நேரிசை ஆசிரியப்பா

#SG50_தமிழ்மரபு #மரபுப்பாடல்

நேரிசை ஆசிரியப்பா!

நாடு உயர நைந்தே நம்மவர்
பாடு பட்டு பாங்காய் உழைத்தனர்
ஆட்சி கட்டிலில் அமர்ந்தது தமிழும்
மாட்சி பொருந்திய மகனார் முடிவால்
உற்ற மொழியை ஓதிட தயங்கோம்
மற்ற மொழிகளை மதித்து நடப்போம்
நல்வழி காட்டும் நம்மொழி தானே
சொல்லி கொடுக்கும் சுவையுடன் நெறியை
மொழியுடன் உறவு முறியா வண்ணம்
தொழிலுடன் அதனை தொடர்ந்து பயில்வோம்
செம்மொழி காக்கும் சிங்கை
நம்மவர் வாழ்வில் நாளும் உயர்வே!

Leave a Comment