நன்றி தெரிவித்த செயலாளர் திரு ராமதாஸ் சங்கர் கொஞ்சம்
மாறுபட்டு மேடைக்கு மத்தியில் வந்து குனிந்து, வணங்கி நன்றி தெரிவித்தார்.

கடந்தாண்டு போட்டியில் கவிஞர் ந வீ விசயபாரதி அண்ணனின் "தனி வழி" என்ற
கவிதை நூலை ஆய்வு செய்து, முதல் பரிசை தட்டிச் சென்ற செல்வி தக்‌ஷிதா கவிஞர்
தங்கமணியுடன் இணந்து நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
இந்த மாதிரியான முன்னெடுப்புதான் முக்கியமானது. கடந்தாண்டு பரிசு பெற்றவரை
மறவாமல் இந்தாண்டு நல்லதொரு வாய்ப்பு கொடுத்து இளையர்களை தொடர்ந்து
ஊக்குவிப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

நிகழ்ச்சிக்கு முன் திரிகடுகம் பானம்(சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்தது), ராகி பக்கோடா,
காராமணி சுண்டல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின் அனைவருக்கும் கடலை
மிட்டாய் கொடுக்கப்பட்டது(இது கேள்விப்பட்டது, எனக்கு கிடைக்கவில்லை:)). இது
ஒரு நல்ல முன்னெடுப்பு. கடந்த ஆண்டும் நம் தமிழ் உணவுகள் வழங்கப்பட்டது.
என்ன, இந்த முறை உணவிருந்தது ஆனா தட்டு இல்லாமல் நான் உட்பட சிலர்
சாப்பிடவில்லை.

நாம் தொடர்ந்து இளைஞர்களுக்கு சிறந்த உணவின் முக்கியத்துவத்தை
வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு தமிழ் அமைப்புகள் தங்களால்
முடிந்ததை செய்யலாம். அரசாங்கமும் இதில் கவனம் செலுத்துகிறது என்பது
மகிழ்ச்சியான செய்தி.

கடந்தமுறை மின்மரபுடைமைத் திட்டத்தின் கீழ் மின்மயமாக்கப்பட்ட நூல்களில்
சிலவற்றை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்வதற்கு மாணவர்களிடையே போட்டி
வைத்தனர். இந்தாண்டு தமிழர் பாராம்பரிய உணவு குறித்து மாணவர்களிடையே
ஆய்வு போட்டி வைத்ததனர். இது வரவேற்கத்தக்கது. அதையொட்டியே அமைந்த
சிறப்பு பேச்சாளர் மருத்துவர் கு சிவராமன் அவர்களின் பேச்சு மிகச்சிறப்பு. அறுபது
மாணவர்களே ஆனாலும் மாணவர்களுக்காக/இளையர்களுக்காக ஆக்கப்பூர்வமாக
நடக்கும் ஒரு சில நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இந்த அளவு மாணவர்களை ஒவ்வொரு
ஆண்டும் ஆய்வுக்கு பழக்கப்படுத்தி விட்டால் போதும். வருங்காலத்தில் ஒரு
குறிப்பிட்ட அளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும்
எனது பாராட்டுக்கள்.

கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக நிகழ்ச்சி குறித்து போட்ட பதிவு:)

#தமிழ்மொழி_விழா_2016அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய தமிழ்…

Posted by Tam Shanmugam on Monday, April 25, 2016

#தமிழ்மொழி_விழா_2017
#தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_பின்னோட்டம்
#தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம்