கவிதைனாலே காதலிருக்கும்.

கவிதைனாலே காதலிருக்கும். கண்ணன் என்றாலும் காதலிருக்கும். அப்ப கண்ணனும் கவிதையும் சேர்ந்தா டபுள் காதல்தான். அதாங்க நம்ம காதல் கவிஞன் கண்ணன்னோட இரண்டாவது புத்தகம் ‘அடம்செய விரும்பு’ முழுக்க முழுக்க காதல் கவிதைகளை மட்டுமே சுமந்து வருது. இதோட கரு ,காதலில் வரும் ஊடல். இதோட சேர்ந்து இன்னும் இரண்டு தலைப்புகளையும் கொடுத்து எது நல்லாயிருக்குனு எங்க நட்பு வட்டத்தில அவர் கேட்டப்ப ,நாங்களெல்லாம் இந்த தலைப்பு நல்லாயிருக்குனு சொன்னோம். ஏன் இந்த தலைப்புனு அவர் நாளை நடக்கவிருக்கும் நூல் அறிமுக விழாவுல சொல்வார். அது குறித்த செய்தி கடைசியில இருக்கு அதனால கடைசி வரை படிங்க இல்ல கடைசி வரியையாவது படிங்க. இரண்டு நாள் முன்னாடிதான கிருஷ்ண ஜெயந்தி முடிஞ்சுச்சு. நாளைக்கு காதல் ஜெயந்தி வருது. இரண்டுமே கண்ணனுக்கு சொந்தமானது. ஆமாம் இந்த நூல்ல காதல் ஜெயந்தினு ஒரு கவிதை எழுதியிருக்காரு. இன்றென்ன காதல் ஜெயந்தியா என் வீடெங்கும் உன் கால் தடங்கள் இப்படி இந்த புத்தகம் முழுதும் சின்ன சின்னதாக அழகான கவிதைகள் நம்மை கவர்ந்திழுக்கும். “எப்போதும் போல் இயல்பாகப் பேசிச்சிரிக்கும் தோழிகள் தோழிகளாகவே இருக்கின்றனர் அதைக்கண்டு சிறு கோபம் கொள்ளும் நீ காதலியாகிக் கொண்டிருக்கிறாய்” என்று ஒரு கவிதை. நமக்கேன் இதை எழுத தோனலை அப்படினு யோசிக்க வைத்த கவிதை இது. ஏன்னு கேட்கப்புடாது. கண்ணனுடைய கவிதைகள் எல்லாம் பெரும்பாலும் குறைவான வரிகளுடனும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருக்கும். கவிதைங்கிற பேர்ல சிலர் கட்டுரைகளையும், இன்னும் சிலர் நவீனங்கற பேர்ல புரியாத புதிர்களையும், சிலர் படத்தோட வெறும் வார்த்தைகளை வைத்து சித்து காட்டும் வேலைகளையும், இன்னும் சிலர் முகநூலில் தினமும் எதையாவது போடனும்னு வெறியா கவிதைங்கிற பேர்ல 10 பதிவுகளை போட்டு நம்மள கொல்ல அத சிலர் அருமை அருமை என்று பாராட்ட, ஏன்டா முகநூலுக்கு வந்தோம்னு நினைக்கிற சமயத்தில இவரோட காதல் கவிதைகள் நம் மனதை குளிர்விக்கும். கண்ணன் காதல் கவிதைகள் மட்டுந்தான் எழுதுவார்னு பலர் நினைச்சிகிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அவர் முதல் புத்தகமான ‘கண் கொத்திப் பறவை’யில் வரதட்சணை,பசி, பெண்ணியம் இப்படி சில கவிதைகள் எழுதியிருக்கிறார். புதுக்கவிதைகள் மட்டுமல்ல மரபுலேயும் வெளுத்து வாங்குவார். கடந்தாண்டு சிங்கை பொன்விழா கொண்டாடங்கள் போது,எங்கள் ஆசான் கருணாகரசின் முயற்சியின் பேரில் நாங்க ஒரு பத்து பேர் பல கவிதைகள் எழுதினோம். அதில் கண்ணன் சிங்கையின் வரலாற்றை ரொம்ப அழகா ஒரு கவிதையில சொல்லியிருப்பார். நாளை மாலை அவரோட “அடம்செய விரும்பு” நூல் அறிமுக விழாவுக்கு கண்டிப்பாக அனைவரும் வாங்க. நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 28, 2016, இடம்: ஆனந்தபவன் உணவகம், தளம் இரண்டு(முஸ்தபா சென்டர் எதிரில்) நேரம் : மாலை 7 மணி

கவிதைனாலே காதலிருக்கும். கண்ணன் என்றாலும் காதலிருக்கும். அப்ப கண்ணனும் கவிதையும் சேர்ந்தா டபுள் காதல்தான். அதாங்க நம்ம காதல் கவிஞன் கண்ணன்னோட இரண்டாவது புத்தகம் ‘அடம்செய விரும்பு’ முழுக்க முழுக்க காதல் கவிதைகளை மட்டுமே சுமந்து வருது. இதோட கரு ,காதலில் வரும் ஊடல். இதோட சேர்ந்து இன்னும் இரண்டு தலைப்புகளையும் கொடுத்து எது நல்லாயிருக்குனு எங்க நட்பு வட்டத்தில அவர் கேட்டப்ப ,நாங்களெல்லாம் இந்த தலைப்பு நல்லாயிருக்குனு சொன்னோம். ஏன் இந்த தலைப்புனு அவர் நாளை நடக்கவிருக்கும் நூல் அறிமுக விழாவுல சொல்வார். அது குறித்த செய்தி கடைசியில இருக்கு அதனால கடைசி வரை படிங்க இல்ல கடைசி வரியையாவது படிங்க.

இரண்டு நாள் முன்னாடிதான கிருஷ்ண ஜெயந்தி முடிஞ்சுச்சு. நாளைக்கு காதல் ஜெயந்தி வருது. இரண்டுமே கண்ணனுக்கு சொந்தமானது. ஆமாம் இந்த நூல்ல காதல் ஜெயந்தினு ஒரு கவிதை எழுதியிருக்காரு.

இன்றென்ன
காதல் ஜெயந்தியா

என்
வீடெங்கும்

உன்
கால் தடங்கள்

இப்படி இந்த புத்தகம் முழுதும் சின்ன சின்னதாக அழகான கவிதைகள் நம்மை கவர்ந்திழுக்கும்.

“எப்போதும் போல்
இயல்பாகப் பேசிச்சிரிக்கும்
தோழிகள்
தோழிகளாகவே இருக்கின்றனர்
அதைக்கண்டு
சிறு கோபம் கொள்ளும்
நீ
காதலியாகிக் கொண்டிருக்கிறாய்”

என்று ஒரு கவிதை. நமக்கேன் இதை எழுத தோனலை அப்படினு யோசிக்க வைத்த கவிதை இது. ஏன்னு கேட்கப்புடாது.

கண்ணனுடைய கவிதைகள் எல்லாம் பெரும்பாலும் குறைவான வரிகளுடனும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் இருக்கும். கவிதைங்கிற பேர்ல சிலர் கட்டுரைகளையும், இன்னும் சிலர் நவீனங்கற பேர்ல புரியாத புதிர்களையும், சிலர் படத்தோட வெறும் வார்த்தைகளை வைத்து சித்து காட்டும் வேலைகளையும், இன்னும் சிலர் முகநூலில் தினமும் எதையாவது போடனும்னு வெறியா கவிதைங்கிற பேர்ல 10 பதிவுகளை போட்டு நம்மள கொல்ல அத சிலர் அருமை அருமை என்று பாராட்ட, ஏன்டா முகநூலுக்கு வந்தோம்னு நினைக்கிற சமயத்தில இவரோட காதல் கவிதைகள் நம் மனதை குளிர்விக்கும்.

கண்ணன் காதல் கவிதைகள் மட்டுந்தான் எழுதுவார்னு பலர் நினைச்சிகிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அவர் முதல் புத்தகமான ‘கண் கொத்திப் பறவை’யில் வரதட்சணை,பசி, பெண்ணியம் இப்படி சில கவிதைகள் எழுதியிருக்கிறார். புதுக்கவிதைகள் மட்டுமல்ல மரபுலேயும் வெளுத்து வாங்குவார். கடந்தாண்டு சிங்கை பொன்விழா கொண்டாடங்கள் போது,எங்கள் ஆசான் கருணாகரசின் முயற்சியின் பேரில் நாங்க ஒரு பத்து பேர் பல கவிதைகள் எழுதினோம். அதில் கண்ணன் சிங்கையின் வரலாற்றை ரொம்ப அழகா ஒரு கவிதையில சொல்லியிருப்பார்.

நாளை மாலை அவரோட “அடம்செய விரும்பு” நூல் அறிமுக விழாவுக்கு கண்டிப்பாக அனைவரும் வாங்க.

நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்டு 28, 2016,
இடம்: ஆனந்தபவன் உணவகம், தளம் இரண்டு(முஸ்தபா சென்டர் எதிரில்)
நேரம் : மாலை 7 மணி

அஞ்சலி_திரு_எஸ்_ஆர்_நாதன்

“….ஹார்பர் போர்டு தன் இந்தியத் தொழிலாளர்களுக்காக நடத்திய உணவுக் கூடத்திற்குச் சென்று உணவு கேட்டுக் கெஞ்சினேன்………”தொழிலாளர்கள் மட்டும்தான் சாப்பிடலாம்,நீ இங்கே சாப்பிட முடியாது,” ஒரு வாய்ச் சோறு கூடக் கொடுக்க அவர்கள் மறுத்து விட்டனர். நடந்ததை எல்லாம் ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் நான் கண்ணீருடன் இருப்பதைப் பார்த்து என்னிடம் வந்து கேட்டார், “ஏன் சாப்பாட்டுக்குப் பிச்சை எடுக்கிறாய்?” நான் வீட்டிலிருந்து ஓடி வந்துவிட்டேன் என்பதையோ எதற்காக ஓடிவந்தேன் என்பதையோ சொல்லவில்லை. இருந்தாலும்,”எனக்கு பசிக்கிறது. சாப்பிடுவதற்கு எனக்கு ஏதாவது வேணும்” என்றேன். அவர் தனக்கென வாங்கின உணவை என்னிடம் தந்தார். குடிக்கக் கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தார். அந்த உணவு மிகவும் ருசியாக இருந்தது. நான் எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தேன். அதன் பிறகு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு தற்காலிக அறை. தஞ்சோங் பகாரில் 34 செங் சியோக் ஸ்ட்ரீட்டின் பின்புறம் அது அமைந்திருந்தது. அவர் அங்கு உள்வாடகைக்குக் குடியிருந்தார். அவர் என்னிடம் ஒரு கைலியையும் சோப்பையும் கொடுத்துக் குளித்துவிட்டு நான் அணிந்திருந்த ஆடையைத் துவைக்கச் சொன்னார். நான் ஒரு நாள் ஓர் இரவு முழுவதும் தூங்கியிருப்பேன். நான் எழுந்து புத்துணர்வு பெற்றவுடன், அவரிடம் என் கதையைச் சொல்லி, நான் அவரோடு இருக்கலாமா என்று கேட்டேன். நான் வீட்டுக்குப் போக விரும்பவில்லை என்று அவரிடம் சொன்னதுடன் அப்படியே அவர் என்னை வீட்டுக்கு அனுப்பினால் மீண்டும் ஓடிவிடுவேன் என்று கூறினேன். இறுதியில் அவர், “சரி, நான் உனக்கு உதவி செய்கிறேன்” என்றார். அவரின் பெயர் பாவாடை. ….ஆர்பென்ஸ் கம்பெனி என்றும் ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்றில் எனக்கு அவர் அலுவலகப் பையனாக வேலை வாங்கித் தந்தார்….. காலை நேரத்தில் முதலில் நான் அலுவலகத்திற்குள் சென்று அறையில் உள்ள தூசியைத் தட்டுவேன். தரையைக் கூட்டுவேன், குப்பையை வெளியில் கொண்டு போய்ப் போடுவேன்……..என்னிடம் பணம் இல்லாததால், என் மதிய உணவிற்காக பாவாடை ஒவ்வொரு நாளும் எனக்கு 20 காசு கொடுப்பார்….என் முதல் மாதச் சம்பளத்தைப், பத்து வெள்ளி என்று நினைக்கிறேன், பெற்றுக் கொண்டேன். நான் அதை அப்படியே பாவாடையிடம் கொடுத்து விட்டேன். அதைப் பயன்படுத்தி வேலைக்கு அணிந்து செல்ல அவர் எனக்கு இரண்டு முழுக்கால் சட்டைகளையும் இரண்டு சட்டைகளையும் வாங்கிக்கொடுத்தார்….” —–மேல உள்ள வரிகள் 2014ல் திரு ஆ பழனியப்பன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட “உழைப்பின் உயர்வு” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அந்த வரிகள் திரு எஸ் ஆர் நாதனின் “An Unexpected Journey- Path to the Presidency” என்ற ஆங்கில புத்தகத்தில் திரு எஸ் ஆர் நாதன் தன் ஆரம்பக்கால வாழ்க்கை பயணத்தை பற்றி #உழைப்பின்_உயர்வு #அஞ்சலி_திரு_எஸ்_ஆர்_நாதன்

எஸ்.ஆர்.நாதன் மறைவு

ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்தது. தன்னுடைய நிர்வாகத் திறமையால் சிங்கையின் முன்னேற்றத்தில் பெரிய பங்கு வகித்த முன்னாள் அதிபர் திரு எஸ்.ஆர்.நாதன் மறைவு சிங்கைக்கும், இந்திய சமூகத்துக்கும் பேரிழப்பு.

 

ஐரோப்பா பயணம்

#ஐரோப்பிய_அட்டகாசங்கள் ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு ———————— என்னடா இவ்வளவு நாளா ஷேக்ஸ்பியரின் வீட்டிற்குள்ள கூட்டிட்டு போகலையேனு கேக்குறீங்களா? புரியுது. அது ஒன்னுமில்லைங்க ஆடி மாசம் முத முதல்லா ஒரு வீட்டிற்கு போகக்கூடாதுனு சொல்வாங்க அதான்:) இப்ப ஆவணி வந்தாச்சு, உங்க வலது கால எடுத்து வச்சு வாங்க, உள்ளே போவோம். முதல்ல ஒரு பெரிய அழகிய தோட்டம். வாசலுக்கு போனவுடனே அந்த தோட்டத்து ரோஜாக்கள் நல்ல மணம் வீசுகின்றன. அங்க பக்கத்தில ஒரு பெண்மணி “பெயர் என்னவாயிருந்தா என்ன, நாம் எந்த பெயரில் அழைத்தாலும், அந்த ரோஜா இனிமையான மணம் வீசும் தானே” என்று ஒரு வாலிபனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அதோடு,”பிரிவென்பது இனிய துன்பம்” என்று சொல்ல, சுத்தி என்னை மாதிரி கொஞ்ச பேரு பார்த்துகிட்டு இருக்க பிறகு தான் புரிந்தது அவர்கள் இருவரும் ஷேக்ஸ்பியரின் “ரோமியோ ஜூலியட்” நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்களென்று. அங்கே சின்ன உயர்த்தப்பட்ட தளம், அதில அவங்க நின்னு நடிக்க, சுத்தி எல்லாரும் உட்கார்ந்து பார்க்க ஒரு குட்டி திறந்த வெளி நாடக அரங்கு அங்கே உள்ளது. அந்த ஜூலியட்டுடன் தான் நான் நின்று கொண்டிருந்தேன் முதன் முதலில் போட்ட படத்தில்(அப்பா ஒரு வழியா ஒரு படம் பத்திய உண்மைய சொல்லியாச்சு). அங்கு வேறு சில நடிகர்களும் அந்தக்கால உடையில், ஒப்பனைகளுடன் ஷேக்ஸ்பியரின் வரிகளுக்கு உயிர் கொடுக்கத் தயாராக இருந்தனர். நீங்கள் உங்கள் விருப்ப நாடகத்திலுள்ள காட்சியை சொன்னால் அதை நடித்துக் காண்பிப்பார்கள். சரி அவங்கள ரொம்ப தொந்தரவு செய்ய வேண்டாம்னு(என்ன கேக்கறதுன்னு தெரியல, அத தான் இப்படி நாகரீகமா சொல்லறேன்) அங்குள்ள ரோஜா தோட்டத்தை வலம் வந்தோம். ஒவ்வொரு ரோஜாவும் அவ்வளவு பெருசா இருக்கு. அந்த ஊர்ல ரோஜோவெல்லாம் காட்டுச் செடி மாதிரி தான் அங்கங்க வளர்ந்திருக்கு அதை யாரும் தலையிலையும் வச்சிக்கிறதல்ல சாமிக்கும் போடறதில்லை, ஆனா பார்க்க அழகழகா இருக்கு. அதனால்நான் பல ஆங்கில கவிதைகளில் இடம் பிடித்திருக்கு போல. ‘A rose is a rose is a rose’னு சும்மாவா சொன்னாங்க. அப்படியே சுத்திட்டு வெளியேயிருந்து ரோஜாவையும் வீட்டையும் படம் பிடிச்சிட்டு வீட்டு வாசல நோக்கி வந்தா தாடியோட நம்மூர்காரர் ஒருத்தர் சிலையாக இருந்தார். யாருடா இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சா, நம்ம ரபீந்தரநாத் தாகூர்ங்க. அவ்வளவு பெரிய வீட்டின் தோட்டத்தில் ரபீந்தரநாத் தாகூர் அவர்களின் மார்பளவுச் சிலை மட்டும் உள்ளதே வேறு எந்த ஒரு படைப்பாளியின் சிலையாவது அங்கு இருக்கானு பார்த்தா, இல்லைங்க. நம்ம குமாரு வேறு பக்கத்தில் இல்லை. இருந்திருந்தா கண்டிப்பா இந்த கேள்வியைக் கேட்டிருப்பார். அந்த வேலையை இன்னைக்கு நான் செஞ்சேன். அங்கிருந்தவரிடம் “ஏங்க, உலகத்தில எவ்வளவோ படைப்பாளிகள் இருக்காங்க, ஆனா ஷேக்ஸ்பியரின் வீட்டில், ஒரு இந்தியக் கவிஞரின் சிலை மட்டும் உள்ளது, வேறு யாரோட சிலையும் இல்லையே, என்ன காரணம்”னு கேக்க, அதற்கு அங்கிருந்தவர், “அதற்கு காரணம், தாகூர் அவர்கள் ஷேக்ஸ்பியரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். லண்டனில் படிக்கும் போது இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போனார்”னு கூறினார். அதுமட்டுமில்ல ஷேக்ஸ்பியர் இறந்து 300வது ஆண்டு(1916) அவரை பத்தி தாகூர் ஒரு கவிதை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் 400வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கொல்கத்தா கலைக் கழகம் அதை இந்த வீட்டில் ஒப்படைத்திருக்கிறது. சில ஆண்டுகள் கழித்து இங்கு அந்த கவிதையைப் பார்த்த பிரிட்டனுக்கான இந்திய ஹைகமிஷனர், மேற்கு வங்க அரசாங்கத்திடம் சொல்லி சிலை வைக்கும் எண்ணத்தை எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து பிறகு அப்போதைய முதல்வர் திரு ஜோதிபாசு அவர்களால் 1996ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தாகூர் அவர்களின் பிறந்தநாளன்று இங்கே பாட்டுக் கச்சேரியும் விருந்தும் நடக்குமாம். கலையையும், கலைஞர்களையும் ஊக்குவிப்பதிலும், மதிப்பிலும், அங்கீகரிப்பதிலும் மேற்குவங்க மக்களுக்கு இணை அவர்களே. உடனே ஏன் ஒரு திருவள்ளவர் சிலையோ, பாரதியார் சிலையோ அங்கு இல்லையென சிலருக்குத் தோன்றலாம். அது முக்கியமல்ல, அதை விட சிறப்பு நாம் பாரதியாருக்கோ திருவள்ளுவருக்கோ உலகம் போற்றும் நினைவு இல்லம்(தற்பொழுது இருப்பதை விட) அமைத்து, நன்கு பராமரித்து அதில் ஷேக்ஸ்பியரரின் உருவச்சிலையை வைக்கலாம். அது தான் நமக்கு பெருமை. சரி, ஷேக்ஸ்பியரின் வீட்டு அறைக்குள் வரும் வாரத்தில் செல்லலாம். அது வரை நான் ஏற்கனவே போட்ட மத்த இரண்டு படங்களை பத்தி யோசிங்க. எங்களுக்கு வேற வேலையில்லையானு கேக்கறது புரியது. சொல்றது என் கடமைல, அதான்:)