அம்மாவின்_தீபாவளி

(இன்னிசை பஃறொடை வெண்பா)

விடியுமுன் கண்விழித்து வேலை முடித்து
துடிப்பான பிள்ளைகளின் தூக்கம் கலைத்து
வடிவான மன்னவனை வாவென் றழைத்து
பிடிவாத வாண்டை பிடித்தெண்ணெய் தேய்த்து
மடித்தபுத்தா டைகளில் மஞ்சளும் வைத்து
படிப்படியாய் பல்சுவைப் பண்டம் படைத்து
முடிநரைத்த மூத்தோரின் முத்தாசி பெற்று
வெடிகளும் மத்தாப்பும் வீதியில் மின்ன
நெடியசுற் றத்தார் நெகிழ்ந்துகொண் டாட
புடிகையிலெ டுத்த புதுத்துணியு டுத்த
அடியோ(டு) அவள்மறந்தா ளே!

*புடிகை = ஏலம்

Leave a Comment