இந்த ஆண்டு தமிழ்மொழி விழா வரும் வார இறுதியில் தொடங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக ஏப்ரல் 1ம் தேதி, சனிக்கிழமை காலை மணி 10க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை வழங்கும் “யுத்தம் 2017” நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இது முற்றிலும் மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி. எட்டு தொடக்கக் கல்லூரி, எட்டு உயர்நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் முற்றிலும் மாறுபட்ட சொல்வளம் பெருக்கும் விளையாட்டு நிகழ்ச்சி. தமிழ் புழக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் பல சுற்றுகளாக தொழில்நுட்ப உதவியுடன் புதிர் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பம்சமாக நகைச்சுவை சுற்றும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்துமே மாணவர்களிடம் பேச்சுத்தமிழை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரம் போவதே தெரியமால் விறுவிறுப்பாக நடைபெறும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த ஆண்டு வேறு ஒரு நிகழ்ச்சி இருந்ததால் மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் இருந்தனர். இந்த ஆண்டு அதே நேரத்தில் வேறு நிகழ்ச்சி இல்லை, இதுவே முதல் நிகழ்ச்சி, அதோடு உமறுப்புலவர் அரங்கில் நடைபெறுவதால் பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சீக்கிரமே வந்து இருக்கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். #தமிழ்மொழி_விழா_2017 #தமிழ்மொழி_விழா_2017_நிகழ்ச்சி_முன்னோட்டம் #தமிழைநேசிப்போம்_தமிழில்பேசுவோம் https://www.facebook.com/NUSTLS/posts/813465038809483:0

Leave a Comment