பட்டுக்கோட்டையாரின் நினைவு தினம்

“……..காயும் ஒரு நாள் கனியாகும்
நம் கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்
நம் கனவும் நினைவும் நிலையாகும்
உடல் வாடினாலும் பசி மீறினாலும்
வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்

செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி
கொண்ட கடமைதான் நமக்குப் பதவி
….”

என்று சொன்ன பட்டுக்கோட்டையாரின் நினைவு தினம் இன்று சிங்கையில் கொண்டாடப்பட்டது.

ஓரிரு வாரங்கள் மனைவி மக்களை பிரிந்திருந்தாலே சிரமப்படும் பலருக்கிடையே தங்களின் மனைவி மக்கள் ஊரில் இருக்க தனியொருவனாய் தினமும் பல மணி நேர உழைப்பிற்கு பிறகு கிடைக்கும் ஒரு நாள் வார இறுதி ஓய்வைக்கூட தமிழுக்காக ஒதுக்குகிறார்கள் நம் வெளிநாட்டு தொழிலாள நண்பர்கள்.

ஒரு சில காரணங்களுக்காக, பொதுவாகச் சிங்கப்பூரர்களுக்கும், நிரந்திரவாசிகளுக்கும் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடக்கும் தமிழ் இலக்கிய போட்டிகளுக்கிடையே நம் வெளிநாட்டு நண்பர்களுக்குத் தனித்துவமாகத் தமிழில் கட்டுரை போட்டி நடத்திய மக்கள் கவிஞர் மன்றத்துக்கும் இணைந்து நடத்திய தமிழ் முரசு நாளிதழுக்கும் எனது பாராட்டுகள். இந்தப் போட்டியில் பங்கு பெற்ற 238 பேரில் வெற்றி பெற்ற 50 பேருக்கு மடிக்கணினி பரிசாகக் கொடுக்கப்பட்டது. அதை கொடுக்க உதவிய புரவலர்களுக்கு நன்றி.

தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி அதன் தொடர்பிலேயே இந்த போட்டிக்கான தலைப்பு ‘சிங்கையில் வேலையிடப் பாதுகாப்பு இன்னும் மேம்பட எனக்குத் தோன்றும் வழிகள்’ என்று கொடுக்கப்பட்டிருந்தது சிறப்பு. அந்தப் போட்டியில் நம் நண்பர்கள் Karuna Karasuசும் யாழிசை மணிவண்ணன்னும் சிறப்பாக கட்டுரை எழுதி வெற்றி பெற்றதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நண்பர்களுக்கு வாழ்த்துகள் 💐💐

Leave a Comment