நாளை நமோ நாட்டுமக்களுக்கு உரை

புத்தாண்டு 
—————-

“வெற்றி! வெற்றி!” என
ஒலிபெருக்கியில் முழங்குவார்
பல புள்ளி விவரங்கள்
அள்ளிக் கொட்டுவார்
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் நடந்தது என்பார்
புத்தாண்டில் புது பாரதம்
பிறந்தது என அறிவிப்பார்!

கேட்ட கேள்விகளுக்கு
பதில் சொல்ல மாட்டார்
எதிர்கட்சியினரை
எள்ளி நகையாடுவார்
கறுப்பெல்லாம் வெள்ளையானதென
கட்டுக் கதை கட்டுவார்
பஞ்சு டயலாக்கு பல
பளிச்சுனு எடுத்து விடுவார்!

பக்தாள்ஸ் எல்லாரும்
பல்லிளித்து கைத்தட்டுவர்
வாட்ஸப்பில் நம் காசில்
விளம்பரம் செய்வர்
ஊடகத்தில் உண்மை தவிர
மீதி எல்லாம் உளறுவர்
பல பொருளாதர மேதைகள்
புதுசாய் கிளம்புவர்!

Leave a Comment