அம்மாவின் கடவுள்

கடிகார முள்ளை
மனத்தில் நகர்த்தி
நயனத்தின் ஓரத்தில்
ஏக்கத்தைத் தேக்கி
எண்ணத்தின் நடுவில்
நினைவுகளை நிறுத்தி
வேலைமுடிந்து வீடுவரும்
அம்மாக்களுக்கு,
மதங்களைக் கடந்த
கடவுள்,

எப்போதும் எண்ணிக்
கொண்டிருப்பதால்

பத்திரமாய்ப் பிள்ளைகளைப்
பார்த்துக் கொள்ளும்
பணிப் பெண்களே!

Leave a Comment