காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!

எப்படி புரண்டு படுத்தாலும் என் தூக்கத்தை புரட்டி போடுகிறது உன் நினைவுகள்! இமைகள் மூடினேன் காட்சிகள் அகலவில்லை! தூங்க எண்ணினேன் எண்ணங்கள் விடவில்லை! கட்டிலின்மேல் கிடந்தேன் கனவுகள் வேலையில்லா பட்டதாரியானது! பொழுது புலர்ந்தது படுக்கை பிடிக்கவில்லை! உறங்கினால் தானே விழிப்பதற்கு, உன் முப்பரிமான நிழல் முன்னே ஊஞ்சாலடியது! தூக்கம் தொலைந்து போனது! தாக்கம் எஞ்சி நின்றது! ஏக்கம் ஏனோ கொன்றது! என்னை மீட்க உன்னை தேடுகின்றேன்! #காதலுக்கு_ஏது_தினம்_தேவை_மனம்!

Leave a Comment