அம்மாவின் கடவுள்

கடிகார முள்ளை
மனத்தில் நகர்த்தி
நயனத்தின் ஓரத்தில்
ஏக்கத்தைத் தேக்கி
எண்ணத்தின் நடுவில்
நினைவுகளை நிறுத்தி
வேலைமுடிந்து வீடுவரும்
அம்மாக்களுக்கு,
மதங்களைக் கடந்த
கடவுள்,

எப்போதும் எண்ணிக்
கொண்டிருப்பதால்

பத்திரமாய்ப் பிள்ளைகளைப்
பார்த்துக் கொள்ளும்
பணிப் பெண்களே!

இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருது

#தமிழ்மொழி_விழா_2016

ஒரு நல்ல சந்திப்பு, ஒரு நல்ல நட்பு, ஒரு நல்ல கற்றல், ஒரு நல்ல முயற்சி, ஒரு நல்ல சிந்தனை, ஒரு நல்ல கவிதை இப்படி நம் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணும் அந்த ஒரு நல்ல நிகழ்வு எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் செய்ய வேண்டியது திறந்த மனத்துடன் அதை வரவேற்பதே. அப்படி நடந்த அந்த மாற்றம் இன்று எனக்கு இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருதை பெற்று தந்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த மாதம் ‘மகுடம்’ என்ற தலைப்பில் நடந்த கவிதை போட்டியிலும் முதல் பரிசு வாங்கியது, இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்று இளங்கவிஞர் விருது பெறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவான கவிஞர் கருணாகரசுக்கும், மரபு குறித்து சந்தேகங்களை அவ்வப்போது விளக்கம் தந்து உதவி புரிந்த கவிஞர் கி கோவிந்தராசுக்கும், மரபை ஆரம்பித்து வைத்த கவிஞர் பனசை நடராஜனுக்கும், எந்த பிழையையும் உடனே திருத்தி எனக்கு உதவி புரியும் கவிஞர் ராஜு ரமேஷுக்கும், என் கவிதைப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்த கவிஞர் இன்பாவுக்கும் மற்றும் மரபுக் கவிதை குழுவின் நண்பர்கள் கவிஞர் மதிகுமார், கவிஞர் ஹாஜா மொய்தீன், கவிஞர் கோ கண்ணன், கவிஞர் லலிதா சுந்தர், கவிமாலை நண்பர்கள் குழுவிற்கும், கவிமாலைக்கும் என் மனமார்ந்த நன்றி என் கவிதையை இரசித்து என்னை ஊக்கப்படுத்திய அத்தனை முகநூல் நண்பர்களுக்கும் என் நன்றி தங்கமுத்திரை விருதை வழங்குபவர் மலேசியாவின் இளையர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ எம் சரவணன்.