“….ஹார்பர் போர்டு தன் இந்தியத் தொழிலாளர்களுக்காக நடத்திய உணவுக் கூடத்திற்குச் சென்று உணவு கேட்டுக் கெஞ்சினேன்………”தொழிலாளர்கள் மட்டும்தான் சாப்பிடலாம்,நீ இங்கே சாப்பிட முடியாது,” ஒரு வாய்ச் சோறு கூடக் கொடுக்க அவர்கள் மறுத்து விட்டனர். நடந்ததை எல்லாம் ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் நான் கண்ணீருடன் இருப்பதைப் பார்த்து என்னிடம் வந்து கேட்டார், “ஏன் சாப்பாட்டுக்குப் பிச்சை எடுக்கிறாய்?” நான் வீட்டிலிருந்து ஓடி வந்துவிட்டேன் என்பதையோ எதற்காக ஓடிவந்தேன் என்பதையோ சொல்லவில்லை. இருந்தாலும்,”எனக்கு பசிக்கிறது. சாப்பிடுவதற்கு எனக்கு ஏதாவது வேணும்” என்றேன். அவர் தனக்கென வாங்கின உணவை என்னிடம் தந்தார். குடிக்கக் கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தார். அந்த உணவு மிகவும் ருசியாக இருந்தது. நான் எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தேன். அதன் பிறகு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு தற்காலிக அறை. தஞ்சோங் பகாரில் 34 செங் சியோக் ஸ்ட்ரீட்டின் பின்புறம் அது அமைந்திருந்தது. அவர் அங்கு உள்வாடகைக்குக் குடியிருந்தார். அவர் என்னிடம் ஒரு கைலியையும் சோப்பையும் கொடுத்துக் குளித்துவிட்டு நான் அணிந்திருந்த ஆடையைத் துவைக்கச் சொன்னார். நான் ஒரு நாள் ஓர் இரவு முழுவதும் தூங்கியிருப்பேன். நான் எழுந்து புத்துணர்வு பெற்றவுடன், அவரிடம் என் கதையைச் சொல்லி, நான் அவரோடு இருக்கலாமா என்று கேட்டேன். நான் வீட்டுக்குப் போக விரும்பவில்லை என்று அவரிடம் சொன்னதுடன் அப்படியே அவர் என்னை வீட்டுக்கு அனுப்பினால் மீண்டும் ஓடிவிடுவேன் என்று கூறினேன். இறுதியில் அவர், “சரி, நான் உனக்கு உதவி செய்கிறேன்” என்றார். அவரின் பெயர் பாவாடை. ….ஆர்பென்ஸ் கம்பெனி என்றும் ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்றில் எனக்கு அவர் அலுவலகப் பையனாக வேலை வாங்கித் தந்தார்….. காலை நேரத்தில் முதலில் நான் அலுவலகத்திற்குள் சென்று அறையில் உள்ள தூசியைத் தட்டுவேன். தரையைக் கூட்டுவேன், குப்பையை வெளியில் கொண்டு போய்ப் போடுவேன்……..என்னிடம் பணம் இல்லாததால், என் மதிய உணவிற்காக பாவாடை ஒவ்வொரு நாளும் எனக்கு 20 காசு கொடுப்பார்….என் முதல் மாதச் சம்பளத்தைப், பத்து வெள்ளி என்று நினைக்கிறேன், பெற்றுக் கொண்டேன். நான் அதை அப்படியே பாவாடையிடம் கொடுத்து விட்டேன். அதைப் பயன்படுத்தி வேலைக்கு அணிந்து செல்ல அவர் எனக்கு இரண்டு முழுக்கால் சட்டைகளையும் இரண்டு சட்டைகளையும் வாங்கிக்கொடுத்தார்….” —–மேல உள்ள வரிகள் 2014ல் திரு ஆ பழனியப்பன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட “உழைப்பின் உயர்வு” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அந்த வரிகள் திரு எஸ் ஆர் நாதனின் “An Unexpected Journey- Path to the Presidency” என்ற ஆங்கில புத்தகத்தில் திரு எஸ் ஆர் நாதன் தன் ஆரம்பக்கால வாழ்க்கை பயணத்தை பற்றி #உழைப்பின்_உயர்வு #அஞ்சலி_திரு_எஸ்_ஆர்_நாதன்