பாராட்டு விழா

ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் உண்னமயான பாராட்டும் அங்கீகாரமும் அவன் படைப்பை முகம் தெரியாத ஒரு மனிதர் காசு கொடுத்து வாங்கி, படித்து, இரசித்து, எழுதும் ஒரு ஆக்கப்பூர்வமான பின்னூட்டமே ஆகும். அதுவும் ஒரு முனைவர் அதை செய்தால் அதை விட ஒரு சிறந்த பாராட்டு வேறு என்னவாக இருக்கு முடியும்! அதோடு நின்றுவிடாமல் அந்த படைப்பை முன்னிறுத்தி ஒரு திறனாய்வு கூட்டம் நடத்துவதும் அதில் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பல தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொள்வதும் அதுவும் அந்த படைப்பாளனுக்கே தெரியாமல் இந்த விழாவை ஏற்பாடு செய்ததும் ஒரு படைப்பாளனுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும். தன் படைப்பை வெளிச்சம் போட பல்வேறு வியாபார உத்திகளை கையாள வேண்டிய நிலையில் உள்ள இந்த காலக்கட்டத்தில் இப்படி எந்த ஒரு மெனகெடலும் இல்லாமல் ஒரு நிகழ்வு தமிழகத்தில் எங்கோ ஒரு பகுதியில் நடந்தாலும் இது பாராட்டுக்குரியதுதான்! இந்த மருதாணி கடைத்தெருவில் காசு கொடுத்து வாங்கி பூசிக்கொள்ளும் இரசாயன சாயம் அல்ல, நம்மை விரும்பும் உள்ளங்கள் ஆசையாய் நமக்குக் வைத்துவிடும் இயற்கை மூலிகை! இந்த மருதாணி மணக்கும் என்பது உறுதி! அந்த படைப்பாளன் சி கருணாகரசு க்கு எனது வாழ்த்துகள்! விழா அழைப்பை பகிர்ந்தமைக்கு நன்றி Thiyaga Ramesh , திரு Rathina Pugazhendi! Panasai Natarajan கோபால் கண்ணன் கடலூரான் ஹாஜா மொய்தீன் Raju Ramesh Govinda Raj Mathikumar Thayumanavan திரு முருகன் Thamizh Thendral Athiyan Arumugam Erode Kathir