இன்று ‘தேடல்’ இரண்டாமாண்டு நிறைவு விழாவினையொட்டி நடைப்பெற்ற பொங்கல் நிகழ்ச்சி ஒரு திருமண நிகழ்வுக்கு நண்பர்களோடும், உறவுகளோடும் போய் வந்த ஒரு மன நிறைவை தந்தது. பொங்கல் பொங்கியது, உறி அடிப்பது, மாணவர்களுக்கான போட்டிகள், சிறப்பு பட்டிமன்றம் என களைக் கட்டியது. அருமையான சாப்பாடு. அழகா உட்கார வைத்து அன்பாய் பரிமாறிய விதம், நீண்ட நாட்களுக்கு பிறகு வடை பாயாசத்தோடு பாராம்பரிய கல்யாண சாப்பாடு சாப்பிட்ட மாதிரி ஒரு மகிழ்ச்சி. இதுவரை இந்த மாதிரி வாழை இலைச் சாப்பாடு எந்த சமூக மன்றம் நிகழ்ச்சியிலும் சமீபத்தில் நான் பார்த்ததில்லை. அவ்வளவு பெருமையும் நிஜாமுக்கு போய் சேரும். அருமையான தலைமைத்துவம் நல்ல செயல் வீரர்கள் கொண்ட குழு. அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி🙏🙏🙏